Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, July 2, 2009

விண்ணை தாண்டி வருவாயா? திடீர் சுணக்கத்தில் சிம்பு

வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தில் திடீர் சுணக்கம். கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ்சை கோயம்பேட்டுக்கு திருப்பிவிட்ட மாதிரி ஒரே அல்லோகலம் என்கிறார்கள். என்னவாம்?

தெலுங்கில் மகேஷ்பாபுவிடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் உடனே அல்ல. ஓரிரு மாதங்கள் கழித்துதான் இவரது படத்தில் நடிக்க வருவாராம் பாபுகாரு. விண்ணை தாண்டி வருவாயா கதையைதான் அவரிடமும் சொல்லியிருக்கிறார் கவுதம். தான் நினைத்தமாதிரி தெலுங்கு படம் நகர ஆரம்பித்தால் தமிழ், தெலுங்கு ரிலீசை ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது கவுதமின் கணக்கு.

ரஹ்மானின் தமிழ் ட்யூனையே தெலுங்குக்கும் பயன்படுத்திக் கொண்டால், ஆடியோ மார்கெட்டிலும் ஒரு அட்டகாச வசூலை பார்க்கலாமே? இப்படி அவர் போட்ட கணக்கில்தான் இந்த சுணக்கம். ஒருவேளை தமிழ் படத்தை முதலில் கொண்டு வந்து அது வேறு மாதிரியான ரிசல்ட்டை கொடுத்தால், மொத்த கதையையும் மாற்ற சொல்வார் மகேஷ்பாபு என்ற அச்சமும் இந்த ஒரே நேர ரிலீஸ் ஐடியாவுக்கு காரணமாம்.

இதற்கெல்லாம் சம்மதிக்க முடியாத சிக்கலில் இருக்கிறார் வி.தா.வ நாயகன் சிம்பு. இரு கெட்டப்புகளில் நடித்திருக்கும் இவர் ஒரு கெட்டப்பில் தாடி வைத்திருக்கிறாராம்! இதற்காக நீட்டலும் மழித்தலும் வேண்டா என்று ஒதுங்கியே இருக்கும் சிம்புவுக்கு தாடியை எடுப்பதா? அல்லது காத்திருப்பதா என்ற சிக்கலும் வந்திருக்கிறது. எது எப்படியோ? போடா போடி வேலையை துவங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் இப்போது.

Wednesday, June 24, 2009

இவள் அழகிய தமிழ் மகழா?

[Mumaith-Khan-hot-sexy-stills-01.jpg]

[Mumaith-Khan-hot-sexy-stills-03.jpg]

[Mumaith-Khan-hot-sexy-stills-02.jpg]

[Mumaith-Khan-hot-sexy-stills-05.jpg]

[Mumaith-Khan-hot-sexy-stills-04.jpg]

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.

முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.

புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

இது எனக்கு எவ்வித தடை இன்றி வேலை செய்தது. வேறேதும் வழிமுறைகள் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.

எனது இந்த பிளாக்கை நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து கீழ்க்கண்ட முகவரிகளில் எளிதாக வாசிக்கலாம்.

http://bit.ly/tvs50 OR http://www.google.com/reader/m/view/feed/http://feeds2.feedburner.com/tvs50 OR http://feeds2.feedburner.com/tvs50 OR http://tamilnutpam.mofuse.mobi/

உபயோகித்து பாருங்கள். குறைகள் ஏதேனும் இருந்தால் சுட்டி காட்டுங்கள். என்னை திருத்திக்கொள்ள உதவியாய் இருக்கும்.

Tuesday, June 23, 2009

தமிழ் படங்கள் பார்த்து திருடர்களாக மாறினோம்!

Sneha with Lawrence
பொதுமாக ஒரு பெரிய குற்றம் நடக்கும் போது, 'அந்தப் படம் பார்த்து நானும் இப்படிச் செய்தேன்' என்று குற்றவாளிகள் போலீசாரிடம் வாக்கு மூலம் அளிப்பதும் அதை கொட்டை எழுத்தில் போடுவதும் முந்தைய கலாச்சாரமாக இருந்தது.

கொஞ்சநாள் காணாமல் போயிருந்த அந்த கலாச்சாரம் மீண்டும் இப்போது திரும்பியிருக்கிறது. ஆனால் இங்கல்ல... மலேஷியாவில்.

பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர், விசாரணையின்போது, "தமிழ் சினிமாக்களைப் பார்த்துதான் நாங்கள் திருட்டுத் தொழிலில் ஆர்வம் கொண்டோம். அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறோம்" என கூலாகக் கூறியுள்ளனர்.

அது பற்றிய விவரம்:

மலேசியாவில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட 3 இந்திய இளைஞர்களை சமீபத்தில் கைது செய்தனர் மலேஷிய போலீசார். அவர்கள் பல போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 20 வழக்குகள் உள்ளன.

3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு ஆடிப் போனது மலேஷிய போலீஸ்.

தமிழ் படங்களைப் பார்த்து பார்த்துதான் தாங்கள் திருடர்களானதாக வாக்குமூலம் அளித்துள்ளனர் இந்த மாணவர்கள். பள்ளியில் படித்தபோது அதிகம் தமிழ் படங்கள் பார்த்ததாகவும் அதில் வரும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை காட்சிகளைப் பார்த்து தாங்களும் அந்தத் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறினர்.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் ரிலீசாவது போலத்தான் மலேஷியாவிலும் தமிழ்ப் படங்கள் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகின்றன. கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என எல்லாமே அங்கும் சகஜம். காரணம் இங்கிருந்து போய் செட்டிலான தமிழர்கள்தான்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, மலேசிய இளைஞர்களை திருடர்களாக மாற்றுகிறது என்று போலீசார் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளது.

இதனால் மலேசியாவில் தமிழ் படங்கள் திரையிட தடைவிதிக்க வேண்டும் என்று போலீசார் யோசனை தெரிவித்துள்ளனர். பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களை கண்காணிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்களாம் போலீஸார்.

சரத்குமார் சார்... நோட் த பாயிண்ட்!

அசல் படத்தில் செகன்ட் ஹீரோயினா? பாவனா கோபம்!


அசல் படத்திலே நீங்க செகன்ட் ஹீரோயினாமேன்னு கேட்டா, போன்லேயே மிளகாப் பொடியை தூவுகிறார் பாவனா. “முதல்ல ஒரு ஹீரோயினுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிட்டாங்க. அப்புறம் இன்னொரு ஹீரோயினை கொஞ்சம் லேட்டா தேர்வு செஞ்சு அட்வான்ஸ் கொடுக்கிறாங்க. அப்படின்னா இரண்டாவதா அட்வான்ஸ் வாங்கினவங்க எல்லாரும் ரெண்டாவது ஹீரோயின் ஆயிருவாங்களா? நல்லாயிருக்கு சார் உங்க லாஜிக்கு” என்கிறார் காரசாரமாக.

ஐம்பது நாட்கள் கால்ஷீட் வேணும்னு கேட்டார் சரண் சார். வேறு படங்களுக்கு முன்னாடியே கொடுத்திருந்த தேதிகளையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து, ஐம்பது நாட்கள் ஒதுக்கி கொடுத்திருக்கேன். மலேசியா, லண்டன்லே ஷ¨ட்டிங். பொதுவாகவே வெளிநாட்டுக்கு போறதுன்னா ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த படம் சிவாஜி புரடக்ஷன் என்பதால் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கு. ஏன்னா பாரம்பரியமான கம்பெனியிலே நடிக்கறது பெருமைதானே என்றார் பாவ்ஸ்.

இனிமே தமிழ்லே கதையை மட்டும் கேட்டுட்டு நடிக்க போறதில்லே, அதிலே என்னோட கேரக்டருக்கு எந்தளவுக்கு இம்ப்பார்ட்டன்ஸ் இருக்குன்னு கேட்டுதான் நடிப்பேன்னு சபதம் போட்டிருந்தவர், அசல் விஷயத்தில் ஒரு நிபந்தனையும் போடவில்லையாம். பாவனாவோட கேரக்டரை மட்டும்தான் சொன்னாராம் சரண்.

இன்னொரு ஹீரோயின் படத்திலே இருந்தாலும், ஒரு பயமும் எனக்கு இல்லே. ஏன்னா என் கேரக்டரோட வெயிட் அப்பிடின்னார் பாவனா. படம் வரும்போது தெரிஞ்சிடப் போவது!

Monday, June 22, 2009

களறி பயிற்சி..அசின் காயம்!


19 ஸ்டெப்ஸ் எனும் படத்துக்காக களறிச்சண்டை கற்கும் போது நடிகை அசின் காயமடைந்தார்.கமல்ஹாசன் சிறப்பு வேடத்தில் தோன்ற, ஜப்பானிய நடிகர் தாடனோ அஸனோ நாயகனாக நடிக்கும் சரித்திரப் படம் 19 ஸ்டெப்ஸ். இந்தப் படத்தில் அசின்தான் கதாநாயகி. தாடனோ அஸனோவுக்கு ஜோடியாக நடிக்கிறார். கமலுக்கு ஜோடி கிடையாது.

பரத் பாலா இயக்கும் இந்தப் படத்தில் களறிச் சண்டை வீராங்கனையாக வருகிறார் அசின்.

இந்த வேடத்தை சிறப்பாகச் செய்ய, நிஜமாகவே களறிச் சண்டை கற்று வருகிறார். இதற்காக கேரளாவிலிருந்து களறிச் சண்டை நிபுணர் ஒருவரை வரவழைத்து பயிற்சி அளிக்கிறார்கள் அசினுக்கு.சில தினங்களுக்கு முன் இப்படி கடும் பயிற்சியிலிருந்த போதுதான், வழுக்கி விழுந்தார் அசின். இதில் அவருக்கு லேசான தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அந்த வலியுடனே அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்த களறிச் சண்டை பயிற்சியின்போது வாள்வீச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அப்போது தவறுதலாக அசின் வாளை வீச, எதிரில் பயிற்சியிலிருந்தவருடைய வாள் தவறுதலாக அசின் கைகளைக் கீறி விட்டது. இதில் அசினுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவருக்கு ஆயுர்வேத சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்து வருகிறார் அசின்.

இன்னும் இரு வாரங்களில் 19 ஸ்டெப்ஸ் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகிறது. தமிழ், மலையாளம், ஜப்பானிய மொழிகளில் வெளியாகிறது இந்தப் படம்.