Thursday, July 2, 2009

விலங்குகளை நேசித்த ஜாக்சன்-பண்ணை இல்லத்தில் சரணாலயம்

லாஸ் ஏஞ்சலெஸ்: இசைக்கு அடுத்து குழந்தைகள் மீதும், விலங்குகள் மீதும் அதீதா பாசம் வைத்திருந்தவர் ஜாக்சன். கலிபோர்னியா மாநிலத்தின் நெவர்லேன்ட் பள்ளத்தாக்குப் பகுதியில் அவர் அமைத்த பிரமாண்ட பண்ணை இல்லத்தில் சரணாலயம் ஒன்றையே நிறுவியிருந்தார்.

கலிபோர்னியாவின் நெவர்லேன்ட் பள்ளத்தாக்குப் பகுதியில் ஜாக்சனுக்குச் சொந்தமாக பிரமாண்ட பண்ணை இருந்தது.

இந்த பண்ணை 2800 ஏக்கர் பரப்பளவிலானது. முன்பு இங்கு பொழுதுபோக்கு பூங்கா ஒன்று இருந்தது. இந்த இடத்தை தனது பண்ணை இல்லமாக மாற்றிய ஜாக்சன் அங்கு பிரமாண்ட சரணாலயம் ஒன்றையும் அமைத்து பல்வேறு விலங்குகளையும் வளர்த்து வ்நதார்.

சிறு வயது முதலே ஜாக்சனுக்கு விலங்குகள் என்றால் பிரியம் அதிகம். கலிபோர்னியாவின் என்சினோ நகரில் ஆரம்பத்தில் ஜாக்சன் குடும்பம் வசித்து வந்தபோது, ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை விரும்பி வளர்த்து வந்தார் ஜாக்சன்.

அதேபோல ஜாக்சன் வளர்த்து வந்த சிம்பன்சி ஒன்றும் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. காரணம், அதை தனது குழந்தை என்று ஜாக்சன் வர்ணித்ததால்தான்.

பப்பிள்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்த சிம்பன்சி ஜாக்சனை விட்டுப் பிரியாமல் இருந்து வந்தது. தனக்குத் தானே டிரஸ் போட்டுக் கொள்ளும், டாய்லெட் வந்தால் கண்ட இடத்தில் போகாமல் பாத்ரூமைப் பயன்படுத்தும், ஜாக்சனின் இசைக்கேற்ப ஆடவும் செய்யும். 80களில் மிகவும் பிரபலமாக இருந்தது இந்த சிம்பன்சி.

இதேபோல ஒட்டகச் சிவிங்கி, புலிகள் உள்ளிட்டவற்றையும் தனது சரணாலயத்தில் வளர்த்து வந்தார் ஜாக்சன். அவருக்கு பாம்புகள் என்றால் மிகவும் விருப்பம். ஏகப்பட்ட பாம்பு வகைகளையும் தனது பண்ணையில் வைத்திருந்தார்

No comments:

Post a Comment