Thursday, July 2, 2009

விண்ணை தாண்டி வருவாயா? திடீர் சுணக்கத்தில் சிம்பு

வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தில் திடீர் சுணக்கம். கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ்சை கோயம்பேட்டுக்கு திருப்பிவிட்ட மாதிரி ஒரே அல்லோகலம் என்கிறார்கள். என்னவாம்?

தெலுங்கில் மகேஷ்பாபுவிடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் உடனே அல்ல. ஓரிரு மாதங்கள் கழித்துதான் இவரது படத்தில் நடிக்க வருவாராம் பாபுகாரு. விண்ணை தாண்டி வருவாயா கதையைதான் அவரிடமும் சொல்லியிருக்கிறார் கவுதம். தான் நினைத்தமாதிரி தெலுங்கு படம் நகர ஆரம்பித்தால் தமிழ், தெலுங்கு ரிலீசை ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது கவுதமின் கணக்கு.

ரஹ்மானின் தமிழ் ட்யூனையே தெலுங்குக்கும் பயன்படுத்திக் கொண்டால், ஆடியோ மார்கெட்டிலும் ஒரு அட்டகாச வசூலை பார்க்கலாமே? இப்படி அவர் போட்ட கணக்கில்தான் இந்த சுணக்கம். ஒருவேளை தமிழ் படத்தை முதலில் கொண்டு வந்து அது வேறு மாதிரியான ரிசல்ட்டை கொடுத்தால், மொத்த கதையையும் மாற்ற சொல்வார் மகேஷ்பாபு என்ற அச்சமும் இந்த ஒரே நேர ரிலீஸ் ஐடியாவுக்கு காரணமாம்.

இதற்கெல்லாம் சம்மதிக்க முடியாத சிக்கலில் இருக்கிறார் வி.தா.வ நாயகன் சிம்பு. இரு கெட்டப்புகளில் நடித்திருக்கும் இவர் ஒரு கெட்டப்பில் தாடி வைத்திருக்கிறாராம்! இதற்காக நீட்டலும் மழித்தலும் வேண்டா என்று ஒதுங்கியே இருக்கும் சிம்புவுக்கு தாடியை எடுப்பதா? அல்லது காத்திருப்பதா என்ற சிக்கலும் வந்திருக்கிறது. எது எப்படியோ? போடா போடி வேலையை துவங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் இப்போது.

No comments:

Post a Comment