Thursday, July 2, 2009

புரளியால் எனது காதல் தடம் புரண்டு போய் விட்டது - ஷாயாலி புலம்பல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை நான் காதலிப்பதாக வெளியான புரளிச் செய்தியால் எனது உண்மையான காதல் முறிந்து போய் விட்டது என்று புலம்பித் தவிக்கிறார் ஷாயாலி பகத்.

இந்திக்காரப் பொண்ணான ஷாயாலி தமிழிலும் முகம் காட்டியவர்தான். நியூட்டனின் 3ம் விதி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு போடி போட்டவர் ஷாயாலி.

இப்போது பெரும் புலம்பாலியாக மாறியுள்ளார் ஷாயாலி. ஏனாம்..

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை நான் விழுந்து விழுந்து காதலிப்பதாக பத்திரிகைகளில் எழுதித் தள்ளி விட்டார். ஆனால் இப்போது அவரை பிரிந்தும் விட்டதாக இன்னொரு கதையைக் கிளப்பி விட்டுள்ளனர்.

உண்மையில் எங்களுக்குள் காதலே கிடையாது. பிறகு எங்கே பிரிவது..

நானும், சோயிப்பும் ஓரிரு முறை காபி சாப்பிடப் போயுள்ளோம். அவ்வளவுதான். மற்றபடி இருவரும் பெரிய அளவில் சந்திக்கவே இல்லை.

இதில் கொடுமை என்னவென்றால், நான் உண்மையில் வேறு ஒருவரைக் காதலித்தேன். மாலிக்குடன் காதல் என்ற செய்தியால் எனது உண்மையான காதலர் பிரிந்து போய் விட்டார்.

ஏன்தான் இப்படி புரளி மேல் புரளியைக் கிளப்பி இப்படி வயிற்றெரிச்சலைக் கிளப்பிக் கொள்கிறார்களோ என்று புலம்புகிறார் ஷாயாலி..

ஷாயாலி புலம்பல் ரொம்ப நியாயமாவுல்ல இருக்கு..

No comments:

Post a Comment