Thursday, July 2, 2009

சம்பளத்தில் 10 சதவீதம் ஏழைகளுக்கு ஒதுக்குவேன் -சூர்யா


“நடிகர் சூர்யா “அகரம்” பவுண்டேஷன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, பள்ளிக்கூடங்கள் தத்தெடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். அடுத்து சம்பளத்தில் ஒரு தொகையை ஏழைகளுக்கு ஒதுக்கவும் முடிவு செய்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கான அறிமுகவிழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று சூர்யா பேசும்போது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். சூர்யா கூறியதாவது:-

எனது அடுத்த படத்தில் இருந்து சம்பளத்தில் 10 சதவீதத்தை ஏழைகளுக்கு வழங்குவேன். அந்த தொகையை தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் அளிப்பேன். அதன் மூலமாக ஏழை எளியவர்கள், ஆதரவற்றோர் போன்றோருக்கு அந்த பணம் செலவிடப்படும்.

மாதத்துக்கு ஒரு தடவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நேரத்தை செலவிடுவேன்.

No comments:

Post a Comment