Thursday, July 2, 2009

இன்று முதல் ஞாபகங்கள்!

கவிஞர் பா. விஜய் தயாரித்து, நடித்துள்ள முதல் படமான ஞாபகங்கள் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.எல்லோரையும் போல ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை பா.விஜய்யையும் தொற்றிக் கொள்ள அவரும் ஹீரோவாகி விட்டார்.

ஞாபகங்கள் என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தை அவரே சொந்தமாக தயாரித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராமகிருஷ்ணா பட நாயகி ஸ்ரீதேவிகா நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

ஜீவன் இயக்கியுள்ள இப்படத்தின் கதை, பா.விஜய்யின் நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவமாம்.

இதுகுறித்து விஜய் கூறஉகையில், எனது நெருங்கிய நண்பர் ஒருவர் பெண் மீது காதல் கொ்டார். ஆனால் அந்தக் காதல் நீடிக்கவில்லை. அப்பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் கல்யாணமாகி விட்டது.

உடைந்த மனதுடன் சொந்த ஊருக்கு வந்தார் எனது நண்பர். கடைசியில் இறந்தும் போனார். இதை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியு்ளோம் என்றார்.

இப்படத்தில் ஸ்ரீதேவிகா சொந்தக் குரலில் பேசியுள்ளாராம். சினிமாவில் அவர் சொந்தக் குரலில் பேசி நடித்திருப்பது இதுவே முதல் முறையாம

No comments:

Post a Comment