Monday, June 29, 2009

என் வயசை ஏழுமலையானிடம் கேளுங்க!-விஜயசாந்தி

திருப்பதி திருமலைக்கு பிறந்தநாள் கொண்டாட வந்த விஜயசாந்தியிடம் வயதைக் கேட்ட நிருபருக்கு, அதை அந்த ஏழுமலையானிடம்தான் கேட்க வேண்டும் என்றார் நடிகை விஜயசாந்தி.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.யும், நடிகையுமான விஜயசாந்தி தனது பிறந்த நாளைக் கொண்டாட திருப்பதி திருமலைக்கு வந்தார்.

ஏழுமலையானுக்கு நேற்று முன்தினம் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமி கும்பிட்ட விஜயசாந்தி, பின்னர் வெளியில் வந்தபோது அவரை ரசிகர்கள் சூழந்து கொண்டு வாழ்த்துக் கோஷம் எழுப்பினர்.

ரசிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு நிருபர்களும் விஜயசாந்தியை சந்திக்க முயன்றனர்.

உடனடியாக அவர்களை தனியாக நிற்க வைத்த விஜய்சாந்தியின் உதவியாளர்கள், அங்கேயே ஒரு மினி பிரஸ்மீட் நடத்தினர்.

அவரது அரசியல் பிரவேசம் எதிர்பார்த்த வெற்றியைத் தராதது குறித்து கேட்டதற்கு, நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார்.

அப்போது ஒரு நிருபர், உங்க வயசு என்ன மேடம்? என்றார்.

நடிகைகளுக்கு எட்டிக் காயாய் கசக்கும் இந்தக் கேள்வி, விஜயசாந்திக்கு மட்டும் இனிக்கவா செய்திருக்கும். மகா கடுப்புடன் அவரை நோக்கிய அதிரடி நாயகியான விஜயசாந்தி, 'அதை என்கிட்ட கேக்காதீங்க... அந்த ஏழுமலையான்கிட்டேயே கேளுங்க', என்றார்.

சரிதான்... அவருக்கு வேற வேலையே இல்லையா? என பதிலுக்கு அந்த நிருபர் கேட்டதை காதில் வாங்காமலேயே நடையைக் கட்டினார் விஜயசாந்தி!

No comments:

Post a Comment