Wednesday, June 24, 2009

இந்திக்கு தாவல்: அசினுடன் போட்டி இல்லை- திரிஷா


அசினை தொடர்ந்து தமிழ் நடிகைகள் பலரும் இந்திக்கு தாவுவதில் மிகுந்த அக்கறை காட்டினர். இதில் திரிஷா அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கும் `கட்டாமிட்டா' என்ற படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:-
அசின் இந்தியில் பெயர் வாங்கியதால் தான் நானும் இந்திக்கு தாவி விட்டதாக யாரோ வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். அசினை மட்டுமல்ல யாரையும் நான் போட்டியாக கருதவில்லை. என்னுடைய கவனம் எல்லாம் எனது படங்களில் தான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான படங்களில் நடித்து அது ரசிகர்களுக்கு பிடித்தாலே போதும்.
உண்மையில் நான் இந்தி படத்திற்காக யாரையும் பார்க்கவும் இல்லை. யாரிடமும் சான்ஸ் கேட்டதும் இல்லை. என்னுடைய அபியும் நானும் படத்தை பார்த்த அக்ஷய் குமார் எனது நடிப்பை பாராட்டியதோடு அவருடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவும் வாய்ப்பு தந்துள்ளார். இந்த படத்தை அவரே அவருடைய சொந்த கம்பெனி மூலம் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இதனால் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

No comments:

Post a Comment