Thursday, July 2, 2009

படத்திலிருந்து நீக்கம்...ஹீரோவிடம் மன்னிப்பு கேட்ட நடிகை!

எட்டு லட்சத்தை மொத்தமாக பார்த்தாலே அல்லு சில்லாகி, சில்லு செதிலாகி போய்விடும் அந்த நடிகைக்கு! மெல்ல மெல்ல 40 லட்சம் வரை வளர்ந்திருக்கிறார். அவரிடம் போய் எழுபத்தைந்து லட்சம் தர்றோம். கால்ஷீட் கொடுங்கன்னு கேட்டால், முடியாதுன்னா சொல்வார்? அவசரப்பட்டு கையை நீட்டி அட்வான்சும் வாங்கிவிட்டாராம். ஆனால் இந்த படத்தில் இவர் சோலோ ஹீரோயின் இல்லை. மூவரில் ஒருவர்.

அட்வான்ஸ் வாங்கிய அடுத்த நொடியே இன்னொரு ஹீரோவுக்கு விஷயம் தெரிய, கடும் கோபம் அவருக்கு. வேட்டைக்காரனுக்கு கோபம் வந்தால், முயல்னு தெரியுமா? மானுன்னு புரியுமா? தனது ஐம்பதாவது படத்திலிருந்து அவரை உடனே தூக்குங்கள் என்று கூறிவிட்டாராம். பதறியடித்த நடிகை, நேரடியாக அவர் நடிக்கும் படப்பிடிப்பு ஏரியாவுக்கே போய் விட்டாராம். கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாக தகவல்.

அட்வான்சை திருப்பி கொடுத்திட்டு அப்புறம் சொல்லுங்க என்றாராம் ஹீரோ. எனக்கு இவருதான் முக்கியம். பிடிங்க ஒங்க அட்வான்சைன்னு திருப்பி கொடுத்திட்டு வந்திட்டாராம் நடிகை. தமன் ஆடாவிட்டாலும், வுமன் ஆடும்ங்கிற மாதிரி, கையை பிசைந்து கொண்டே கவலைப்படுகிறாராம் தாய்குலம். எழுபத்தைந்து லட்சம் போச்சே என்ற வருத்தம்தான்!

No comments:

Post a Comment