Thursday, July 2, 2009

நான் கடவுள் விவகாரம்: பாலாவுக்கு நோட்டீஸ்!

நான் கடவுள் படத்தில் ஊனமுற்றோரை பாலா இழிவுபடுத்திவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இயக்குநர் பாலாவுக்கு சென்னை மாநகர சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் என்ற படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப் படத்தில் நடிகர் ஆர்யா, நடிகை பூஜா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ஊனமுற்றோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஏராளமான ஊனமுற்றோர் இப்படத்தில் இதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக ஊனமுற்றோர் சங்கத்தின் சார்பில் சென்னை மாநகர சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஊன முற்றோரை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இயக்குநர் பாலா தரப்பில் வக்கீல்கள் ஆஜராவதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து வருகிற ஆகஸ்டு 3-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி பாலாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment