Thursday, September 26, 2013

Rs.18,000,00,00,000




Rs.18,000,00,00,000

இதுதான் முதலில் ஆதார் அட்டைக்கு அவர்கள் நாடாளுமன்றத்தில் வைத்த உத்தேச செலவுத் தொகை.காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்து விரும்பும் பல பத்திரிகைகள் இதை பற்றி விவரமாக எழுதவில்லை.

இது வரை எவ்வளவு செலவு செய்துள்ளார்கள்.இந்த பணிகளுக்கு எந்த தனியார் ஏஜென்சிகளை இவர்கள் அங்கீகரித்தார்கள் அது டெல்லியை மையமாக கொண்டு இயங்கும் ஏஜென்சியா இல்லை கொச்சியை மையமாக கொண்டு இயங்கும் ஏஜென்சியா என்பது போன்ற தெளிவான விவரங்கள் இல்லை.

எதற்கும் உதவாத,தங்களின் சுய நலத்தை மட்டும் கணிப்பில் கொண்டு இன்று சுப்ரீம் கோர்டிடம் டோப்பாவை கழட்டி தலையை சொறிந்து கொண்டு நிற்கும் பிரதமர் அவருக்கு மனதில் ஒரு சந்தோசம் நிச்சயமாய் இருக்கும்.

நாம மத்தியில இருக்கோம்.நம்மளை விட ஒருத்தன் பெரிய ஊழல் தொகையை காட்டறதா என்கிற நினைப்பில் இந்த உத்தேச தொகையை அறிவித்திருப்பார் போல.

Rs.18,000,00,00,000 இதுவும் நம் பணம்.

No comments:

Post a Comment