Monday, June 22, 2009

அஜ்மல் கூத்து-ஹோட்டலை மாத்து


அஜ்மலுடன் தான் தங்குவதால் ஹோட்டல் நிர்வாகம் முகம் சுளித்து காலி செய்யுமாறு கூறி விட்டதால் தற்போது ஹோட்டலை மாற்றி விட்டாராம் மீனாட்சி.

மும்பை புயல் மீனாட்சி, மதுரை மல்லியாக கருப்பசாமி குத்தகைதாரரில் பாவாடை, தாவணியில் வந்து வசீகரித்தார். ஆனால் இப்போது அவரைப் பார்ப்பவர்கள், கண்டிப்பாக இது கருப்பசாமியில் நடித்த மீனாட்சிதான் என்றால் நம்பவே மாட்டார்கள்.

அந்த அளவில் நடிப்பிலும், 'பாடி லாங்குவேஜிலும்' பெத்த மாற்றத்தைக் கண்டுள்ளார் மீனாட்சி.

கவர்ச்சியில் சக்கைப் போடு போடும் அவர் காதல் களியாட்டத்திலும் கலக்கி வருவதாக கூறப்படுகிறது.

வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் வழக்கமாக தங்குவார் மீனாட்சி. அதே ஹோட்டலில்தான் மலையாள நடிகர் அஜ்மலும் தங்குகிறார். இருவருக்கும் நட்பு ஏற்படவே, தடபுடலாக தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர்.

இது ஹோட்டல் நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை. இப்படியெல்லாம் நடந்தா கஸ்டமர்கள் முகம் சுளிப்பார்கள் எனக் கருதிய ஹோட்டல் நிர்வாகம், இடத்தை காலி செய்யுமாறு மீனாட்சியைக் கூறி விட்டதாம்.

இதனால் வேறு ஒரு ஹோட்டலுக்கு ஜாகை மாறி விட்டாராம் மீனாட்சி. ஆனால் அங்கும் இதே பிரச்சினையாம். இதனால் மறுபடியும் வேறு ஒரு ஹோட்டலுக்கு மாறியுள்ளாராம்.

No comments:

Post a Comment