Monday, September 23, 2013

சித்த மருத்துவ முறையில் மூலிகை காபி தயாரிப்பது எப்படி?




சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி தயாரிப்பது எப்படி?
தேவையான மூலிகை பொருட்கள்…
ஏலரிசி – 25-கிராம்.
வால்மிளகு – 50 கிராம்.
சீரகம் – 100 கிராம்.
மிளகு – 200 கிராம்.
இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்துக் கொள்ளவும். இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடிகட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து தினமும் காலையில் சாப்பிடலாம்.
இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நரம்புத்தளர்ச்சி, அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், 
உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் போன்ற பிரச்சினைகளும் குணமாகும்.

No comments:

Post a Comment