Showing posts with label நயன்தாரா. Show all posts
Showing posts with label நயன்தாரா. Show all posts

Thursday, July 2, 2009

அசின்-நயன்தாரா... அப்பா, அம்மா இம்சைகள்!


ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள். எப்பவும் அசினோடு ஒட்டிக் கொண்டே திரியும் அவரோட அப்பாவான மிஸ்டர் தோட்டம் கல், இப்போது தோட்டத்திலே கல்லு பொறுக்குகிற வேலைக்காவது போகலாமான்னு யோசிக்கிற அளவுக்கு சும்மாதான் இருக்காரு. ஏன்? இந்தி வாலாக்களுக்கு அசினை பிடிச்ச அளவுக்கு அவங்க அப்பாவை பிடிக்கலே! அவரு எதுக்கு எப்பவுமே உங்க கூட வர்றாரு. செக்யூரிடியான்னு கேட்கிற அளவுக்கு கிண்டல்! வேற வழியில்லாம “என் வேலைய நான் பார்க்கிறேன். நீங்க எதுக்கு?” என்று கூறிவிட்டாராம் அசின்.

இன்னொரு சம்பவம்?

எப்பவுமே பெண்ணை தனியாகவே அனுப்பி பழகிய நயன்தாராவின் பெற்றோர்கள், தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதுதான். எந்த பத்திரிகையை திருப்பினாலும், நயன்தாரா பற்றிய தப்பு தப்பான செய்திகள். காதல், கத்தரிக்காய் என்று கூடை கூடையாக கெட்ட பேர். வேறு வழியில்லாமல் இனி எங்கு போனாலும் நாங்களும் வர்றோம் என்று கூறிவிட்டார்களாம்.

எதுக்கு உங்களுக்கு சிரமம்னு பொண்ணு சண்டை போட்டாலும் விடாப்பிடியா அவங்க வர்றது நயன்தாராவுக்கும் பிடிக்கலே. இவரை வச்சு படம் எடுக்கிறவங்களுக்கும் பிடிக்கலே. ஃபிளைட் பயணத்திலே ஆரம்பிச்சு, போர்ட்டிங், லாட்ஜிங்குன்னு பில்லு மும்மடங்காக ஆனதுதான் இந்த பிடிக்கலேவுக்கு காரணாமாம்.

கால்கட்டு போட்டா சினிமா கைவிட்டு போயிரும். கால் கட்டு போடலேன்னா பொண்ணே கைவிட்டு போயிரும். எதை செய்யுறதுன்னு ஒரே குழப்பமாம் அவங்க அப்பா அம்மாவுக்கு!

Monday, June 29, 2009

நயன்தாராவுடன் வருவாரா? பிரபுதேவாவுக்காக காத்திருந்த ரசிகர்கள்!


விஜய் டி.வி அடுத்த பிரபுதேவா யார் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் முன்னுக்கு வரத்துடிக்கும் இளைஞர்கள் பிரபுதேவா ரேஞ்சுக்கு ஆட்டம் போட்டு வந்தார்கள். முதல் பரிசு பெறும் போட்டியாளருக்கு 10 லட்சம் ரொக்கப் பரிசு! ஐய்யோ சொக்கா... அத்தனை பொற்காசுகளும் எனக்கே கிடைக்கணும் என்ற வெறியோடு ஆடிய போட்டியாளர்கள் வார வாரம் மக்களை மகிழ்வித்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரபுதேவா முன்பு ஆடி அவரையும் மகிழ்வித்து பரிசு பெறுகிற நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இந்நிகழ்ச்சி லைவ்வாக விஜய் டி.வி யில் ஒளிபரப்பப்பட்டது. மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்து கொள்வார் என்று முன்னறிவிப்பு செய்து கொண்டே இருந்தது விஜய். முதல் நாள் செய்தி தாள்களில் துபாயில் நயன்தாராவும், பிரபுதேவாவும் ஜோடியாக ஷாப்பிங் சென்றார்கள் என்றும், அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள் என்றும் பரபரப்பான செய்திகள் வந்திருந்ததால், இந்த விழாவுக்கும் நயன்தாராவுடன்தான் பிரபுதேவா வருவார் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.

ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த விஜய் டி.வி நிகழ்ச்சி ஒன்றுக்கு நயன்தாராவுடன் வந்திருந்த பிரபுதேவா, நிருபர்களின் எல்லையிலிருந்து தொடர்பு கொள்ளாத தூரத்தில் இருந்தபடியே எஸ்கேப் ஆனார். நயன்தாராவும்தான்! இந்த முறை முன்னெச்சரிக்கை போலும். நயன்தாராவை அழைத்துக் கொண்டு வரவே இல்லை. “ஆசை மகன் இறந்து ஆறு மாதம் ஆவதற்குள்ளாகவே காதல் ஆட்டம் போடுகிறாரே” என்று கரித்துக் கொட்டிய மக்கள், மேடையில் தனது மகன் பற்றி பிரபுதேவா பேசி கண் கலங்கிய தானும் கலங்கினார்கள்.

மச்சக்காளையை மடக்கிப் போட்ட காஜல்!


த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா நடிக்கிற தெலுங்கு படங்களை சைலண்ட்டாக தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கதைக்காகவும், ஹீரோவுக்காகவும் ஓடிய படங்கள் இங்கு சதைக்காகவே ரசிக்கப்படுகின்றன என்பது சொல்லாமலே புரியும். சென்னையை தாண்டி இந்த ஜிகினா சுந்தரிகளின் ஆட்டத்தை காண தவியாய் தவிக்கிற ரசிகர்கள், டப்பிங் பட பாகுபாடில்லாமல் கலெக்ஷனை கொட்டுவதால் அந்த ஏரியாவுலேயும் இப்போது பரபரப்பு.

மேற்படி தங்க தாரகைகளை தொடர்ந்து பிட்டு பட நாயகி லெவலுக்கு டூ பீஸ் தரிசனம் தர வந்திருக்கிறார் ப்ரியாமணி. இவரது படங்களையும் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். இப்போது லேட்டஸ்டாக அதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். இன்னொரு ஜோதிகா என்று இவர் வந்த புதிதில் வர்ணித்த பத்திரிகைகள், ஒரு படம் கூட ஓடாமல் போனாலும், தனது வர்ணிப்பை நிறுத்தவில்லை.

இதற்கு முன்பு வந்த தனது படங்கள் மண்ணை கவ்வினாலும், வரப்போகும் படமான மோதி விளையாடு தனக்கு வெற்றியை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது காஜலுக்கு. எதற்கும் இருக்கட்டும் என்று, தெலுங்கிலும் தனது பெரிய கண்களை அலையவிட்டு வாய்ப்புகளை தேடிக் கொண்டார். அங்குள்ள முன்னணி இயக்குனர் தேஜா இயக்கிய படம் ஒன்றில் இவர்தான் முழுநீள நாயகி. (ள உச்சரிப்பு முக்கியம்)

நல்ல வெயிட்டான கதையில் காஜலின் கவர்ச்சிக்கும் ஒரு வெயிட் இருப்பதால், இந்த படத்தை டப்பிங் லிஸ்ட்டில் வைத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். தமிழில் மச்சக்காளை என்ற பெயரில் வரப்போகிறதாம். ஜொள்ளாபிஷேகத்திற்கு ரசிகர்கள் தயாராகலாம்.

நயன்தாராவின் முன்னழகு கவர்ச்சிப்படங்கள்

MirchiWoods.com [Nayantara-hot-sexy-photo-01.jpg] MirchiWoods.com [Nayantara-hot-sexy-photo-03.jpg] MirchiWoods.com [Nayantara-hot-sexy-photo-06.jpg] MirchiWoods.com [Nayantara-hot-sexy-photo-07.jpg] MirchiWoods.com [Nayantara-hot-sexy-photo-09.jpg] MirchiWoods.com [Nayantara-hot-sexy-photo-10.jpg] MirchiWoods.com [Nayantara-hot-sexy-photo-11.jpg] MirchiWoods.com [Nayantara-hot-sexy-photo-08.jpg] MirchiWoods.com [Nayantara-hot-sexy-photo-05.jpg] MirchiWoods.com [Nayantara-hot-sexy-photo-02.jpg]