Tuesday, June 23, 2009

அசல் படத்தில் செகன்ட் ஹீரோயினா? பாவனா கோபம்!


அசல் படத்திலே நீங்க செகன்ட் ஹீரோயினாமேன்னு கேட்டா, போன்லேயே மிளகாப் பொடியை தூவுகிறார் பாவனா. “முதல்ல ஒரு ஹீரோயினுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிட்டாங்க. அப்புறம் இன்னொரு ஹீரோயினை கொஞ்சம் லேட்டா தேர்வு செஞ்சு அட்வான்ஸ் கொடுக்கிறாங்க. அப்படின்னா இரண்டாவதா அட்வான்ஸ் வாங்கினவங்க எல்லாரும் ரெண்டாவது ஹீரோயின் ஆயிருவாங்களா? நல்லாயிருக்கு சார் உங்க லாஜிக்கு” என்கிறார் காரசாரமாக.

ஐம்பது நாட்கள் கால்ஷீட் வேணும்னு கேட்டார் சரண் சார். வேறு படங்களுக்கு முன்னாடியே கொடுத்திருந்த தேதிகளையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து, ஐம்பது நாட்கள் ஒதுக்கி கொடுத்திருக்கேன். மலேசியா, லண்டன்லே ஷ¨ட்டிங். பொதுவாகவே வெளிநாட்டுக்கு போறதுன்னா ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த படம் சிவாஜி புரடக்ஷன் என்பதால் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கு. ஏன்னா பாரம்பரியமான கம்பெனியிலே நடிக்கறது பெருமைதானே என்றார் பாவ்ஸ்.

இனிமே தமிழ்லே கதையை மட்டும் கேட்டுட்டு நடிக்க போறதில்லே, அதிலே என்னோட கேரக்டருக்கு எந்தளவுக்கு இம்ப்பார்ட்டன்ஸ் இருக்குன்னு கேட்டுதான் நடிப்பேன்னு சபதம் போட்டிருந்தவர், அசல் விஷயத்தில் ஒரு நிபந்தனையும் போடவில்லையாம். பாவனாவோட கேரக்டரை மட்டும்தான் சொன்னாராம் சரண்.

இன்னொரு ஹீரோயின் படத்திலே இருந்தாலும், ஒரு பயமும் எனக்கு இல்லே. ஏன்னா என் கேரக்டரோட வெயிட் அப்பிடின்னார் பாவனா. படம் வரும்போது தெரிஞ்சிடப் போவது!

No comments:

Post a Comment