Sunday, November 17, 2013

தனுஷை காதலிக்கப் போகும் காஜல்

காஜல் அகர்வால் தனுஷுடன் ஜோடி சேர்கிறார்!

காஜல் அகர்வால் தற்போது கோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஜய், சூர்யா, கமல் என்று பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.
விஜய் மற்றும் கார்த்தியுடன் அவர் இரண்டு முறை ஜோடி சேர்ந்துவிட்டார். இந்நிலையில் அடுத்ததாக அவர் தனுஷின் நாயகி ஆகிறார். தனுஷ் வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வேங்கை சாமி படத்தில் நடிக்கிறார்.
அதை முடித்த பிறகு தன்னை வைத்து படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் தான் தனுஷுக்கு காஜல் அகர்வால் ஜோடியாம்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகின. அதன் அர்த்தம் தற்போது புரிந்துள்ளது. தனுஷும் காஜலும் முதன்முறையாக ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நிலநடுக்கத்தை பார்த்தும் அசராத ஜில்லா குழு!!!


ஜில்லா படக்குழு பாடல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றபோது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வேலை செய்துள்ளனர்.
ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை படமாக்க விஜய், காஜல் உள்ளிட்ட படக்குழு ஜப்பான் சென்றது.
அந்த நேரம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த ஆர்.பி. சௌத்ரி படக்குழுவினரை உடனே ஊர் திரும்புமாறு கூறினார். ஆனால் ஜப்பானில் குறிப்பிட்ட சீசனில் பாடல் காட்சியை படமாக்க வேண்டும் என்று நினைத்து சென்ற படக்குழு ஊர் திரும்ப மறுத்துவிட்டது.
இதையடுத்து தாங்கள் நினைத்தபடி பாடல் காட்சியை படமாக்கிவிட்டது தான் ஊர் திரும்பியுள்னர். படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, November 4, 2013

டீச்சர் குளித்ததை படம் பிடித்த இளைஞர்.. பழனி அருகே சில்மிஷம்!


பழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சந்தியா. 21 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்தார்.
குடிசை ஓலையாலான அந்த குளியறைக்கு மேற்கூரை இல்லை. இதைப் பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் ஓலை இடைவெளி வழியாக தனது செல்போன் மூலம் வீடியோவில் எடுத்தார்.
இதை சந்தியா பார்த்து விட்டு அலறினார். உடனடியாகஅக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மணிகண்டன் அவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டு தர்ம அடி வாங்கினார். அவரை போலீஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
ஆயக்குடி போலீசார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Short story in English

An youth was arrested after he videographed a bathing teacher near Palani.
The Bangladesh government approved its first-ever anti-porn law today that carries a maximum 10-year sentence for the production, preservation, marketing, carrying, distribution, sale and display of any form of porn.
The proposed Pornography Control Act-2011 was given the green light at a weekly cabinet meeting headed by Prime Minister Sheikh Hasina Wazed in an effort to stem what the majority Muslim country feels is a mounting social problem.
Under the law, porn is being defined as videos and photography featuring erotic poses, acting, gestures and half-naked dances.
Books and magazines containing sexually stimulating content as well as sculptures and leaflets are also targeted.
According to reports, violators could be slapped with the maximum 10-year jail sentence for any porn involving children.
Any other objectionable content would carry a 7-year jail term and $2,440 fine. Porn that’s distributed through websites or mobile devices would impose a maximum 5-year sentence and a $2,440 fine.
The proposed law stated in its introduction, “A law is badly needed to prevent the decay of moral and social values as demonstration of pornography is responsible to many extents for social disturbances and criminal activities.”
The draft is set to go before the Bangladeshi parliament for debate by the end of January.

இன்டர்நெட்டில் உலா வரும் வால்பாறை பெண்களின் ஆபாச படங்கள்!!


கோவையை அடுத்து அமைந்துள்ள வால்பாறையைச் சேர்ந்த சில பெண்களின் ஆபாசப் படங்கள் இண்டர்நெட்டில் வெளியாவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வால்பாறை மின்சார வாரிய என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் செக்ஸ் லீலை படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த படங்கள் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னால் வால்பாறை பகுதி பெண்களை மேலும் ஒரு ஆபாச பட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வால்பாறையை சேர்ந்த சில பெண்களின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. அவற்றை இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து நண்பர்களிடையே பரிமாறி வருகிறார்கள். இதனால் இதை ஏராளமான பேர் பார்த்துள்ளனர். இந்த படத்தில் உள்ள பெண்கள் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இன்னும் சிலர் அந்த ஆபாச படத்தில் இருப்பது அந்த பகுதியை சேர்ந்த கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் என்றும் பிரபலமான பெண்கள் என்றும் அடையாளம் காட்டுகிறார்கள். இதனால் இந்தத் தகவல் வால்பாறை முழுவதும் காட்டூத்தீயைப் போல பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Short story in English

vaalparai womens get involved in internet site porno pictures. This incident create panic vaalparai womens.

‘மேக்கப் ரூமில்’ நடிகையை மிரட்டி கற்பழித்த புரொடக்‌ஷன் மேனேஜர் மும்பையில் கைது!


மும்பை போனவப் பகுதியில் உள்ள காதர்சிங் ஸ்டூடியோவில் கடந்த மாதம் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்பு நடந்தது. அதில் பங்கேற்ற 28 வயது நடிகை ஒருவர் தன்னை தொடர் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவர் மிரட்டி கற்பழித்துவிட்டதாக போனவ போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகார் மனுவில் அந்த நடிகை கூறி இருப்பதாவது:-
கடந்த மாதம் 2-ந்தேதி அந்த தயாரிப்பு நிர்வாகி அதிகாலை 6.30 மணிக்கு போன் செய்தார். 7.45 மணிக்கு ஷூட்டிங் உள்ளது என்றார். உடனே நான் புறப்பட்டு சென்றேன். 2-ம் நம்பர் மேக்கப் அறைக்குள் சென்று நான் உடை மாற்றி கொண்டிருந்தேன். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த தயாரிப்பு நிர்வாகி என்னை சிறிய அறைக்குள் அடைத்து மிரட்டி கற்பழித்தார்.
இதை வெளியில் சொன்னால் என் மகளை கொன்று விடுவதாக மிரட்டினார். அவரது மிரட்டல் நீடித்ததால் இப்போது புகார் செய்கிறேன். இவ்வாறு அந்த நடிகை கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த தயாரிப்பு நிர்வாகியை காவல்துறை சீனியர் இன்ஸ்பெக்டர் போஜிராவ் போஸ்லே கைது செய்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 342, 376, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தன் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டை அந்த தயாரிப்பு நிர்வாகி மறுத்துள்ளார். விளம்பரத்துக்காக அந்த நடிகை பொய் சொல்வதாக கூறியுள்ளார்.

குலதெய்வ வழிபாடு அவசியமா? எப்படி வழிபடுவது?



குல தெய்வம் என்பது, உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும் . அல்லது உங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பற்றியவராய் கூட இருக்கலாம்.
எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு, ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் அதை மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.
உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும். ஒருவேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்துகொண்டிருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரியபணத்தை மணி ஆர்டர் அனுப்பிவிடுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர்,நட்சத்திரம்,ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள்(பல இடங்களில் இதை நடைமுறையாகவே வைத்திருக்கின்றார்கள்). நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.
மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும், குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.
ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்ட பின்னரே அந்தச் செயலில் இறங்க வேண்டும்.
ஒருவருக்கு குலதெய்வம் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பத்ரகாளி அம்மன் என வைத்துக் கொள்வோம். அவர் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தனது குல தெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சென்னையில் இருக்கும் வடிவுடை அம்மனுக்கோ, காளிகாம்பாளுக்கோ செய்துவிட்டால், அது குலதெய்வத்தைப் போய்ச்சேராது.
ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால், இந்த நிலை.எனவே, தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும்.

பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசம்: தலைமை ஆசிரியர் சஸ்பென்ட்




வால்பாறை: அரசுப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் செக்ஸில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 174 மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரிய-ஆரிசியைகள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் உதயன் அதே பள்ளியில் ஓராண்டுக்கு முன்பு பணியாற்றிய ஆசிரியையுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது.
மேலும் அந்த செக்ஸ் காட்சிகள் செல்போன்களிலும் உலா வந்தன. தலைமை ஆசிரியரே இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டால் எங்கள் குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப் புவது? என்று பெற்றோர்கள் கொதித்தெழுந்தனர்.
வகுப்பறையில் பாலியில் செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் உதயனை “சஸ்பெண்டு” செய்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி கணேசமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தலைமை ஆசிரியர் உதயனை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் உதயன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபணம் செய்யும் வரை அவர் சஸ்பெண்டில் இருப்பார். பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Short story in English

A Head master was suspended for having sex with teacher in class room in Valparai.

இந்திய சாமியார் மீது அமெரிக்க பெண் செக்ஸ் புகார்!



லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் வசித்து வரும் பிரபலமான இந்திய சாமியார் விக்ரம் செளத்ரி மீது 29 வயதான அமெரிக்க பெண் பரபரப்பு செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று செட்டிலானவர் விக்ரம் சௌத்ரி. வயது 67. விக்ரம் செளத்ரி 1973ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சனின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். நிக்ஸனுக்கு இருந்த உடல் உபாதை ஒன்றை அவர் தனது யோகா மூலம் சரி செய்தார். இதைத் தொடர்ந்து அங்கேயே ஆசிரமம் அமைத்து செட்டிலானார்.
பாப் பாடகி மடோனா, பிப்பா மிடில்டன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யோகா குரு என்றே இவர் அழைக்கப்படுகிறார். விக்ரம் யோகா ஸ்டடீஸ் என்ற மையத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான் அமெரிக்க பெண்ணா சாரா பகான் என்பவர் விக்ரம் சௌத்ரி மீது அடுக்கடுக்கான செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளார்.
தன்னை கண்ட இடங்களில் சாமியார்தொட்டார். காதுக்கு நெருக்கமாக வந்து செக்ஸியான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். தொடர்ந்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். எனது யோகா வாழ்க்கையை கெடுத்தார் என்று சாரா குற்றம் சாட்டியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் விக்ரம் மீது சாரா வழக்கு தொடர்ந்துள்ளார்.
சாராவின் இந்த குற்றச்சாட்டால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Short story in English

IN THE cut-throat world of Hollywood fitness gurus, he has long been the hottest property. Wearing nothing but the skimpiest of swimming trunks and a microphone, Bikram Choudhury won a legion of celebrity acolytes with his brand of ‘'hot yoga’', which sees devotees exercise in temperatures up to 40C.

போலீஸுக்குத் தெரியாமல் நடந்த பிரம்மாண்டமான செக்ஸ் திருவிழா

ல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட உலகின் மிகப்பிரம்மாண்டமான செக்ஸ் திருவிழா டெக்சாஸ் நகரில் உள்ள தென் பத்ரே ஐஸ்லேண்ட் பகுதியின் மிகப்பிரமாண்டமான கடற்கரையில் கடந்த நான்கைந்து தினங்களாக நடைபெற்றது.
இந்த விழாவில் வோட்கா,விஸ்கி போன்ற மதுவகைகள் தாரளமாக விநியோகிக்கப்பட்டதுடன் பாலியல் களியாட்டமாகவும் இது அமைந்திருந்தது.
மாணவிகள் தங்களை மறந்த நிலையில் இருக்க ஆண் நண்பர்கள் அவர்களின் உடல் உறுப்புகளில் கை வைப்பதும், சிலர் மொத்தமாகவே கழற்றிவிட்டு சக நண்பர்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டும் விழாவை சிறப்பித்தனர்.
ஆனால் அரசுக்கு தெரியாமல் நடைபெற்ற இந்த களியாட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னரே போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் அங்கு செல்லும் போது நிலைமை கவலைக்கிடம் .. காய்ந்த மாடு கம்பில் பாய்வதுபோல இவர்களின் நடவடிக்கைகள் இருந்ததால் பலர் சுயநினைவின்றி அபாயகரமான நிலையில் இருப்பதை காண முடிந்தது.
இவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதோடு,மற்றவர்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார்களாம்.


இதோ இளசுகளின் காமக்களியாட்டங்கள் நிறைந்த போட்டோ கேலரி:






























அதிக செக்ஸ் உயிரையும் குடிக்குமாம்…! எப்படின்னு பாக்கலாமா?



துவுமே அளவோட இருந்தாதான் நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனா செக்ஸ் மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும்வரை வச்சுக்கலாம்னு மருத்துவர்கள் சொல்றாங்க.
ஆனா உண்ணை என்ன தெரியுமா… இந்த செக்ஸே சில நேரங்களில் உயிரையும் குடிக்குமாம்.
எப்படின்னு பாக்கலாமா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்காம்.
தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட உயிருக்கு ஆபத்துதானாம்.
ஒரே நாளில் அதிக முறை உச்சத்தை எட்டுவதும் ஆபத்துதானாம். ஐந்து முறை, பத்துமுறை உச்சத்தை எட்டியதாக கற்பனைக் கதைகளைப் படித்துவிட்டு அதற்கு முனைவது தவறு என்கிறார்கள்.
மது அல்லது போதைப் பொருள் தரும் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.
அதிக மன அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிக செக்ஸை தவிர்க்க வேண்டும்.

அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம்.

கூகுளில் அதிகமாக செக்ஸ் படம் பார்ப்பவர்கள் : முதல் இடத்தில் இலங்கை; 2-வது இடம் இந்தியாவுக்கு!


ல்லரசாகும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்திய நாடு ஊழலில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது, இப்போது அதையும் தாண்டி பிட்டு படம் பார்ப்பவர்களின் எண்ணிகையில் பக்கத்து நாடான இலங்கைக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூகிளின் சர்ச் மூலம் செக்ஸ் என்ற வார்த்தையை தேடுபவர்களின் எண்ணிக்கையில் உலகின் முதல் இடத்தில் இலங்கை உள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
இதன் மூலம் உலகிலேயே ராஜபக்‌ஷே தலைமையிலான அராசாங்கத்தை கொண்டிருக்கும் இலங்கையில் தான் பாலியல் சம்பந்தமான நீலப்படக்காட்சிகளை அதிகமாக பார்க்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
சமீபகாலமாக இலங்கை மற்றும் இந்தியாவில் மொபைல், டேப்லெட், கனிணி ஆகியவற்றின் மூலம் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூகுள் இந்த புள்ளி விபரத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 31, 2013

ஆரம்பம் பார்த்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை!



இன்று மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது அஜித் நடித்த ஆரம்பம் படம். நள்ளிரவில் இருந்தே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம், பட்டாசு, வானவேடிக்கையுடன் துவங்கியது ஆரம்பம் படத்தின் முதல்நாள் முதல் காட்சி. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கைத்தட்டி விசிலடித்து ஆட்டம் போட்டு ஆரம்பத்தை ரசித்துப் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
இது ஒருபக்கம் இருக்க இன்று பேஸ்புக்கில் ஒரு செய்தி படம் கண்ணில் பட்டது. அதாவது ஆரம்பம் பார்த்த அஜித் ரசிகர் தற்கொலை என்பதுதான் அந்த செய்தி படம். மேலும் அதில் ஆரம்பம் படம் தோல்வி அடைந்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை என்றும் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பொய்யான செய்திப் படங்களை இப்படி உருவாக்கி வெளியிடுகிறார்களே என்பதுதான் அதியாக காரணம்.
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டையார் அன்றே பாடிவைத்தார். ஆனால் ஆள் வளருகிற அளவுக்கு இன்று அறிவு வளராமல் போய்விடுகிறது. அதனால்தான் அறிவியலை பயன்படுத்தி இது போன்ற வேலைகளை எல்லாம் இவர்களால் பார்க்க முடிகிறது. போட்டோஷாப்பை பயன்படுத்தி இந்த படத்தில் வரும் செய்திகளை உருவாக்கியிருக்கிறார்கள். என்னே ஒரு கீழ்த்தரமான புத்தி. இதன் மூலம் இவர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?

குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்று இன்று சிலரது கையில் சிக்கிக் கொண்ட பேஸ்புக்கால் இது போன்ற பொய்யான செய்திகள் உலகம் முழுவதும் எளிதில் பரவிவிடுகின்றன. இதை திட்டமிட்டு சில விஷமிகள் உருவாக்குகிறார்கள் என்றால் இதை பகிர்பவர்களாவது கொஞ்சம் யோசிக்க வேண்டும் அல்லவா? இந்த செய்தி உண்மைதானா என்று யோசித்துப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இது போன்ற பொய்ப் பிரச்சார படங்கள் பேஸ்புக்கில் சாதாரண மனிதர்களால் எளிதில் பகிரப்பட்டு விரைவில் நிறைய பேரை சென்றடைந்து விடுகின்றன. இது போன்ற கீழ்த்தரமான புத்தி உடையவர்கள் என்ன சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு. எனினும், பேஸ்புக் போன்றவற்றில் வரும் இது போன்ற செய்தி, படங்களை உண்மை தன்மை அறிந்து பகிரும் பழக்கத்தை அனைவரும் கடைபிடித்தால் பொய் பிரச்சார செய்திகள், படங்கள் நிறையபேரை சென்றடைவதை நம்மால் முடிந்த அளவுக்கு தடுக்க முடியும்.

Monday, October 28, 2013

என்றென்றும் புன்னகை டிரைலர் சந்தானத்தின் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது!

சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை படத்தின் டிரைலரில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண் சந்தானத்திடம் ‘நான் அஞ்சு பத்துக்கு போகப் போறேன்…’ என்று சொல்ல அவரோ அதற்கு, ‘ஏன் அஞ்சுக்கும் பத்துக்கும் போற… ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் போ…’ என்கிறார். இந்த வசனம் குறித்து மீடியாக்கள் கடுப்பாக எழுதித் தள்ள உடனே அந்த வசனத்தை நீக்கியிருக்கிறார்கள். யுடியூபில் பழைய டிரைலரை நீக்கிவிட்டு புதிய டிரைலரை வெளியிட்டிருக்கிறார்கள்.


Saturday, October 26, 2013

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் -அருள்நிதி, பிந்துமாதவியை ஓடவிட்ட சிம்புதேவன்!



ஒரு படத்திற்கு ஒரு டீசர் டிரைலரில் ஆரம்பித்து ஐந்தாறு டீசர் மற்றும் டிரைலர்களை வெளியிட்டுவிடுகிறார்கள். சிம்பு தேவன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. வெறுமனே சாலையில் ஓடும் அருள்நிதி, பிந்து மாதவி, பகவதி பெருமாள் ஆகியோரை வைத்து டீசரை தயாரித்திருப்பது சிம்புதேவனின் வித்தியாசமான முயற்சியைக் காட்டுகிறது.


சுட்டகதை விமர்சனம் -போங்கப்பா… நீங்களும் உங்க சுட்ட கதையும்…




வெளிநாடு வாழ் இந்தியரான ரவீந்தர் தமிழ் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக படம் எடுப்பதற்காக சுவிஸ்ஸிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். முதல் வேலையாக ஆறு படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். அவருடைய முதல் தயாரிப்புதான் சுட்டகதை படம். இந்தப் படம் ரிலீசுக்குத் தயாரானதுமே வேந்தர் மூவிஸ் படத்தை வாங்கினார்கள். வாங்கியவர்கள் மாதக் கணக்கில் படத்தை கிடப்பில் போட்டுவிட சற்றே கோபத்துடன் தயாரிப்பாளர் ரவீந்தர் படத்தை திரும்ப வாங்கி தானே சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார். வேந்தர் மூவீஸ் இந்தப் படத்தை 50 திரையரங்குகளில்தான் ரிலீஸ் செய்ய முடியும் என்று சொன்ன நிலையில் படத்தை 100க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கிறாராம் ரவீந்தர்.
மலையோர கிராமத்தின் தலைவனான கதாநாயகியின் அப்பா பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என்கிற துப்புத் துலக்கும் பணியில் ஈடுபடுகிறது காவல்துறை. கொலையாளி யார் என்பதைக் கண்டு பிடித்தார்களா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.
இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் புதிய முயற்சி, காமிக்ஸ் அடிப்படையில் அமைந்த படம் என்றெல்லாம் சொன்னார் இயக்குநர். ஆனால் படமோ காமிக்ஸ் புத்தகத்திற்கு விளம்பரம் செய்ய எடுக்கப்பட்டது போன்று இருக்கிறது.
படம் துவங்கியதிலிருந்து ரொம்ப நேரத்திற்கு கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதே பிடிபடவில்லை. சிரிக்க வைக்கிறேன் என்கிற பேரில் இவர்கள் அடிக்கும் ரகளையில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சிரித்து வைக்க முடிகிறது. மற்ற இடங்களில் எல்லாம்… நற… நற…
ஏற்கனவே சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் பாலாஜி இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக வருகிறார் வெங்கடேஷ். இருவரும் நடிப்பில் சபாஷ் போட வைத்திருக்கிறார்கள். கதாநாயகியாக நடித்திருக்கிறார் லஷ்மிப்ரியா சந்திரமௌலி. தர்மயுத்தம் டிவி தொடரில் தலை காட்டியவர் இந்தப் படத்தில் கதாநாயகியாகியிருக்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரொம்பவே வீரமான பெண் கேரக்டர் இவருக்கு. காவல்நிலையத்தில் சதா சர்வகாலமும் தூங்கி எந்திரிக்கும் ஆய்வாளராக வருகிறார் நாசர். அவரை அங்கில் என்று கூப்பிடும் போலீஸ்கார பையன் மட்டும் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஜெயப்பிரகாஷ், லஷ்மி ராமகிருஷ்ணன், சிவாஜி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். லஷ்மி ராமகிருஷ்ணன் எண்ணி நாலைந்து காட்சிகளில் வந்து போகிறார். இதே நிலைதான் ஜெயபிரகாஷ்க்கும்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் மேட்லி ப்ளூஸ். பின்னணி இசையை காமெடிக்காக தாறுமாறாக இசைக்க விடுவார்கள் சில இசையமைப்பாளர்கள். ஆனால் மேட்லியோ ஹ்யூமரான காட்சிகளில் எல்லாம் அருமையாக பின்னணி இசையமைத்திருக்கிறார். பாரில் பாடும் பாட்டு மட்டும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சுபு. கோடைக்கானலில் காட்டுப் பகுதிகளில் போய் படமாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளை இருட்டில் லைட்டை ஒளிரவிட்டுப் படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் ஏகப்பட்ட விளக்குகள். படம் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் ரொம்பவே ஸ்லோவாக நகருகிறது. திரைக்கதை சுவாரஸ்யமாகவும் இல்லை. அதே நேரத்தில் படத்தில் ட்விஸ்ட் வந்துவிட்டது… என்கின்றனர் கேரக்டர்கள். ட்விஸ்ட் வந்தால் படம் பார்ப்பவர் நிமிர்ந்து உட்கார வேண்டுமே… அதுதான் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என்னமோ போங்கடா… நீங்களும் உங்கள் சுட்டகதையும் என்கிற அளவுக்கு வர வைத்து விடுகிறார்கள்… மொத்தத்தில இந்தப் படத்தைப் பார்க்கப் போயி தலைவலி வந்ததுதான் மிச்சம்…

குமுதம் என்னை வைத்து வியாபாரம் செய்கிறது - போட்டுத்தாக்கிய கே.எஸ்.ரவிக்குமார்!



சமீபத்தில் வெளியான குமுதம் வார இதழில் கோச்சடையான் படத்தில் தன்னைப் புறக்கணித்துவிட்டதாக கே.எஸ்.ரவிக்குமாரின் பேட்டி வெளியாகி இருந்தது. இது பற்றி சங்கராபுரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசினார் கே.எஸ்.ரவிக்குமார். “என்னுடைய பேட்டி குமுதத்தில் வெளியானதுமே நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன. ‘என்ன உங்களுக்கும் ரஜினி சாருக்கும் ஏதாவது மன வருத்தமா?’ என்றெல்லாம் கேட்டார்கள். என்னுடைய பேட்டியை வைத்து குமுதம் வார இதழ் வியாபாரம் செய்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் அது தொழில் தர்மம். ஆனால் போஸ்டரையும் அட்டைப் படத்தையும் மட்டுமே பார்த்துவிட்டு புத்தகத்தைப் படிக்காமல் எனக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள். முழு பேட்டியையும் படித்தால்தானே உண்மை விளங்கும். என்னுடைய நெருங்கிய நண்பர் எனக்கு போன் செய்தார் ‘உங்களுக்கும் ரஜினிக்கும் என்ன பிரச்சினை…?’ என்று கேட்டார். நான் உடனே போனை பக்கத்தில் இருந்த ரஜினியிடம் கொடுத்தேன். ரஜினி சார் ‘ஹலோ நான் ரஜினி பேசுறேன்… சொல்லுங்க…’ என்று சொல்ல நண்பர் ஆடிப்போய்விட்டார். ‘அது வந்து ஒண்ணுமில்லீங்க…’ என்று சொல்லி சமாளித்தார். எனக்கும் ரஜினி சாருக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் நான் அவரிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பேனா என்ன…? இதன் மூலம் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது எனக்கும் ரஜினிசாருக்கும் மற்றும் கோச்சடையான் டீமிற்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் நட்புடன்தான் இருக்கிறோம்…’ என்று பேசினார். இதன் மூலம் விஸ்வரூபம் எடுக்கவிருந்த கோச்சடையான் விவகாரத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

குமுதம் ஆள் எவனோ தான் பொம்பளப்பேர்ல எழுதுறான்…!



எனக்கும் என் மனைவிக்கும் டாக்டர் ஷாலினியை மிகவும் பிடிக்கும். நம் பக்கத்துவீட்டு அக்கா போன்ற உணர்வை தரும் அவரின் அந்த தோற்றமும்.. நிறமும், நாம் பிரமிப்பாக நம்பும் பல்வேறு விசயங்களை பொட்டுனு போட்டுத்தள்ளும் அந்த அட்டகாசமான பேச்சும் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தமான விசயங்கள். இதுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை.
என்னுடைய டீன் ஏஜின் அந்திம காலத்தில் குமுதத்தில் ஷாலினியின் கேள்வி பதில் பகுதி ஒன்று வந்தது. அந்த பதில்கள் கொஞ்சம் வில்லங்கமாக இருக்கும். `குமுதம் ஆள் எவனோ தான் பொம்பளப்பேர்ல எழுதுறான்’ என்று அப்போது நினைத்திருக்கிறேன்.
பிற்பாடு டாக்டர் ஷாலினி என்பவர் நிஜம் என்பது தெரிந்தது. அதன்பிறகு அவரது எழுத்துக்களையும் விவாதங்களையும் தவறவிடாமல் கவனித்துவருவது வழக்கம்.
சில வருடங்களுக்கு முன் விகடனில் ஷாலினி எழுதிய உயிர்மொழி என்றொரு தொடர்வந்தது. முதல் ஐந்து வாரங்கள் அத்தனையும் தீப்பொறி தான். ஆண்களின் அம்மா செண்டிமெண்ட்டையும், பெண்கள் ஆண்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை தன் எழுத்தில் காலி செய்திருப்பார். ஒவ்வொரு பாயிண்ட்டும் மறுக்க முடியாதவை.
ஷாலினியைத் தவிர நிச்சயமாக அந்த தொடரை ஆண் மருத்துவர்கள் யாராவது எழுதியிருந்தால் மிக எளிதாக ஆணாதிக்க தொடர் என்று `நீயா நானா’வின் `பெண்ணியவாதிகள்’ எளிதாக முத்திரைக் குத்தியிருப்பார்கள்.
தாய்மை.. பெண்மை.. புனிதம்..என்று பெண்கள் வீசும் ஆயுதங்கள் அத்தனைக்குமான பின்னணி காரணங்களை ஷாலினி புட்டுப்புட்டு வைத்தது பெரும்பாலான வாசகிகளை கடுப்பேற்றியதாக அறிந்தேன்.
முக்கியமாக பெரும்பாலான மன நல மருத்துவர்கள் கையாளும் டார்வின், ஃபிராய்டு .. என்று மொழிப்பெயர்ப்பு சமாச்சாரமாக இல்லாமல் அந்த தொடர் ஒரு பெரியார் கண்ணோட்டம் கலந்து கட்டிய ஒரு ஆய்வு தன்மையோடு இருந்தது மிகவும் பிடித்திருந்தது.
விகடனில் வந்த முக்கியமான தொடர்களில் ஒன்று என்று உயிர்மொழி தொடரை சொல்லலாம். நானும் என் மனைவியும் ஒருவாரம் கூட அதை படிக்க தவறவிடமாட்டோம். அவ்வளவு சுவாராஸ்யமான உண்மைகளை பேசும் தொடர் அது.
திருமணம் செய்து கொள்ளும் நண்பர்களுக்கு உயிர்மொழி புத்தகத்தை பரிசாக கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அதைப் படித்தால் பெண்களின் செண்டிமெண்ட் அட்டாக்கிலிருந்தும், மாமியார் மருமகள் அட்டாக்கிலிருந்தும் ஓரளவுக்கு ஆண்கள் தப்பிக்கலாம்.
இதேப்போல் ஷாலினியை பிடிக்க இன்னொரு காரணம், நீயா நானாவில் மேக்-அப் தொடர்பான ஒரு விவாதத்தில், நீங்கள் அழகுப்படுத்திக் கொள்வதெல்லாம் பாலியலுக்கான தூண்டில் தான் என்று போட்டு தாக்கியிருப்பார். அதைக்கேட்டு அம்மணிகள் எல்லாம் மிரண்டுபோன காட்சி இருக்கே.. ஆஹா..
நன்றி -கார்ட்டுனிஸ்ட் பாலா

Tuesday, October 22, 2013

சூர்யா- ஜோதிகா காதல் மலர்ந்த 'காக்க காக்க' தாணுவை காக்க வந்த படம்!

நடிகை ஜோதிகா துவக்கிய இந்திரா சிறுவர் பராமரிப்பு இணையத்தளம்



குழந்தைகள் மீது அக்கறைகாட்டும் ஜோதிகா


நடிகை ஜோதிகா துவக்கிய இந்திரா சிறுவர் பராமரிப்பு இணையத்தளம்


குழந்தைகள் மீது அக்கறைகாட்டும் ஜோதிகா

'ஆளவந்தான்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுசெய்யும் விதத்தில், தாணுவின் 'காக்க காக்க' படம் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் நடித்த போதுதான், சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் காதல் மலர்ந்தது.

திரை உலக அனுபவம் பற்றி பட அதிபர் `கலைப்புலி' தாணு தொடர்ந்து கூறியதாவது:-

ஆளவந்தான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, 'என்ன சொல்லப் போகிறாய்?' என்ற படத்துக்கும் பூஜை போட்டேன். புதுமுகங்கள் நந்தா -காயத்ரி ரகுராம் என இளம் ஜோடிகளை அந்தப்படத்தில் அறிமுகப்படுத்த இருந்தேன்.

நந்தா ம.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கண்ணப்பனின் மகள் வயிற்றுப் பேரன். காயத்ரி ரகுராம், டான்ஸ் மாஸ்டர் ரகுராம் -கிரிஜா தம்பதியரின் பெண்.

நடிகர் கமலஹாசன் விளக்கேற்றி வைக்க பூஜை நடந்தது. அதே வேகத்தில் படம் வளரத் தொடங்கியது.

படத்தில் காயத்ரி ரகுராமுக்கு ஒரு கண்ணியமான டீச்சர் வேடம். அந்த கேரக்டரில் அவர் நடித்து படம் வெளிவந்திருந்தால் தொடர்ந்து சிறந்த நடிகை என்ற பட்டியலிலும் காயத்ரி இடம் பிடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அவர் நடித்த நேரத்தில் பிரபுதேவாவுடன் நடித்த 'சார்லி சாப்ளின்' படம் ரிலீசானது.

அந்தப் படத்தில் அவர் பிரபுதேவா தோள் மீது காலைத் தூக்கிப்போட்டு நடித்ததால், அடுத்து வரவிருக்கும் இந்தப் படத்தில் அவரது கேரக்டர் பாதிக்கப்படும் என்று எண்ணினோம். அதனால் படத்தில் இருந்து காயத்ரி விடுவிக்கப்பட்டார்.

படத்தின் நாயகன் நந்தா பற்றி சொல்ல வேண்டும். அவருக்கு நடிப்பு ஆர்வம் இருந்ததால் பிலிம் இன்ஸ்டிடிïட்டில் சேர்த்து விட்டதே நான்தான். நடிப்புக்காக தங்கப்பதக்கம் வாங்கினார். என் மகள் திருமணத்தின்போது நந்தாவின் அப்பா தனது மகன் நந்தாவை என் கையில் பிடித்துக் கொடுத்து, 'என் மகனை நடிகனாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' என்று சொல்லி கண்கலங்கினார்.

இது நடந்து இரண்டு நாட்களில் கோயம்புத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் நந்தாவின் அப்பா மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கிடைக்கிறது. அதிர்ச்சி அடைந்த நான் அவர் இல்லம் போனபோது, நந்தாவின் அம்மா கண்ணீருடன் நந்தாவை காட்டி, 'இவங்க அப்பா ஆசை நிறைவேறுமா? என் மகன் உங்க படத்தில் நடிப்பானா?' என்று கேட்டார். மகன் மேல் பெற்றோருக்கு இருந்த அக்கறையும், கவலையுமே என்னை நந்தாவுக்காக 'என்ன சொல்லப்போகிறாய்?' படத்தை எடுக்கச் செய்தன.

இப்படி ஆசைப்பட்டு நடிக்க வந்த நந்தாவுக்கு, படத்தின் டைரக்டரிடம் கிடைத்தது எதிர்மாறான அனுபவம். டைரக்டரின் அணுகுமுறையும் பேச்சும் நந்தாவை மனதளவில் காயப்படுத்த, என்னை வந்து சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார். 'டைரக்டரின் பேச்சும், நடந்து கொள்ளும் விதமும் என்னால் படத்துடன் ஒன்ற முடியாமல் செய்துவிட்டது. இவரை வைத்து நீங்கள் தொடர்ந்து படம் எடுத்தால் ரொம்ப நஷ்டப்பட்டுப் போவீர்கள்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். படம் தொடர்ந்து வளராமல் நிறுத்தப்பட இதுவும் ஒரு காரணம்.

இதற்கிடையே படத்தின் டைரக்டர் என்னை சந்தித்து, 'இந்தக் கதையை வேறு நடிகரை வைத்து தயாரிக்கப்போகிறேன். எனவே, கதையை எனக்குத் தரவேண்டும்' என்று கேட்டார். படத்தை அதுவரை தயாரித்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடம் கேட்காமல், கதையை அவருக்கு எழுதிக் கொடுத்தேன். 

நந்தாவின் எதிர்காலம் நின்றுவிடக்கூடாதே, என்பதற்காக நான் தயாரித்த படம் 'புன்னகைப்பூவே.'

இதற்கென நான் எனது 'விஐபி' படத்தை இயக்கிய டைரக்டர் சபாவை அழைத்துப் பேசினேன். மனோகர் என்ற எழுத்தாளர் படத்தின் கதையை எழுதி இருந்தார்.

படத்தில் புதுமுகம் ரேகா, காவேரி நடித்தார்கள். காமெடிக்கு வடிவேலு. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்ததோடு, ஒரு பாடல் காட்சியில் நடனமாடி நடித்தார்.

இந்த படத்துக்காக, முதன் முதலாக `டைட்டல் பார்க்'கில் படம் எடுக்க அனுமதி வாங்கினேன். தமிழகம் முழுதும் நானே ரீலீஸ் செய்தேன். என்ன சொல்லப் போகிறாய், புன்னகைப் பூவே இரண்டு படத்திலும் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டது.

'புன்னகைப்பூவே' தயாரிப்பில் இருந்த நேரத்தில், டைரக்டர் ராஜீவ் மேனனின் நண்பர் பார்த்திபன் என்னை சந்தித்தார். `எனது நண்பர் கவுதம் மேனன், டைரக்டர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தவர். முதன் முதலாக 'மின்னலே' என்ற படத்தை இயக்கினார். படம் வெற்றி. இப்போது அடுத்து ஒரு கதை தயார் செய்திருக்கிறார். நீங்கள் சம்மதித்தால், கதை சொல்ல அழைத்து வருகிறேன்' என்றார்.

'என்ன பட்ஜெட் ஆகும்?' என்று கேட்டேன். 

ரூ.'2 1/2 கோடி ஆகும். முதல் பிரதி அடிப்படையில் படம் பண்ணித்தர சம்மதம். சூர்யா -ஜோதிகா ஜோடி. அவர்கள் சம்பளம்கூட இதற்குள்தான்' என்றார்.

'ராஜீவ் மேனனின் உதவியாளர் என்றால் எனக்குத் தெரிந்திருக்குமே' என்றேன்.

'அவர் உங்கள் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் பணியாற்றவில்லை. அதற்குமுன் வெளிவந்த 'மின்சாரக் கனவு' வரை பணியாற்றிவிட்டு, 'மின்னலே' படம் பண்ணப் போய்விட்டார்' என்றார்.

'சரி! நாளைக்கு அழைத்து வா' என்றேன்.

மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் கதை சொல்ல வந்துவிட்டார் கவுதம் மேனன். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கதை சொன்னார்.

கதை எனக்குப் பிடித்து விட்டது. நான் அவரிடம், 'ரொம்ப நல்லாயிருக்கு தம்பி! இந்தக் கதையை அப்படியே படமாக எடுத்தால் திரையில் 3 1/2 மணி நேரம் ஓடும்! தியேட்டர்களில் 3 1/2 மணி நேர படத்தை போட ஆபரேட்டர்களே இப்போதெல்லாம் விரும்புவதில்லை.

2 ரீலை அவர்களாகவே எடுத்து வைத்துவிட்டு மீதி படத்தை ஓட்டிவிடுவார்கள். 2 1/2 மணி நேரம் ஓடக்கூடிய அளவில் காட்சிகளை கோர்வைப்படுத்து என்றேன்.

அப்போதே அட்வான்சாக ரூ.2 லட்சம் கொடுத்தேன். கண்களில் நீர் ததும்ப பணத்தை வாங்கிக் கொண்டார்.

முதல் பிரதி தயாராவது வரை 2 1/2 கோடி ரூபாய் பட்ஜெட் என்று நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொண்டேன். அப்போதே 18 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஏற்கனவே ரூ.2 லட்சம் கொடுத்திருந்தேன். இதையும் சேர்த்து ரூ.20 லட்சம்.

ஆனால் பணம் பெற்றுக்கொண்ட இரண்டாவது நாளே பணம் தேவை என்று வந்தார். நான் அவரிடம், 'நேற்று கொடுத்த ரூ.18 லட்சத்தை என்ன பண்ணினீங்க?' என்று கேட்டேன். அதற்கு அவர் சிரிப்பையே பதிலாக தந்தார்.

இப்போது எனக்குள் ஒரு சின்ன சந்தேகம் எட்டிப்பார்த்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'கவுதம்! நீங்க யார் யாருக்கு பணம் கொடுக்கிறீர்களோ அத்தனைக்கும், எனது வங்கிக் கணக்கில் ஒரு அக்கவுண்ட் ஒப்பன் பண்ணித்தந்து விடுகிறேன். நீங்கள் கொடுக்கிற செக் அதில் பாஸ் ஆகிவிடும் என்றேன்.

சில நாட்களில் கவுதம் மேனன் என்னைப் பார்க்க வந்தார். 'சார்! நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு லோன் வாங்கிக் கொடுங்கள்' என்று கேட்டார்.

நானும் தாமதமில்லாமல் வீட்டை கட்ட லோன் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அந்தக் கடனை என்னைத்தான் கட்ட வைத்தார். அதுபோக வீடு முடிவடையும் தருவாயில் 'ஒரு 5 லட்சம் ரூபாய் இருந்தால் முடித்து விடுவேன்' என்று வந்தார். அதற்கும் ஏற்பாடு செய்தேன்.

படப்பிடிப்பு தொடங்கியது. அவர் கொடுத்த சம்பளப் பட்டியலில், சூர்யாவைவிட ஜோதிகாவுக்கு சம்பளம் அதிகம் என எழுதப்பட்டு இருந்தது. 'இது எப்படி? ஹீரோவைவிட ஹீரோயினுக்கு சம்பளம் அதிகம் என்றால் எந்த ஹீரோ ஒப்புக்கொள்வார்?' என்று கேட்டேன்.

அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்தார்.

இந்தப் படத்தில் வில்லன் கேரக்டருக்கும் ரொம்பவே முக்கியத்துவம் இருந்தது. 'இந்த கேரக்டருக்கு யாரை போட்டு இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'யுனிவர்சிட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ஜீவன்தான் இந்தப் படத்தின் மெயின் வில்லன்' என்றார்.

'முக்கியமான வில்லன் கேரக்டருக்கு ஜீவன் தாங்குவாரா?' என்று என் சந்தேகத்தை கேட்டேன்.

'எனக்கு நம்பிக்கை இருக்கிறது சார். ஜீவன் நடிப்பினால் இந்த வில்லன் கேரக்டரும் பேசப்படும்' என்றார்.

'டைரக்டரான உங்களுக்கே அந்த நம்பிக்கை இருந்தால், அவரே நடிக்கட்டும்' என்றேன்.

இந்தப்படம் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் சூர்யா -ஜோதிகா காதல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படத்தொடங்கியது. ஒருநாள் எனது அலுவலகத்தில் படப்பிடிப்பு நடந்த நேரத்தில், `நந்தி சாமியார்' என்ற பெயர் கொண்ட சாமியாரை காஞ்சீபுரம் பாபு தியேட்டர் அதிபர் அழைத்து வந்தார். எல்லோருக்கும் சாமியார் ஆசி வழங்கினார். அதோடு சிலரிடம் அவர்களின் பிரச்சினைகளை 5 நிமிட நேரத்துக்கு குறையாமல் பேசினார்.

நடிகர் சூர்யாவும் சாமியாரை சந்தித்து ஆசி பெற்றார். அவரிடம் தனியாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சூர்யாவின் மனதில் இருந்த காதல் விஷயங்களை சாமியார் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த, சூர்யா மிரண்டு போய்விட்டார். 'எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்?' என்று சூர்யா கேட்டபோது, 'இந்தப்படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்' என்று கூறினார்.

சந்தோஷமாய் சாமியாரிடம் விடைபெற்றுப் போனார், சூர்யா. அவர் போனதும் என்னிடம் பேசிய சாமியார், 'பையன் (சூர்யா) காதலில் ரொம்பவே தீவிரமாக இருக்கிறான். சீக்கிரம் படத்தை எடுத்து முடி' என்று சொன்னார்.