Monday, June 29, 2009

தியேட்டர்களில் மது பார்! அதிபர்கள் கோரிக்கை...

சப்பை படமாக இருந்தாலும், இனிமேல் 'ஃபுல்' திருப்தியோடு வெளியே வருவார்கள் ரசிகர்கள். ஏன்? வேறொன்றுமில்லை, 'எல்லாம் இன்ப மய பாலிசிக்கு' அடி போட்டு வருகிறது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். இவர்கள் வைத்திருக்கும் ஒரு கோரிக்கை, இனி குடிமகன்களின் தேசத்தில் குய்யாலக்கடியை ஏற்படுத்தக் கூடும்.

திரையரங்க வளாகத்திலேயே பார் நடத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்களாம் அரசிடம். "ஏற்கனவே தியேட்டருக்குள்ளே பெண்கள் வர்றதில்லே. இந்த லட்சணத்தில் பாரையும் திறந்திட்டா சுத்தம்". செய்தியை கேள்வி பட்டவுடனேயே மக்கள் முணுமுணுப்பது இப்படிதான். ஆனால், திரையரங்க தரப்பு என்ன சொல்கிறது இந்த முணுமுணுப்புக்கு?

இப்போ மட்டும் என்ன வாழுதாம்? காம்ப்ளக்ஸ் திரையரங்கங்களை விடுங்கள். சாதாரண தியேட்டர்களில் குடிக்காமல் வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான். பக்கத்தில் உள்ள டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு வந்துதான் படமே பார்க்கிறாங்க. எங்கேயோ போய் குடிச்சிட்டு வந்து இங்கே பார்க்கறதுக்கு இங்கேயே குடிச்சிட்டு பார்த்தா எங்களுக்கும் வருமானம் வருமில்லே? அதுமட்டுமில்லே, முன்னெல்லாம் தமிழகம் முழுக்க 2600 தியேட்டர்கள் இருந்திச்சு. இப்போ, 1400 தான் இருக்கு. அதிலேயும் 400 தியேட்டர்கள் இப்பவோ, அப்பவோ கண்டிஷன்ல இருக்கு.

எங்களுக்கு வருமானம் வரணும். தியேட்டர்கள் இனிமேலும் ஷாப்பிங் காம்பளக்சாகவோ, கல்யாண மண்டபமாகவோ மாறாம தடுக்கணும்னா ஒரே வழி பார் ஓப்பன் பண்ணுறதுதான். எங்க கோரிக்கையை பரிசீலனை செய்வாங்கன்னு ஆவலோட காத்திருக்கோம் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள்.

எங்கேங்க முழுசா படத்தை பார்க்க முடியுது? இப்பவே குடிச்சிட்டு வந்து, ஸ்கிரீன்லே வர்ற ஹீரோ ஒன்ணு சொன்னா, அதுக்கு பதிலை இங்கே எதிர்ல உட்கார்ந்திகிட்டு சொல்றான். சீரியஸ் ஆன சீன்லே கூட தியேட்டரே கொல்லுன்னு சிரிக்குது. இதிலே பார் வைக்கவும் அனுமதி கொடுத்தாச்சுன்னா படத்தை முழுசா பார்த்தாப்லதான் என்கிறார் ஒரு ரசிகர். ஹ¨ம், அவங்கவங்க ப்ராப்ளம் அவங்கவங்களுக்கு!

No comments:

Post a Comment