Thursday, July 2, 2009

அசின்-நயன்தாரா... அப்பா, அம்மா இம்சைகள்!


ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள். எப்பவும் அசினோடு ஒட்டிக் கொண்டே திரியும் அவரோட அப்பாவான மிஸ்டர் தோட்டம் கல், இப்போது தோட்டத்திலே கல்லு பொறுக்குகிற வேலைக்காவது போகலாமான்னு யோசிக்கிற அளவுக்கு சும்மாதான் இருக்காரு. ஏன்? இந்தி வாலாக்களுக்கு அசினை பிடிச்ச அளவுக்கு அவங்க அப்பாவை பிடிக்கலே! அவரு எதுக்கு எப்பவுமே உங்க கூட வர்றாரு. செக்யூரிடியான்னு கேட்கிற அளவுக்கு கிண்டல்! வேற வழியில்லாம “என் வேலைய நான் பார்க்கிறேன். நீங்க எதுக்கு?” என்று கூறிவிட்டாராம் அசின்.

இன்னொரு சம்பவம்?

எப்பவுமே பெண்ணை தனியாகவே அனுப்பி பழகிய நயன்தாராவின் பெற்றோர்கள், தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதுதான். எந்த பத்திரிகையை திருப்பினாலும், நயன்தாரா பற்றிய தப்பு தப்பான செய்திகள். காதல், கத்தரிக்காய் என்று கூடை கூடையாக கெட்ட பேர். வேறு வழியில்லாமல் இனி எங்கு போனாலும் நாங்களும் வர்றோம் என்று கூறிவிட்டார்களாம்.

எதுக்கு உங்களுக்கு சிரமம்னு பொண்ணு சண்டை போட்டாலும் விடாப்பிடியா அவங்க வர்றது நயன்தாராவுக்கும் பிடிக்கலே. இவரை வச்சு படம் எடுக்கிறவங்களுக்கும் பிடிக்கலே. ஃபிளைட் பயணத்திலே ஆரம்பிச்சு, போர்ட்டிங், லாட்ஜிங்குன்னு பில்லு மும்மடங்காக ஆனதுதான் இந்த பிடிக்கலேவுக்கு காரணாமாம்.

கால்கட்டு போட்டா சினிமா கைவிட்டு போயிரும். கால் கட்டு போடலேன்னா பொண்ணே கைவிட்டு போயிரும். எதை செய்யுறதுன்னு ஒரே குழப்பமாம் அவங்க அப்பா அம்மாவுக்கு!

No comments:

Post a Comment