Wednesday, June 24, 2009

ராக்கி சாவந்த் 16 பேரை மணக்க விருப்பம்


தனக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய சுயம்வரம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பாலிவுட் செக்ஸ் பாம் ராக்கி சாவந்த், அதில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரும் தன்னைக் கவர்ந்து விட்டதால் அத்தனை பேரையுமே மணக்க விரும்புவதாக கூறி அதிரடித்துள்ளார்.

ராக்கி சாவ்ந்த் கா சுயம்வர் என்ற பெயரில் சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ராக்கி. தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான ரியாலிட்டி ஷோ என இதை அவர் வர்ணித்திருந்தார்.

ராக்கியின் இந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்டதும் நாடு முழுவதிலுமிருந்து 12,515 பேர் மனு செய்தனர்.

இவர்கள் குறித்து ஆராய்ந்து, பலரை நிராகரித்து, சல்லடை போட்டு சலித்து இப்போது 16 பேரை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்துள்ளார் ராக்கி. ஆனால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் குழப்பமாகி விட்டதாம். காரணம், 16 பேரும் பக்கவாக, பர்பக்ட் ஆக இருப்பதால், யாரை விடுவது, யாரை தேர்வு செய்வது என்று அவருக்குப் புரியவில்லையாம்.

இதுகுறித்து செய்தியாளர்களைக் கூட்டி ராக்கி பேசுகையில், மகாபாரத்தில் திரவுபதி இருந்தது போல நானும் மாடர்ன் திரவுபதி ஆக விரும்புகிறேன்.

காரணம், நான் தேர்வு செய்த 16 பேரும் அட்டகாசமானவர்கள். இவர்கள் அனைவரையும் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

உதய்ப்பூரில் நடந்த இந்த சுயம்வரம் நிகழ்ச்சியை நான் நன்றாக அனுபவித்தேன். எனக்கு ஒரு இளவரசியைப் போன்ற எண்ணம் ஏற்பட்டது. உதய்ப்பூரின் இளவரசியாக என்னை நான் நினைத்துக் கொண்டேன். இது மிகச் சிறந்த அனுபவம் என்றார் ராக்கி.

உதய்ப்பூரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் போட்டியாளர்களை தங்க வைத்து

No comments:

Post a Comment