
பொக்கிஷத்தை முதல் காப்பி அடிப்படையில் உருவாக்கி வரும் சேரன், சின்ன சின்ன காட்சிகளுக்காக கூட நாள் கணக்கில் செலவிடுகிறாராம். பட்ஜெட்டை மீறினால் தனது கையிலிருந்துதான் செலவழிக்க வேண்டும் என்பது தெரிந்தும் செலவு செய்வது அவரது நேர்த்திக்கு அடையாளம்! பாராட்டுகள். ஆனால் ஒரு விஷயத்தில் அடம் பிடிப்பதைதான் பொறுக்க முடியாமல் தவிக்கிறாராம் தயாரிப்பாளர்.
கதை கனமாக இருந்தாலும் வடிவேலு மாதிரி யாராவது இருந்தால்தானே ரசிக்க முடியும்? இது தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கின் ஆசை. வைகை புயல் உள்ளே வந்து வேகமாக வீசினால் கதையே சேதாரம் ஆகிவிடும் என்பது சேரனின் சமாதானம். இந்த இழுபறியில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறார்கள். வெற்றிக் கொடி கட்டு போன்ற படங்களில் வடிவேலுவையும் வைத்துக் கொண்டு கதையையும் நேர்த்தியாக சொன்னாரே? அதுபோல இப்போதும் சொல்ல முடியாதா என்ன? ஞாயமாதான் இருக்கு!
No comments:
Post a Comment