Saturday, September 21, 2013

ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்



முகத்தின் அழகை இன்னும் அழகாக்குவது செழுமையான கன்னங்கள். ஆப்பிள் போல் கன்னங்கள் இருந்துவிட்டால் அழகோ அழகு. ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்.

தோலுக்குத் தேவையான எண!ணெய்ப் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண!டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும்.

* தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிட வேண!டும். தோலில் எண!ணெய்ப் பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச் சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதை போட்டு கன்னம் தங்கம் போல் மின்னும்.

* மூன்று ஆப்பிள் துண!டுகள், மூன்று கேரட் துண!டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.

* ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண!ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண!டு துண!டு சீஸ், ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தாலே போதும். சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும்.

* அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண!ணாததும் கன்னம் ஒட்டிப் போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண!டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர்ந்த பழங்கள் மற்றும் நிறைய தண!ணீர் சேர்த்துக் கொண!டால் செழுமையான கன்னங்களை பெறலாம்.

* தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண!ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வர, ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.

* நல்லெண!ணெய் (அ) தேன் ஒரு டீஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி.

* ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை அப்பி, தினமும் „பேஷியல் ஸ்ட்ரோக்… கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெறலாம்.

* ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு கழுவவும். தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளப்பாக்கும்.

* பால் - 1 டீஸ்பூன், வெண!ணெய் - 1 டீஸ்பூன், பார்லித்தூள் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை ஒரு சிறிய கிண!ணத்தில் எடுத்து நுரை வரும் வரை நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் கிரீமை, முகம், கழுத்து, கண!களைச் சுற்றி என அனைத்துப் பகுதிகளிலும் பூசவும். அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். உங்கள் கன்னம் வெண!மைப் பொலிவுடனும் மற்றும் முகம் மினுமினுப்புடன் பிரகாசிப்பதை காணலாம்.

No comments:

Post a Comment