

சேலத்தில் நடைபெற்ற ம.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் பொழுது மதிமுக வை அழிக்க எவராலும் முடியாது என்று வைகோ கூறியுள்ளார். சேலம் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர் கூட்டம் சேலம் ஜங்சன் அருகில் உள்ள பி.சி.சி. திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கு.சீ.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் வர வேற்றார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்க வில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கவில்லை. ம.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க ரூ.50கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கவுரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம்.
நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைத்தான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். புலிகளை அழிக்க முடியாது.
.
உள்ளத்தில் உறுதியுடனும், லட்சியத்தில் உறுதியுடனும் இருந்து தொடர்ந்து போராடுவோம்.
12 தொகுதிகளில் அ.தி. மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.பெற்ற ஓட்டுக்களை விட அ.தி.மு.க. அதிகம் பெற்று இருக்கிறது. வரும் பொது தேர்தலில் எத்தனை கோடி கொடுத்தாலும் அ.தி.மு.க. அணி வெற்றிபெறும். தேர்தலில் பணநாயகம் நடந்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் இது நடக்காது.
நம் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது அவ நம்பிக்கை ஏற்பட்டு விடக்கூடாது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமங்கள் தோறும் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தமிழர்களின் வாழ்வுரி மைக்காகவும், ஈழ பிரச்சினை தீரவும் போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேறியது. இதன் விவரம் வருமாறு:-
நடந்து முடிந்த பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இலங்கை தமிழர்கள் அழிக்கப்பட்டு, கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வுகளை உதவி செய்ய ஐ.நா. மன்றத்தையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மா னங்கள் நிறைவேறியது.
கூட்டத்தில் மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, தொழிற்சங்க தலைவர் திருப்பூர் துரைசாமி, தேர்தல் பணி செயலாளர் மனோகரன், சேலம் நகர பொறுப்பாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் கோபால்ராஜ், சேலம் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஆன்டனி ஜார்ஜ், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், பூபதி, மணி, நல்லத்தம்பி, வாசுதேவன், ஜெயவேலு, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 50பேர் ஆனந்தராஜ் தலைமையில் வைகோ முன்னிலையில் ம.தி.முகவில் இணைந்தனர். இவர்களுக்கு வைகோ சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்க வில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கவில்லை. ம.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க ரூ.50கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கவுரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம்.
நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைத்தான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். புலிகளை அழிக்க முடியாது.
.
உள்ளத்தில் உறுதியுடனும், லட்சியத்தில் உறுதியுடனும் இருந்து தொடர்ந்து போராடுவோம்.
12 தொகுதிகளில் அ.தி. மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.பெற்ற ஓட்டுக்களை விட அ.தி.மு.க. அதிகம் பெற்று இருக்கிறது. வரும் பொது தேர்தலில் எத்தனை கோடி கொடுத்தாலும் அ.தி.மு.க. அணி வெற்றிபெறும். தேர்தலில் பணநாயகம் நடந்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் இது நடக்காது.
நம் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது அவ நம்பிக்கை ஏற்பட்டு விடக்கூடாது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமங்கள் தோறும் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தமிழர்களின் வாழ்வுரி மைக்காகவும், ஈழ பிரச்சினை தீரவும் போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேறியது. இதன் விவரம் வருமாறு:-
நடந்து முடிந்த பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இலங்கை தமிழர்கள் அழிக்கப்பட்டு, கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வுகளை உதவி செய்ய ஐ.நா. மன்றத்தையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மா னங்கள் நிறைவேறியது.
கூட்டத்தில் மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, தொழிற்சங்க தலைவர் திருப்பூர் துரைசாமி, தேர்தல் பணி செயலாளர் மனோகரன், சேலம் நகர பொறுப்பாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் கோபால்ராஜ், சேலம் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஆன்டனி ஜார்ஜ், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், பூபதி, மணி, நல்லத்தம்பி, வாசுதேவன், ஜெயவேலு, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 50பேர் ஆனந்தராஜ் தலைமையில் வைகோ முன்னிலையில் ம.தி.முகவில் இணைந்தனர். இவர்களுக்கு வைகோ சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.


















No comments:
Post a Comment