Thursday, July 2, 2009

அடி ஆத்தாடி... இது பாணா காத்தாடி!


அடி ஆத்தாடின்னு வளர்ந்து நிக்கிறாரு அதர்வா. இவரை பொறுத்தமான படத்திலே நடிக்க வைக்கணும்னு காத்திருந்த முரளிக்கு, கிடைச்சதுதான் பாணா காத்தாடி! தமிழ்சினிமாவில் வயசே ஆகாத சில ஹீரோக்கள் வரிசையில் முரளிக்கு முதலிடம் கொடுக்கலாம். அவரு வீட்டிலேர்ந்து ஒரு வாரிசு வந்தால், குலவை போட்டு கொண்டாடலாமே?

முன்னணி நிறுவனம் ஒன்று நாங்களே உங்க வாரிசை அறிமுகப்படுத்துறோம் என்று முன் வந்தது. சந்தோஷமாக சம்மதித்த முரளிக்கு, அப்படம் வளராமல் போனதில் வருத்தம்தான். ஆனாலும், பாராம்பரிய நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அதர்வாவை ஹீரோவாக்க முன் வந்த போது முன்பை விட சந்தோஷம் முரளிக்கு.

இப்போதும், நமக்கு தெரியாத காத்தாடி கலவரங்கள் நடந்து வருகிறது சென்னையில். பந்தயம், பரபரப்பு என்று அங்கே நடக்கும் நிலவரங்களை அவதானித்து, புதிய கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் பாணா காத்தாடி படத்தின் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. இவர் மாஸ்கோவின் காவேரி, பூக்கடை ரவி படத்தின் கதாநாயகி. காத்தாடி சம்பந்தமான கதை என்பதால், குஜராத்தில் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் போட்டிக்கு சென்று படமாக்கப் போகிறார்களாம்.

முக்கியமான விஷயம் இன்னொன்று. இப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் பிரசன்னா. இவருக்கு நல்ல நடிகர் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அஞ்சாதே. இந்த படத்தில் கிடைத்த பெயரை, பாணா காத்தாடி மூலம் மீண்டும் அடைவார் என்கிறது சினிமா வட்டாரம்.

No comments:

Post a Comment