Showing posts with label ஜாக்சன். Show all posts
Showing posts with label ஜாக்சன். Show all posts

Thursday, July 2, 2009

ஜாக்சன் உடல் அடக்கம் நெவர்லேன்டில் கிடையாது - ரசிகர்கள் ஏமாற்றம்

லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சனின் உடல் அவரது பண்ணையான நெவர்லேன்டில் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது இன்னும் முடிவாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குவிந்துள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஜாக்சன் மரணம் குறித்த சர்ச்சையால் அவரது உடலை ரசிகர்கள் பார்வைக்கு வைப்பது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் நாளை ஜாக்சனின் உடல் அவரது பண்ணையான நெவர்லேன்டில் பார்வைக்கு வைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

ஏற்கனவே இதை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெவர்லேன்டில் குவிந்துள்ளனர். நாளை ஜாக்சனின் உடலை கடைசி முறையாக தரிசித்து விட வேண்டும் என ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆனால் இப்போது திடீரென அந்தத் திட்டம் ரத்தாகி விட்டதாம். இதுகுறித்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்னர்.

உடல் அடக்கம் குறித்து ஜாக்சன் குடும்ப செய்தித் தொடர்பாளர் கென் சன்ஷைன் கூறுகையில், வெள்ளிக்கிழமை வரை நெவர்லேன்டில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் இல்லை, அப்படி ஒரு திட்டமும் இதுவரை இல்லை என்றார்.

இதற்கிடையே, லாஸ் ஏஞ்சலஸிலேயே ஜாக்சனின் உடல் அடக்கம் நடைபெறும் எனவும் ஒரு தகவல் கூறுகிறது.

நெவர்லேன்ட் எஸ்டேட்டுக்கு ஜாக்சன் மட்டும் உரிமையாளர் இல்லை. தாமஸ் பாரக் என்ற கோடீஸ்வரரும் இதில் பங்குதாரர் ஆவார். எனவ அவரிடம் ஜாக்சன் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாம். இருப்பினும் இதுதொடர்பாக சிக்கல் நிலவுவதால்தான் அங்கு உடல் அடக்கம் நடைபெறாது எனக் கூறப்படுகிறது.

ஜாக்சன் வீட்டில் சக்தி வாய்ந்த மருந்து கண்டுபிடிப்பு..

இதற்கிடையே, அறுவைச் சிகிச்சை போன்ற சமயங்களில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மயக்க மரு்நது ஒன்று ஜாக்சன் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டால் உயிருக்கே உலை வைத்து விடுமாம்.

அந்த மருந்தின் பெயர் புரபோபால். அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இந்த மருந்து நோயாளிகளுக்கு அளிக்கப்படுவது வழக்கம். ஆனாலும் அளவு அதிகமாகி விட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

இந்த மருந்து ஜாக்சன் வீட்டில் இருந்ததாக ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது. இது எப்படி ஜாக்சன் வீட்டுக்கு வந்தது. இதை ஜாக்சன் பயன்படுத்தி வந்தாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஜாக்சன் தாயாரிடம் குழந்தைகள்-தற்காலிக ஒப்படைப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: மறைந்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகள் ஜாக்சனின் தாயார் காத்ரினிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் சமீபத்தில் மறைந்தார். அவரது மறைவில் பல சந்தேகங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து அவரது மூன்று குழந்தைகளான பிரின்ஸ் மைக்கேல் (12), பாரிஸ் மைக்கேல் (11) மற்றும் பிரின்ஸ் மைக்கேல் (7) ஆகியோரை யாரின் பராமரிப்பில் வளர்ப்பது என்ற கேள்வியும் எழுந்தது.

இதையடுத்து ஜாக்சனின் குடும்ப வக்கீல் குழந்தைகள் ஜாக்சனின் தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அப்போது, ஜாக்சனின் மறைவுக்கு பின் அந்த குழந்தைகளை பாதுகாத்து வரும் ஜாக்சனின் தாயார் காத்ரின் ஜாக்சனிடம் அவர்களை தற்காலிகமாக ஒப்படைக்க உத்தரவிடுவதாக நீதிபதி மிட்செல் பெக்லாப் தீர்ப்பளித்தார்.

அதேபோல், ஜாக்சனின் சொத்துக்களுக்கும் அவரது தாயாரை பாதுகாவலராக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்த மைக்கேல் ஜாக்சனின் குடும்ப செய்தி தொடர்பாளரான வக்கீல் லான்டெல் மெக்மிலன் கூறுகையில்,

முதல் இரண்டு குழந்தைகளுக்கு தாயான மைக்கேல் ஜாக்சனின் இரண்டாவது மனைவியான டெபோரா ரோ இதுவரை குழந்தைகளை கேட்கவில்லை. இந்த குழந்தைகளை அவரிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு தீங்கு விளையலாம்.

அந்த குழந்தைகள் தங்களது பாட்டியிடம் இருப்பது அவர்களுக்கு நல்லது. ஜாக்சனின் தாயார் மற்ற குழந்தைகளிடமே அன்புடன் இருக்க கூடியவர். தனது பேரக் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்வார் என்றார்.

இன்று உயில் பிரிக்கப்படும்...

ஜாக்சனின் மானேஜர் பிராங் டி லியோ கூறுகையில், ஜாக்சனின் உயில் இன்று பிரித்து பார்க்கப்படும். அதில் அவரது விருப்பங்களும், குழந்தைகள், தாயார் ஆகியோருக்கு அவர் ஒதுக்கியிருக்கும் பணம். தனது மறைவுக்கு பின் தனது குழந்தைகள் யாருடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளிட்டவை தெரிய வரும்.

ஜாக்சன் தனது தாய் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரது குழந்தைகள் தொடர்ந்து அவரிடம் இருப்பது தான் நல்லது என்றார். ஆனால், அந்த உயில் எப்போது தயாரிக்கப்பட்டது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் முதல் இரண்டு குழந்தைகளும்ஜாக்சனுக்கு பிறக்கவில்லை என கூறிய ஜாக்சனின் இரண்டாவது மனைவி டெபோரா ரோவின் வக்கீல் கூறுகையில்,

தற்போது டெபோரா, ஜாக்சனின் மறைவினால் அந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தான் அதிகம் சிந்தித்து வருகிறார். அந்த குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நல்லபடியாக இருக்க வேண்டும், ஜாக்சனின் ஆத்ம சாந்தி அடைய வேண்டும் என அவர் விரும்புகிறார்.

உடல் அடக்கம் தாமதமாகும்-தந்தை...

மைக்கேல் ஜாக்சன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து அவரது குடும்பத்தார் அவரது உடலுக்கு இரண்டாவது முறையாக் பிரேத்யேக டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர்.

இதன் அறிக்கை வந்த பின்னர் தான் அவரது உடல் அடக்கம் செயயப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த அறிக்கை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அவரது உடல் அடக்கமும் தள்ளி வைக்கப்படுவதாக தெரிகிறது.

இது குறித்து ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் கூறுகையில்,

ஜாக்சன் உடல் எப்போது அடக்கம் செய்யப்படும் என தற்போது கூற முடியாது. இன்னும் சில நாட்கள் ஆகலாம். இறுதி சடங்கு தொடர்பாக இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றார்.

என் குழந்தைகளின் தந்தை ஜாக்சன் அல்ல-டெபோரா ரோ

லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சனுக்கும், எனக்கும் இடையே பிறந்ததாக கருதப்படும் எனது இரு குழந்தைகளுக்கும் உண்மையான தந்த மைக்கேல் ஜாக்சன் அல்ல. செயற்கை முறையில் கருத்தரித்தே இந்தக் குழந்தைகளை நான் பெற்றேன் என்று கூறியுள்ளார் ஜாக்சனின் 2வது மனைவியான டெபோரா ரோ.

டெபோரா ஒரு நர்ஸ் ஆவார். மைக்கேல் ஜாக்சனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அவரைக் கவனித்துக் கொள்வதற்காக வந்தவர். ஜாக்சன், டெபோரா மீது காதல் கொண்டு அவரை மணந்து கொண்டார்.

இந்தத் தம்பதிக்கு பாரீஸ் மற்றும் பிரின்ஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்தக் குழந்தைகள் இருவரும் ஜாக்சன் வசமே இருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஜாக்சன் தந்தை அல்ல. செயற்கை முறையில் கருத்தரித்தே இவர்களைப் பெற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் டெபோரா.

இதுகுறித்து டெபோரா அளித்துள்ள பேட்டியில், இரு குழந்தைகளையும் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து பெறப்பட்ட விந்தனுவைக் கொண்டு செயற்கை முறையில் கருத்தரித்தே நான் பெற்றேன்.

இருவருக்கும் தந்தை மைக்கேல் இல்லாவிட்டாலும் கூட நான்தான் தாய். எனவே இருவரையும் நானே வளர்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் டெபோரா.

பாடப்படாத 200 பாடல்கள்..

இதற்கிடையே, மைக்கேல் ஜாக்சன் தானே எழுதி, இசையமைத்த 200 பாடல்களை வைத்து விட்டுச் சென்றுள்ளாராம்.

இவை ஒருமுறை கூட பாடப்படாதவை. இவை தனக்குப் பின்னால் தனது குழந்தைகளுக்காக இருக்கட்டும் என கூறி வந்தாராம் ஜாக்சன்.

விலங்குகளை நேசித்த ஜாக்சன்-பண்ணை இல்லத்தில் சரணாலயம்

லாஸ் ஏஞ்சலெஸ்: இசைக்கு அடுத்து குழந்தைகள் மீதும், விலங்குகள் மீதும் அதீதா பாசம் வைத்திருந்தவர் ஜாக்சன். கலிபோர்னியா மாநிலத்தின் நெவர்லேன்ட் பள்ளத்தாக்குப் பகுதியில் அவர் அமைத்த பிரமாண்ட பண்ணை இல்லத்தில் சரணாலயம் ஒன்றையே நிறுவியிருந்தார்.

கலிபோர்னியாவின் நெவர்லேன்ட் பள்ளத்தாக்குப் பகுதியில் ஜாக்சனுக்குச் சொந்தமாக பிரமாண்ட பண்ணை இருந்தது.

இந்த பண்ணை 2800 ஏக்கர் பரப்பளவிலானது. முன்பு இங்கு பொழுதுபோக்கு பூங்கா ஒன்று இருந்தது. இந்த இடத்தை தனது பண்ணை இல்லமாக மாற்றிய ஜாக்சன் அங்கு பிரமாண்ட சரணாலயம் ஒன்றையும் அமைத்து பல்வேறு விலங்குகளையும் வளர்த்து வ்நதார்.

சிறு வயது முதலே ஜாக்சனுக்கு விலங்குகள் என்றால் பிரியம் அதிகம். கலிபோர்னியாவின் என்சினோ நகரில் ஆரம்பத்தில் ஜாக்சன் குடும்பம் வசித்து வந்தபோது, ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை விரும்பி வளர்த்து வந்தார் ஜாக்சன்.

அதேபோல ஜாக்சன் வளர்த்து வந்த சிம்பன்சி ஒன்றும் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. காரணம், அதை தனது குழந்தை என்று ஜாக்சன் வர்ணித்ததால்தான்.

பப்பிள்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்த சிம்பன்சி ஜாக்சனை விட்டுப் பிரியாமல் இருந்து வந்தது. தனக்குத் தானே டிரஸ் போட்டுக் கொள்ளும், டாய்லெட் வந்தால் கண்ட இடத்தில் போகாமல் பாத்ரூமைப் பயன்படுத்தும், ஜாக்சனின் இசைக்கேற்ப ஆடவும் செய்யும். 80களில் மிகவும் பிரபலமாக இருந்தது இந்த சிம்பன்சி.

இதேபோல ஒட்டகச் சிவிங்கி, புலிகள் உள்ளிட்டவற்றையும் தனது சரணாலயத்தில் வளர்த்து வந்தார் ஜாக்சன். அவருக்கு பாம்புகள் என்றால் மிகவும் விருப்பம். ஏகப்பட்ட பாம்பு வகைகளையும் தனது பண்ணையில் வைத்திருந்தார்

ஜாக்சனின் கடைசிக் கோலம்-முடி கொட்டி, மூக்கு நசுங்கி, எலும்பும் தோளுமாய் இருந்த பரிதாபம்!

லாஸ் ஏஞ்சலெஸ்: பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை லீக் ஆகியுள்ளது. முடி கொட்டி வழுக்கைத் தலையுடன், வயிற்றில் எந்தவித உணவுப் பொருளும் இல்லாமல், வெறும் மருந்துகள் மட்டுமே இருந்ததாகவும், மிகப் பரிதாபமான கோலத்தில், வெறும் எலும்புக் கூடாக ஜாக்சன் காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தி சன் பத்திரிக்கை ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்களை கசிய விட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சியூட்டும் வகையி்ல் உள்ளது.

உலகையே தனது ஆட்டத்தாலும், திறமையாலும் கட்டிப் போட்டு வைத்திருந்த ஜாக்சன், கடைசி நாட்களில் எலும்பும் தோளுமாய், எடை குறைந்து போய், தலையில் முடி கொட்டி வழுக்கைத் தலையுடன் பரிதாபமான நிலையில் இருந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்கள் ..

கிட்டத்தட்ட ஒரு எலும்புக் கூட்டைப் பார்ப்பது போலவே இருந்தது ஜாக்சனின் உடல். அந்த அளவுக்கு எடை குறைந்து போய் மிகவும் மெலிந்து காணப்பட்டார் ஜாக்சன்.

தலையில் முடி கொட்டி வழுக்கையாக காணப்பட்டது. இதை மறைக்க அவர் விக் அணிந்து வந்துள்ளார். அவரது உடல் முழுக்க ஊசி போட்ட அடையாளங்கள் காணப்பட்டன.

மைக்கேல் ஜாக்சன் இறந்தபோது அவரது உடல் எடை வெறும் 50 கிலோவாக மட்டுமே இருந்தது. அவரது வயிறு காலியாக இருந்தது. அதில் கடைசியாக சாப்பிட்ட சில மாத்திரைகள் மட்டுமே இருந்தன.

ஜாக்சன் தினசரி ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இதனால்தான் எடை வெகுவாக குறைந்து போய் விட்டது. சில நேரம் சாப்பிடக் கூட மாட்டாராம்.

தினசரி மூன்று வேளை அவர் பெயின் கில்லர்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். இவை ஊக்கமருந்து கலந்தவை. இந்த ஊசியை தானே போட்டுக் கொள்வது வழக்கம் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே உடலின் பல இடங்களிலும் ஊசி போடப்பட்ட அடையாளங்கள் தெரிகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் 13 முறை காஸ்மெட்டிக் அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளார் ஜாக்சன். அவற்றுக்கான அடையாளத் தழும்புகளும் உடலில் உள்ளன.

ஜாக்சனின் உயரம் 180 செமீ ஆகும். கடைசியாக அவர் பயன்படுத்திய பெயின் கில்லர் ஊசி மருந்துதான் மரணத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும். இதை உறுதி செய்ய டாக்சிகாலஜி சோதனைகள் செய்யப்படவுள்ளன.

பெப்சி விளம்பரத்தின்போது நடந்த சிறிய தீவிபத்தில் அவரது இடது காதுக்கு மேல் பகுதி முடி கருகிப் போய் விட்டது. அதுதொடர்பான அடையாளம் காணப்பட்டது.

ஜாக்சனின் மார்புப் பகுதியில் நான்கு ஊசி போட்ட அடையாளங்கள் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டபோது அவருடைய இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க போடப்பட்ட அட்ரீனலின் ஊசியாக அவை இருக்கக் கூடும்.

ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு துடித்தபோது அவரை பிழைக்க டாக்டர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சியின்போது அவரது விலா எலும்பில் சில முறிந்துள்ளன.

அவரது முழங்கால்கள், கன்னம் ஆகியவற்றில் லேசான காயங்கள் உள்ளன. இவற்றுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. முதுகில் சில வெட்டுக் காயங்களும் காணப்படுகின்றன.

ஜாக்சனின் வலது பக்க மூக்கு கிட்டத்தட்ட நசுங்கிப் போய் விட்டது. மூக்கின் வலது மற்றும் இடது புறங்களை இணைக்கும் எலும்புப் பகுதியையே காணவில்லை.
பிளாஸ்டிக் சர்ஜரியால் வந்த வினை இது என்று கருதப்படுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஜாக்சன் துடித்ததை நடிப்பு என நினைத்த மகன்..

இதற்கிடையே ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து துடித்தபோது, அதை நடிப்பு என நினைத்துள்ளார் அவரது மூத்த மகன் பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்.

இதுகுறித்து ஜாக்சனின் பயோகிராபர் ஸ்டேஸி பிரவுன் கூறுகையில், தனது தந்தை ஏதோ நடிக்கிறார் என்று பிரின்ஸ் நினைத்து விட்டான். அவனுக்கு உண்மை என்னவென்று புரியவில்லை. பிறகு டாக்டர்கள் வந்து பார்த்தபோதுதான் ஏதோ நடக்கிறது என்று அவனுக்குப் புரிந்தது.

அதன் பின்னர் ஜாக்சனுக்கு அருகிலேயே இருந்து அனைத்தையும் கூர்ந்து கவனித்தான் பிரின்ஸ் என்று கூறியுள்ளார்

தாகூரை படித்த ஜாக்சன்-ரஹ்மானுடன் இணையவும் விரும்பினார்


பாப் மேதை மைக்கேல் ஜாக்சன் தனது வாழ்நாளின் கடைசி நாட்களி்ல் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை விரும்பிப் படித்து வந்துள்ளார். மேலும், இந்திய இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றவும் ஆர்வத்தோடு இருந்தாராம்.

ரஹ்மானுடன் இணைந்து புதிய ஆல்பம் ஒன்றை வெளியிடும் திட்டத்தில் அவர் தீவிரமாக இருந்துள்ளார். ஆனால் எல்லாமே கை கூடாமல் போய் விட்டது.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தி்ல் ரஹ்மானின் இசையை பார்த்துப் பிரமித்துப் போயே, ரஹ்மானுடன் இணைய ஜாக்சன் ஆர்வம் கொண்டாராம்.

தாகூரின் படைப்புகள் ஜாக்சனை வெகுவாக கவர்ந்து விட்டதாம். இதன் மூலம் இந்தியாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் அவர் ஆர்வம் காட்டினாராம்.

இதுகுறித்து ரஹ்மானுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸில் நடந்த ஆஸ்கர் விருது விழாவின்போது ஜாக்சனை சந்தித்தார் ரஹ்மான். அப்போது ரஹ்மானிடம் தனது அடுத்த ஆல்பத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஜாக்சன் கோரிக்கை வைத்தார்.

இந்த ஆல்பத்தில் இந்திய உணர்வுகளை அதிகம் இடம் பெறச் செய்யவும் ஜாக்சன் திட்டமிட்டிருந்தார். இந்த ஆல்பம் தொடர்பாக அட்னான் சமியுடனும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ஜாக்சன். இந்திய இசைக் கருவிகளான டோலக்கு, தபலா, சாரங்கி ஆகியவற்றையும் பயன்படுத்த திட்டமிட்டிருந்தார் ஜாக்சன் என்றார் அவர்.

யுனிட்டி ஆன்தம் (unity anthem) என்று இந்த ஆல்பத்திற்கு பெயரிட்டிருந்தார் ஜாக்சன். ஏற்கனவே ஜாக்சனும், ரஹ்மானும் ஏகம் சத்யம் என்ற பெயரிலான இசை வடிவத்திற்காக இணைந்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

இந்திய இசைப் பக்கம் ஜாக்சனின் கவனத்தை திருப்பியவர்களில் முக்கியமானவர் ஜாக்சனின் அண்ணனான ஜெர்மைன் ஜாக்சன்தான். அதற்கு முக்கிய காரணம், ஜெர்மைனின் மனைவி ஹலிமா சண்டிகரில் சில காலம் வசித்தவர் என்பதால்.

இதை விட முக்கியமாக ஜாக்சன், கடந்த சில ஆண்டுகளாக இந்து மதம் குறித்தும் ஆர்வம் கொண்டிருந்தாராம். அதுதொடர்பான நூல்களையும் படித்து வந்தாராம்.

இதுகுறித்து சர்வதேச இந்து கழகம் என்ற அமைப்பின் தலைவர் ராஜன் செத் கூறுகையில், தியானம் செய்வது எப்படி என்பது குறித்து ஜாக்சன் படித்து வந்தார். மேலும் ஒரு சுத்த சைவமாகவும் அவர் இருந்தார்.

நான் ஒரு முறை அவரை சந்திக்க நேர்ந்தபோது இந்துக் கடவுள்களான கணேசர், நடராஜர் ஆகியோரின் சிலைகளைக் கொடுத்து விளக்க முயன்றேன். அப்போது எனக்கு நன்றாக தெரியுமே என்றபோது நான் வியந்து போனேன்.

ஒரு முறையாவது அன்னை தெரசாவை சந்தித்து விட வேண்டும் என்று தீராத ஆசையுடன் இருந்தார். ஆனால் நிறைவேறவே இல்லை.

இந்தியா குறித்து மிகவும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார் ஜாக்சன் என்றார்.

Monday, June 29, 2009

ஜாக்சனின் கடைசிக் கோலம்-முடி கொட்டி, மூக்கு நசுங்கி, எலும்பும் தோளுமாய் இருந்த பரிதாபம்!

Michael Jackson
லாஸ் ஏஞ்சலெஸ்: பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை லீக் ஆகியுள்ளது. முடி கொட்டி வழுக்கைத் தலையுடன், வயிற்றில் எந்தவித உணவுப் பொருளும் இல்லாமல், வெறும் மருந்துகள் மட்டுமே இருந்ததாகவும், மிகப் பரிதாபமான கோலத்தில், வெறும் எலும்புக் கூடாக ஜாக்சன் காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தி சன் பத்திரிக்கை ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்களை கசிய விட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சியூட்டும் வகையி்ல் உள்ளது.

உலகையே தனது ஆட்டத்தாலும், திறமையாலும் கட்டிப் போட்டு வைத்திருந்த ஜாக்சன், கடைசி நாட்களில் எலும்பும் தோளுமாய், எடை குறைந்து போய், தலையில் முடி கொட்டி வழுக்கைத் தலையுடன் பரிதாபமான நிலையில் இருந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்கள் ..

கிட்டத்தட்ட ஒரு எலும்புக் கூட்டைப் பார்ப்பது போலவே இருந்தது ஜாக்சனின் உடல். அந்த அளவுக்கு எடை குறைந்து போய் மிகவும் மெலிந்து காணப்பட்டார் ஜாக்சன்.

தலையில் முடி கொட்டி வழுக்கையாக காணப்பட்டது. இதை மறைக்க அவர் விக் அணிந்து வந்துள்ளார். அவரது உடல் முழுக்க ஊசி போட்ட அடையாளங்கள் காணப்பட்டன.

மைக்கேல் ஜாக்சன் இறந்தபோது அவரது உடல் எடை வெறும் 50 கிலோவாக மட்டுமே இருந்தது. அவரது வயிறு காலியாக இருந்தது. அதில் கடைசியாக சாப்பிட்ட சில மாத்திரைகள் மட்டுமே இருந்தன.

ஜாக்சன் தினசரி ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இதனால்தான் எடை வெகுவாக குறைந்து போய் விட்டது. சில நேரம் சாப்பிடக் கூட மாட்டாராம்.

தினசரி மூன்று வேளை அவர் பெயின் கில்லர்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். இவை ஊக்கமருந்து கலந்தவை. இந்த ஊசியை தானே போட்டுக் கொள்வது வழக்கம் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே உடலின் பல இடங்களிலும் ஊசி போடப்பட்ட அடையாளங்கள் தெரிகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் 13 முறை காஸ்மெட்டிக் அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளார் ஜாக்சன். அவற்றுக்கான அடையாளத் தழும்புகளும் உடலில் உள்ளன.

ஜாக்சனின் உயரம் 180 செமீ ஆகும். கடைசியாக அவர் பயன்படுத்திய பெயின் கில்லர் ஊசி மருந்துதான் மரணத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும். இதை உறுதி செய்ய டாக்சிகாலஜி சோதனைகள் செய்யப்படவுள்ளன.

பெப்சி விளம்பரத்தின்போது நடந்த சிறிய தீவிபத்தில் அவரது இடது காதுக்கு மேல் பகுதி முடி கருகிப் போய் விட்டது. அதுதொடர்பான அடையாளம் காணப்பட்டது.

ஜாக்சனின் மார்புப் பகுதியில் நான்கு ஊசி போட்ட அடையாளங்கள் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டபோது அவருடைய இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க போடப்பட்ட அட்ரீனலின் ஊசியாக அவை இருக்கக் கூடும்.

ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு துடித்தபோது அவரை பிழைக்க டாக்டர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சியின்போது அவரது விலா எலும்பில் சில முறிந்துள்ளன.

அவரது முழங்கால்கள், கன்னம் ஆகியவற்றில் லேசான காயங்கள் உள்ளன. இவற்றுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. முதுகில் சில வெட்டுக் காயங்களும் காணப்படுகின்றன.

ஜாக்சனின் வலது பக்க மூக்கு கிட்டத்தட்ட நசுங்கிப் போய் விட்டது. மூக்கின் வலது மற்றும் இடது புறங்களை இணைக்கும் எலும்புப் பகுதியையே காணவில்லை.
பிளாஸ்டிக் சர்ஜரியால் வந்த வினை இது என்று கருதப்படுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஜாக்சன் துடித்ததை நடிப்பு என நினைத்த மகன்..

இதற்கிடையே ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து துடித்தபோது, அதை நடிப்பு என நினைத்துள்ளார் அவரது மூத்த மகன் பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்.

இதுகுறித்து ஜாக்சனின் பயோகிராபர் ஸ்டேஸி பிரவுன் கூறுகையில், தனது தந்தை ஏதோ நடிக்கிறார் என்று பிரின்ஸ் நினைத்து விட்டான். அவனுக்கு உண்மை என்னவென்று புரியவில்லை. பிறகு டாக்டர்கள் வந்து பார்த்தபோதுதான் ஏதோ நடக்கிறது என்று அவனுக்குப் புரிந்தது.

அதன் பின்னர் ஜாக்சனுக்கு அருகிலேயே இருந்து அனைத்தையும் கூர்ந்து கவனித்தான் பிரின்ஸ் என்று கூறியுள்ளார்.