Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Monday, June 29, 2009

அரசியலுக்கு வர்றார் அஜித் : கிளப்பும் மீடியாக்கள்


மலேசியாவில் 'அசல்' படப்பிடிப்பில் சிவனேன்னு தனது வேலையை செய்து வருகிறார் அஜித்.
அதற்குள் அவர் அரசியலுக்கு வரப்போவதாக வாரஇதழ் ஒன்று பரபரப்பை பற்றவைத்துள்ளது.

தனது ரசிகர்மன்றத்தை மக்கள் இயக்கமாக இன்று ஆரம்பித்திருக்கலாம் விஜய். ஐந்து வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றம் இயக்கமாக செயல்படும் என அறிவித்தார் அஜித். "இயன்றதைச் செய் இல்லாதவருக்கு" என்பதுதான் தனது இயக்கத்துக்கு அஜித் சொல்லிக்கொடுத்த மந்திரம். தமிழகத்தில் மட்டும் அஜித்துக்கு 35 ஆயிரம் மன்றங்களும், எண்ணிக்கையில் கோடியை தாண்டும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் தன்னை எளிதான முறையில் தொடர்பு கொள்ளவும் இயக்கத்தை பலப்படுத்தவும் சில திட்டங்களை தீட்டியுள்ளாராம் அஜித். அதன்படி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரசிகர்களுடன் பேசி சமூக பணிகளை முடுக்கி விடும் எண்ணம் அஜித்திடம் உள்ளது.

இதனை வைத்துக்கொண்டு விஜய் பாணியில் அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற தோற்றத்தில் வாரஇதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அஜித் தரப்பில் நாம் விசாரித்தபோது, 'அஜித்திடம் அப்படியொரு எண்ணம் இருந்ததும் இல்லை இருக்கப்போறதும் இல்லை. கடந்த 15 வருடங்களில் மட்டும் அஜித் செய்த உதவியினால் உயிர் பிழைத்தவர்கள் நிறைய. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு விளக்கேற்றிவைத்த பெரிய மனசுக்காரர். ஆனால் செய்த உதவிகளை விளம்பரம் செய்து கொண்டதே இல்லை. இதுதான் அவருக்கு ஆத்மதிருப்தியை தருகிறது. அப்படிப்பட்டவருக்கு அரசியல் ஆசையெல்லாம் வராது" என்றார்.

"ஒருவேளை அஜித் அரசியலுக்கு வந்தாலும் சந்தோஷமே! கக்கன், காமராஜர் வழியில் அப்பழுக்கற்ற ஒரு அரசியல் தலைவர் தமிழகத்திற்கு கிடைக்கும்" என்கிறார் ரசிகர் ஒருவர்.

Tuesday, June 23, 2009

அசல் படத்தில் செகன்ட் ஹீரோயினா? பாவனா கோபம்!


அசல் படத்திலே நீங்க செகன்ட் ஹீரோயினாமேன்னு கேட்டா, போன்லேயே மிளகாப் பொடியை தூவுகிறார் பாவனா. “முதல்ல ஒரு ஹீரோயினுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிட்டாங்க. அப்புறம் இன்னொரு ஹீரோயினை கொஞ்சம் லேட்டா தேர்வு செஞ்சு அட்வான்ஸ் கொடுக்கிறாங்க. அப்படின்னா இரண்டாவதா அட்வான்ஸ் வாங்கினவங்க எல்லாரும் ரெண்டாவது ஹீரோயின் ஆயிருவாங்களா? நல்லாயிருக்கு சார் உங்க லாஜிக்கு” என்கிறார் காரசாரமாக.

ஐம்பது நாட்கள் கால்ஷீட் வேணும்னு கேட்டார் சரண் சார். வேறு படங்களுக்கு முன்னாடியே கொடுத்திருந்த தேதிகளையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து, ஐம்பது நாட்கள் ஒதுக்கி கொடுத்திருக்கேன். மலேசியா, லண்டன்லே ஷ¨ட்டிங். பொதுவாகவே வெளிநாட்டுக்கு போறதுன்னா ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த படம் சிவாஜி புரடக்ஷன் என்பதால் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கு. ஏன்னா பாரம்பரியமான கம்பெனியிலே நடிக்கறது பெருமைதானே என்றார் பாவ்ஸ்.

இனிமே தமிழ்லே கதையை மட்டும் கேட்டுட்டு நடிக்க போறதில்லே, அதிலே என்னோட கேரக்டருக்கு எந்தளவுக்கு இம்ப்பார்ட்டன்ஸ் இருக்குன்னு கேட்டுதான் நடிப்பேன்னு சபதம் போட்டிருந்தவர், அசல் விஷயத்தில் ஒரு நிபந்தனையும் போடவில்லையாம். பாவனாவோட கேரக்டரை மட்டும்தான் சொன்னாராம் சரண்.

இன்னொரு ஹீரோயின் படத்திலே இருந்தாலும், ஒரு பயமும் எனக்கு இல்லே. ஏன்னா என் கேரக்டரோட வெயிட் அப்பிடின்னார் பாவனா. படம் வரும்போது தெரிஞ்சிடப் போவது!