
அட்வான்ஸ் வாங்கிய அடுத்த நொடியே இன்னொரு ஹீரோவுக்கு விஷயம் தெரிய, கடும் கோபம் அவருக்கு. வேட்டைக்காரனுக்கு கோபம் வந்தால், முயல்னு தெரியுமா? மானுன்னு புரியுமா? தனது ஐம்பதாவது படத்திலிருந்து அவரை உடனே தூக்குங்கள் என்று கூறிவிட்டாராம். பதறியடித்த நடிகை, நேரடியாக அவர் நடிக்கும் படப்பிடிப்பு ஏரியாவுக்கே போய் விட்டாராம். கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாக தகவல்.
அட்வான்சை திருப்பி கொடுத்திட்டு அப்புறம் சொல்லுங்க என்றாராம் ஹீரோ. எனக்கு இவருதான் முக்கியம். பிடிங்க ஒங்க அட்வான்சைன்னு திருப்பி கொடுத்திட்டு வந்திட்டாராம் நடிகை. தமன் ஆடாவிட்டாலும், வுமன் ஆடும்ங்கிற மாதிரி, கையை பிசைந்து கொண்டே கவலைப்படுகிறாராம் தாய்குலம். எழுபத்தைந்து லட்சம் போச்சே என்ற வருத்தம்தான்!
No comments:
Post a Comment