Showing posts with label Photo Session. Show all posts
Showing posts with label Photo Session. Show all posts

Monday, November 4, 2013

கூகுளில் அதிகமாக செக்ஸ் படம் பார்ப்பவர்கள் : முதல் இடத்தில் இலங்கை; 2-வது இடம் இந்தியாவுக்கு!


ல்லரசாகும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்திய நாடு ஊழலில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது, இப்போது அதையும் தாண்டி பிட்டு படம் பார்ப்பவர்களின் எண்ணிகையில் பக்கத்து நாடான இலங்கைக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூகிளின் சர்ச் மூலம் செக்ஸ் என்ற வார்த்தையை தேடுபவர்களின் எண்ணிக்கையில் உலகின் முதல் இடத்தில் இலங்கை உள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
இதன் மூலம் உலகிலேயே ராஜபக்‌ஷே தலைமையிலான அராசாங்கத்தை கொண்டிருக்கும் இலங்கையில் தான் பாலியல் சம்பந்தமான நீலப்படக்காட்சிகளை அதிகமாக பார்க்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
சமீபகாலமாக இலங்கை மற்றும் இந்தியாவில் மொபைல், டேப்லெட், கனிணி ஆகியவற்றின் மூலம் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூகுள் இந்த புள்ளி விபரத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, October 19, 2013

கதவில்லா வீட்டில் வசித்துவரும் கட்டபொம்மனின் வாரிசு!



ஏழ்மை காரணமாக கதவில்லா வீட்டில் வசித்துவரும் கட்டபொம்மனின் வாரிசு ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு

"தருக்கர்கள் சிலரால் தமிழ் தாழ்வுற்று இருப்பினும் எதிர்காலத்திலே இளம் இளம் காளையர்கள் உயிராக பேணுபவர் வருவர் உன் உயர்வை உயர்த்துவர்" என்று தூக்கு கயிற்றை முத்தமிட்டு கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய வரலாற்றை சினிமாவில் பார்த்தும், புத்தகங்களில் படித்தும்

பிரமித்தோம்... தமிழகம் சென்றால் பாஞ்சாலம் குறிச்சிக்கு சென்று அந்த வீரம் விளைந்த மண்ணை மிதித்து தொட்டு கும்பிட எல்லோருக்கும் ஆசை இருக்கும். தமிழர் வரலாறுகளில் வீரம் மிகைப்படுத்தப்பட்டும் மகிமைப்படுத்தப்பட்டும் எழுதப்பட்டிருப்பதால் அதற்கு அப்படி ஒரு சிறப்பு!

சிவகங்கை சீமையிலே களமாடிய வேலுநாச்சியாரையும் வெள்ளையனின் ஆயுதக்கிடங்கை துவம்சம் செய்து அதை சிதறடித்த வீரப்பெண் குயிலியையும் கூட நம்மவர்கள் இன்றுவரை மறக்கவில்லை. ஆனால் இந்த வீரம் செறிந்தவர்களின் சந்ததியினருக்கு என்ன நடந்தது என்று தேடிப்பார்த்ததுண்டா?

ஒருமுறை தேடிப்பார்த்தபோது, இலங்கை மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாரிசுகளில் ஒருவர் வேலூர் தியேட்டர் ஒன்றில் டிக்கட் கிழித்துக் கொண்டிருப்பதை வெளிக்கொண்டு வர முடிந்தது. எனவே இந்த கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு என்ன நடந்தது என்று பார்க்கவேண்டாமா?

அண்மையில் வேலூரில் நடந்த ஒரு பாரம்பரிய விழாவில் கட்டபொம்மனின் வாரிசான வீமராஜா என்கிற ஜெகவீரபாண்டி கட்டபொம்முவை சந்திக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நல்ல உயரமான உருவம், வீரத்தின் அடையாளமாக முறுக்கிய மீசை. தலையில் முண்டாசு, மடித்துக்கட்டிய வெள்ளை வேட்டி, சட்டை. இடுப்பில் வாள் ஏதும் இல்லை. ஆனால் அவரின் பாதணி மட்டும் மன்னர் காலத்தை ஞாபகப்படுத்தியது. தோளில் தொங்கும் ஒரு பழைய பை அதில் செல்லரித்து மக்கிப்போன சில படங்கள். கலைஞர், வைகோ, விஜயகாந்த் என அரசியல் தலைவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்...

இதுதான் நான் பார்த்த கட்டபொம்மனின் வாரிசு கட்சியளித்த விதம்.

"எனது பாட்டன் கட்டபொம்மன் வெள்ளைக்கார பயலுகள ஓட ஓட விரட்டி அடித்தான். ஆனால் எட்டப்பனின் காட்டிகொடுப்புதான் அவனை விழவைத்தது. இல்லையென்றால் பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு பிடி மண்கூட அந்த பயலுகளுக்கு கிடைத்து இருக்காது" என்று இன்றைக்கும் வீரமாக பேசி மீசை முறுக்குகிறார் வீமராஜா. எழுபத்தி மூன்று வயதிலும் ரொம்பவும் தைரியமாகத்தான் இருக்கிறார். அரசு மாதம் தோறும் தரும் ஆயிரம் ரூபாயில் தான் இவரின் வாழ்க்கை ஓடுகிறதாம்...

"நமக்கு வேலைக்கு போக முடியாதுங்க. அரசாங்கம் மானியம்னு ஆயிரம் தாரான். அது சாப்பாட்டுக்கே போதலிங்க... மன்னரின் கோட்டையை பார்க்க வாராங்க, அப்படியே என்னையும் பார்த்து போட்டோவும் பிடித்து என் கை செலவுக்கு ஏதாவது கொடுக்கிறாங்க..."

கேட்ட எனக்கு ஒரு மாதிரி இருந்தது.

வீமராஜாவுக்கு ஆணும், பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மகள் திருமணம் முடித்து குடும்பமாகிவிட்டாராம். மகன் பெயர் கணபதி ராஜா என்கிற ஜெகவீர ராம கட்டபொம்மன். ஆனால் தனக்கு பிறகு கட்டபொம்மனின் வாரிசாக வரக்கூடிய எந்தத் தகுதியும் அவனுக்கு இல்லை. அதனால் அவனைப் பற்றி பேசாதீர்கள் என்று கொஞ்சம் கடுப்பானார் வீமராஜா.

அரசாங்கம் கட்டிக்கொடுத்த ஒரு சிறிய வீட்டில்தான் வீமராஜா குடியிருக்கிறாராம்.

"வீடு ஒரு தடவை தீப்பிடித்ததில் அதன் கூரை எரிந்து விட்டது. அதன் பிறகு சிங்கப்பூரிலிருந்து வந்த பூங்கொடி பெருமா நாயக்கர் என்பவர்தான் என்னைத் தேடி வீட்டுக்கு வந்து அஸ்பெஸ்டஸ் கூரை போட்டுத் தந்தாரு. அத்தோடு யாராவது வீட்டுக்கு வந்தா அமர்வதற்கு ஒரு கயிற்று கட்டிலும் வாங்கித் தந்தாரு. அரசாங்கம் கட்டித்தந்த வீடு ரொம்பவும் சின்னதா இருந்ததால் அதை கொஞ்சம் பெரிசா கட்டுவதற்கு சென்னைக்கு போய் நடிகர் சிவகுமார் அலுவலகத்தில் மனுக்கொடுத்திட்டு வந்தேன். அவரு ரொம்ப நல்ல மனுஷன். நான் கேட்டபடி செய்யச் சொல்லி திருநெல்வேலி ரசிகர் மன்றத்துக்கு பணம் அனுப்பி இருக்காரு. ஆனா ரசிகர் மன்றத்து ஆட்கள் அந்த பணத்திற்கு ரொம்ப சின்னதா ஒரு அறையை கட்டி மிச்ச பணத்தை சாப்பிட்டுட்டானுங்க...!

அந்த அறையை சீராகவும் அமைக்கப்படலை. மதில் கட்ட பயன்படுத்தும் புளக்கல்லை வச்சு வீடு கட்டியிருக்கானுங்க..." என்று புலம்பும் இவரின் வீட்டின் கதவு செல்லரித்து விழுந்து விட்டதாம்.

"இப்போ கதவில்லா வீட்டில்தான் நம்ப வாழ்க்கை போகுது. இரவானா நாயும் பேயும் வீட்டுக்குள் வருதுங்க... இது பற்றி அரட்டை அரங்கம் நடத்த வந்த டீ. ராஜேந்தர் கிட்டே போய் சொன்னேன். இதைக் கேட்ட அவரு காட்டு ராணி கோட்டையிலும் கதவுகள் இல்லை. இங்கே கட்டபொம்மன் வாரிசு வீட்டிலயும் கதவுகள் இல்லைன்னு காமடி பண்ணினாரு. அவருக்கிட்ட கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை வைக்கணும்னு சொல்லியிருக்கேன். செய்யலாம்னு சொல்லியிருக்காரு. பார்க்கலாம்," என்று பெருமூச்சு விடும் அவரிடம் கட்டபொம்மனின் சொத்துக்கள் ஏதும் இல்லையா என்று கேட்டோம்.

"சொத்து என்று ஏதும் இல்லிங்க... மன்னரை கைது செய்த பிறகு மன்னரின் ரத்த பந்தங்களை திருச்சி கோட்டைக்கு பக்கத்திலுள்ள ஒரு சிறைச்சாலையில் எழுபது வருடமாக அடைத்து வைத்திருந்தார்கள். அதன் பிறகு எங்கள் உறவுக்காரர்களை ஊருக்குள் விடவில்லை. பத்து மைல் தள்ளியே வைத்திருந்தார்கள். சக்காரக்குடியில் குடியமர்த்தி இருந்தார்கள். சொத்தெல்லாம் வெள்ளைக்கார பயலுகளும் எட்டப்பனும் சுருட்டிட்டு போயிட்டானுங்க.." என்றவரிடம் பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த சண்டையில் கட்டபொம்முவின் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக சொல்கிறார்களே அப்போ நீங்க எப்படி வாரிசாகும்? என்று கேட்டோம்.

"இல்லை. சண்டையில் கட்டபொம்மனின் மனைவி கொல்லப்படவில்லை. மகாராணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். அப்போ ராணியின் தந்தை கெடு வெட்டூர் நாயக்கர் தன் மகளை தேவி ஜக்கம்மாவின் பாதம் தொட்டு வணங்கி அந்த திருநீறை மகளின் நெற்றியில் இட்டு கீழவாசல் வழியாக தப்பிச் செல்ல பணித்திருக்கிறார். அவரும் தேவி ஜக்கம்மாவின் துணையோடு வெளியேறி சக்காரகுடியில் இருந்த ஒல்லிக் கவுண்டர் வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார். ஆனால் சில நாட்களில் மாடு மேய்க்கும் ஒரு பெண்ணினால் ராணி காட்டிக் கொடுக்கப்பட்டு வெள்ளையர்களால் கைதாகி இருக்கிறார். அவரை பல்லக்கில் வைத்து சுமந்து சென்ற வெள்ளையர்கள் திருச்சியில் வீட்டுக்காவலில் வைத்து இருந்தார்களாம்.

அவருக்கு அந்தக்காலத்தில் மாதம் தோறும் 2.50 சதம் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு அவருக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததாம். ஒரு பண்டிகை நாளில் வெள்ளைக்காரன் இனிப்புகளை ஒரு தட்டிலும், மறு தட்டில் இரண்டு வாள்களையும் வைத்து விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்களாம்.

இரு சிறுவர்களில் ஒருவன் ஓடிச்சென்று போர் வாளை எடுத்தானாம். அதைப்பார்த்து மிரண்டுப்போன வெள்ளையன், அந்தக் குழந்தைதான் அடுத்த கட்டபொம்மன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவனை வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதாக அழைத்துச் சென்று விட்டார்களாம். மற்ற பையனை திருச்செந்தூர் காவடி பிரார்த்தனைக்கு நேர்ந்து இருப்பதாகச் சொல்லி ஜக்கம்மா அவனை தன்னோடு வைத்துக் கொண்டார்களாம். சிறையில் பிறந்த கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு கம்பனி செல்வம் என்றுதான் பெயர் வைத்திருந்தார்களாம்... அந்தப் பரம்பரையில் வந்த ஐந்தாவது தலைமுறைதான் நான். வெள்ளைக்காரன் கொடுத்த மானியத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது நிறுத்தி விட்டார்கள்.

எனக்குத் தெரிய எங்க பெரியப்பா சுப்பரமணியம் அந்த பென்ஷனை வாங்கி வந்தாரு. அவரின் மரணத்தோடு அதுவும் நின்றுவிட பிறகு அண்ணாத்துரை முதலமைச்சரானதும் நான் ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமே கொடுத்தேன். அதைப்பார்த்த அவர், 'கட்டபொம்மன் வாரிசுக்கும், வாஞ்சிநாதன் மனைவிக்கும் இந்த மானியத்தை கொடுக்கலாம். ஆங்கில சர்க்கார் கொடுத்ததை சொந்த சர்க்கார் நிறுத்தியது குற்றம்' என்று ஒரு ஃபைலில் எழுதி வச்சாரு. அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அதை நிறைவேற்றினார். அவருதான் கட்டபொம்மனின் இடிந்த மாளிகையை கட்டி எழுப்பினாரு.

74ல் எனக்கு வீடுகட்டித் தந்தவரும் அவருதான்... ஆனா இப்போ கயத்தாறில் கட்டபொம்மனுக்கு மணி மண்டபம் கட்டப்போறதா அம்மா அறிவித்து இருக்காங்க..." என்று சொல்லும் வீமராஜா நன்றாக அருள்வாக்கும் சொல்கிறார். "தேவி ஜக்கம்மாவை நினைத்தா உள்ளதை உள்ளப்படி சொல்வேணுங்க..." என்கிறார். இது தவிர தமிழர் கலாசார நிகழ்வுகளுக்கும் வீமராஜா சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்.

வருடம்தோறும் கட்டபொம்மன் நினைவு தினத்திலும் தேவி ஜக்கம்மா திருவிழாவிலும் வீமராஜாதான் கதாநாயகராம். ஆனால் வீமராஜாவின் வாழ்க்கை மிகவும் வறுமைகோட்டிலேயே பயணிக்கிறது. நாடாளவேண்டியவர் இப்படி நாதியற்று...

- நேர்காணல்: மணி ஸ்ரீகாந்தன்

ஆளை அசத்தும் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?



தேவையான பொருட்கள்
சிக்கன் – ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி – 3/4 கிலோ
எண்ணெய் – 200 கிராம்
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
பட்டர் – 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – ஒரு தேக்கரண்டி
தயிர் – 1/2 லிட்டர்
எலுமிச்சை – ஒன்று
பட்டை – ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு – 5
பிரிஞ்சி இலை – 2
ஷாகிஜீரா – 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் – 2
ஜாதிபத்திரி – சிறிதளவு
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து
புதினா – ஒரு கொத்து
குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் – சிறிதளவு
ப்ரைடு ஆனியன் – ஒரு கப்
(ப்ரைடு ஆனியன் கடைகளில் கிடைக்கிறது. இல்லையெனில் பல்லாரி வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி அரை தேக்கரண்டி அரிசிமாவை அதில் தூவி கைகளால் நன்கு பிசறி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். )
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
செய்வது எப்படி?
பொடி வகைகள் மற்றும் வாசனை பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கழுவி அதில் 50 மி.லி எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், தயிர், உப்பு, அரைத்த மசாலா பொடி, சிறிதளவு பட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து புரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு, 2 ஏலக்காய், ஒரு பச்சை மிளகாய், 2 கிராம்பு, ஒரு பிரிஞ்சி இலை, சிறிதளவு பட்டை, சிறிதளவு ஷாகிஜீரா ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அரை பதமாக வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு 1 1/2 டம்ளர் (350 ml) தண்ணீர் ஊற்றி சிக்கனை சமப்படுத்தி விடவும். சிக்கன் கலவையின் மேல் வேக வைத்த சாதத்தை கொட்டி நன்கு பரப்பி விடவும்.
அதன் மேல் ப்ரைடு ஆனியன், மல்லி தழை, புதினா போன்றவற்றை சுற்றிலும் போடவும். கடைசியாக குங்குமப்பூவை பாலில் கரைத்து ஆங்காங்கே தெளித்து விடவும். கலர்பொடி என்றால் இருகலர் பயன்படுத்தலாம். கலர்பொடி சேர்ப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதனால் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.
பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு கொள்ளவும். இதுப்போல் க்ளாஸ் மூடியில் ஆவி வெளியே செல்லாது. 1/2 மணி நேரம் மிதமான தீயில் வைக்கவும்.
குறிப்பு :
இடையிடையே திறந்து பார்க்கக் கூடாது. நீராவி வெளியே சென்றால் சாதம் அடியில் பிடித்து விடும்.
சாதரணமூடி என்றால் அலுமினியம் பாயில் போட்டு ஒட்டி விட்டு அதன் மேல் மூடி போடவும். அல்லது பாத்திரத்தை சுற்றிலும் சப்பாத்தி மாவை ஒட்டி அதன் மேல் மூடி போடலாம்.
அரைமணி நேரம் கழித்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி விடவும். இப்போது பிரியாணி தயாராகி இருக்கும். வெயிட் அதிகம் இல்லாத கரண்டியினால் சாதத்தை மெதுவாக பிரட்டி விடவும்.
சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார். விரும்பினால் முந்திரி, திராட்சை, போன்ற நட்ஸ் வகைகளை பட்டரில் ப்ரை செய்து போடலாம்.

தரைமட்டமாகும் அதிமுகவின் கோட்டை!



சொந்தக் கட்சிக்காரனே சூனியம் வைக்கும்போது, அடுத்தக்கட்சிக்காரன் ஏன் ஆசைப்படமாட்டான்? என்று தர்மபுரி அதிமுக வினர் கொந்தளித்துப்போய் உள்ளனர். சமீபகாலமாகவே அஇஅதிமுகவுக்குள் தலைமையை விட கீழ்மட்டத்தில் உள்ளவர்கள், தெளிவாகவே உள்ளார்கள். கட்சிக்கு சங்கு ஊதாமல் போவதில்லையென்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அ.அதிமுக தலைமைக்கு தெரியுமா? இல்லை சில அல்லக்கைகள் தலைமைக்கு தெரியாமல் மறைக்கின்றனவா என்ற சந்தேகத்தோடு நம்மை பார்த்துக்கேட்டனர். நமக்கு தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அவர்கள் சொல்வத சரியாக புரியாததால் தெளிவாக சொல்லுங்கள் என்று தருமபுரியில் ஆஜரானோம். மழை பெய்து ஓய்ந்துபோன ஒரு மாலை வேளையில் தருமபுரியில் கால்வைத்தோம். அங்குள்ள அஇஅதிமுகவினரை விசாரிக்க ஆரம்பித்தோம்.
ஆமாம், சார் மாமன் -மச்சான் சண்டைகள் போல கட்சிக்குள் அதுவும் தருமபுரி அஇஅதிமுகவுக்குள் ஏகப்பட்ட வில்லங்களும் நடக்கின்றன. ஆனால் சாமர்த்தியமாக இதை தலைமைக்கு தெரியாமல் மறித்துவிட்டு தலைமையிடம்  நல்லபெயர் எடுப்பதாக பச்சை துரோகம் பண்ணுகிறார்கள் சார். இதுபற்றி நீங்களாவது முதல்வரின் பார்வைக்கு தெரியப்படுத்தி தருமபுரி அதிமுக வுக்குள் ஒரு தெளிவு உண்டாக்குங்கள் சார் என்றார்கள் அனைவரும். தருமபுரி அதிமுகவின் கோட்டை என்பது சொல்லப்படும் ஒன்று. ஆனால் தற்போதைய நிலையைப் பார்த்தால் தருமபுரி அஇஅதிமுகவின் கோட்டையானது பலசேட்டைகளால் சின்னபின்னப்படுத்தப்பட்டு கிடக்கிறது. ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியவர்களோ நிறைய உள்ளடி வேளை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எப்படி தமிழகத்தில் தருமபுரி அதிமுகவின் கோட்டை என்று சொல்லமுடியும்? என்ற கேள்வியை வைத்தார் தருமபுரி வாசி ஒருவர்.
தற்போதைய நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள களத்தில் இறங்கினோம். இங்கு நடக்கும் அனைத்து உள்ளடி டப்பாங்குத்து வேலைகளுக்கு அன்பழகனும் ஆகிய இருவருமே காரணம் என்று தருமபுரி மாவட்ட அனைத்து அஇஅதிமுக வினருமே சுறுகிறாரக்ள். அவர்கள் சொல்வதை வைத்துப்பார்க்கும் போது தருமபுரி மாவட்டத்தை இரண்டாவது அஇஅதிமுக  வாக நடத்துகிறார்கள் என்பது அப்பட்டமாய் தெரிந்தது. இவர்கள் இருவரும் எதில் கலந்து கொண்டாலும் தங்கள் பலம் எது வென்பதைத்தான் காட்டும் விதமாக நடந்துக்கொள்கிறார்கள் என்கிறாரகள் இங்குள்ளவர்கள்.
தற்போது கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தான் மோதலின் உச்சக்கட்டம் வெளிச்சத்துக்கு வந்தது.  நிறைய இடங்களில் அடிதடிகள், மண்டை உடைப்புகள், சிலப்புகள் கழித்து எறிதல் போன்றவைகளும் நடந்தன. அதாவது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது என்றுகூட சொல்லலாம். இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியது ஒன்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள கே.கே. 80 வாக்கவுண்டணூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தேர்தலில் நடந்த கும்தக்கடி வேலைகள்தான். இதற்கு நடந்த தேர்தலில் கட்சி கமிட்டி வி.சி.கவுதமன், தொகுதி இணைசெயலாளர் என். இராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தென்னரசு மாவட்ட குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் பி.பள்ளிப்பட்டியில் கட்சி உறுப்பினர்கள் அமைச்சரின் உண்மை விசுவாசி ஊராட்சி மன்றத்தலைவர் பொன்மணி ஆகியோர் ஒரு மனதாக முடிவு செய்து ஒன்றிய மாணவரணி செயலாளர் மகேந்திரன் பி.இ,. என்பவரை தேர்ந்தெடுத்தனர்.
இவர் 7 ஆண்டுகள் இந்த பொறுப்பிலும், சென்ற சட்டமன்றத்தேர்தலில் பையர்நத்தம், பள்ளிப்பட்டி, போதக்காடு போன்ற பகுதிகளில் தேர்தல் பொறுப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் கவர்ந்தவர். இதுவே இவரை கூட்டுறவு சங்கத்தலைவராக கட்சியினர் அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிக்காரர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இவரின் இந்த வளர்ச்சியை பொறுக்கமுடியாத ஊராட்சிமன்றத் தலைவர் அஇஅதிமுக வைச் சேர்ந்த பொன்மணி சத்தம் போடாமல் செம உள்குத்து வேலையில் இறங்கிவிட்டார். கட்சி அறிவித்துள்ள வேட்பாளரை தோற்கடிப்பது என்ற முடிவு செய்து, அதை செயல்படுத்துவதில் மிக தீவிரமாகவும் இருக்கிறார்.
இதற்காக அமைச்சரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றும் விட்டிருக்கிறார். இதற்காக கட்சியினர் பலரைச்சேர்த்துக்கொண்டும் தனது ஆதரவாளர்களோடும் ஒன்றினைந்து திடீரென போட்டி வேட்பாளரை உருவாக்கினார்.
உடனே கட்சி பொறுப்பாளர்கள் சென்னை சென்று அமைச்சரை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மகேந்திரனிடம் போட்டி வேட்பாளர்கள் செய்த செலவுகளுக்குண்டான பணத்தினைக் கொடுத்துவிடு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றிருக்கிறார். அமைச்சர் மேலும் தலைவராக நீயேதான் இருப்பாய் என்று சப்போர்ட்டும் செய்துள்ளார் அமைச்சர்.
ஆனால் உடனே பின்னாடியே மகேந்திரனுக்கு சரியான ஆப்பு வைக்கும் வேலையையும் சொல்வார். அமைச்சர் சொன்னதை கொஞ்சம் கூட பிசகாமல் பொன்மணி கண்ணின் மணியாக செயல்படுத்தினார். பொன்மணி இருக்கிறாரே அவர் லேசுபட்டவரில்லை. அமைச்சரின் ஆசி கிடைத்துவிட்டால் போதும், அந்த பிரம்மனே வரம் கொடுத்துவிட்டதாக நினைத்து எல்லாவற்றையும் ஒரு கை பார்க்க கிளம்பி விடுவார். இதனடிப்படையில் ஒட்டுப்போடும் டைரக்டர்களை கடத்திக்கொண்டு போய் அவர்களுக்கு வேண்டியதை கவனித்து (பணம்-பெண்) மகேந்திரனை தோற்கடிக்கச் செய்து கட்சிக்கே சம்மந்தமில்லாத ராஜா என்பவரை தலைவராக்கிவிட்டார்.
கட்சிக்காக பாடுபட்ட மகேந்திரனோ அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கியவர். நன்றாக பழகக்கூடியவர், நல்ல பண்பாளர், பட்டதாரியும் கூட, மேலும் கட்சி வென்றால் அப்படியொரு உண்மை விசுவாசி, மாவட்ட செயலாளர் அன்பழகனுக்கு நெருக்கமானவர் என்பதால் அமைச்சர் தனது கட்சி வேட்பாளரையே தோற்கடித்திருப்பது இங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. ஊராட்சி மன்றத்தலைவர் பலரிடம் அமைச்சர் பெயரைச் சொல்லி வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கியிருக்கிறார் என்றும், வேலை வாங்கித்தராமல் பணத்தை திரும்பி கேட்பவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து பேசி உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெனாவட்டாக அடியாட்களை வைத்து மிரட்டுகிறாராம்.
இவர் இரவு நேரங்களில் தன்னுடைய அடியாட்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே குடியும், குடித்தனமுமாகவும், பெண்களுடன் சல்லாப லீலையும் செய்து வருவதாகவும் அந்தப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள். இத்தனை விசயங்களும் நடந்து முதல்வர் பார்வைக்கு போகவில்லையென்றால் இடையில் எங்கோ சீனப்பெருஞ்சுவர் இருப்பதாக தான் அர்த்தம்.

ஆடியோ விழாவில் 'வழக்கு எண்' நடிகையைப் பார்த்து ஆடிப்போன பிரபலங்கள்!









ஜன்னல் ஓரம் படத்தை இயக்கியிருக்கிறார் கரு பழனியப்பன். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சூர்யா, அமீர் மற்றும் ஜன்னல் ஓரம் படத்தில் நடித்த பார்த்திபன், விமல், விதார்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்தப் படத்தில் கதாநாயகிகளாக பூர்ணா, வழக்கு எண் படத்தில் நடித்த மனிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் கொஞ்சம் மூடி மறைத்த உடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் மனிஷா அணிந்திருந்த ஆடையோ கவர்ச்சியின் உச்சம் தொட்டதாக இருந்தது. மேடையில் மனிஷா நின்றிருந்த போது ரசிகர்கள் அத்தனை பேரின் கண்களும் மனிஷாவையே மொய்த்திருந்தன. மேடையில் இருந்த பிரபலங்களில் சிலர் மனிஷாவின் உடையைப் பார்த்து ஆடிப் போயினர். நல்ல படங்களை எடுக்கும் கரு பழனியப்பன் படத்தின் விழாவுக்கு வருகிற நடிகை இவ்வளவு கவர்ச்சியாகவா வருவார்… என்று சிலர் கேள்வி எழுப்பினாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதற்கு அச்சாரமாகத்தான் மனிஷா அந்த மாதிரி உடையணிந்து வந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

‘ஆரம்பம்’ படத்துல ஆர்யாவும், டாப்ஸியும்…. ம்… ம்… : அம்பலப்படுத்திய அஜித்!



ரம்பம்’ படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் அதிக நெருக்கம் காட்டியிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித்.
‘பிக்கப் – ட்ராப்’ இந்த இரண்டு சமாச்சாரங்களிலும் இளம் ஹீரோக்கள் மத்தியில் பெயர் போனவர் நடிகர் ஆர்யா.
இந்த மாதிரியான விஷயங்களில் மத்த ஹீரோக்கள் எல்லாம் ஏங்கிக்கிடக்க  ஆர்யாவுக்கு மட்டும் தாரளாமாய் கிடைக்கிறதாம். அதனால் தான் என்னவோ அவரை பற்றி பேச வாயெடுத்தாலே மத்த ஹீரோக்கள் அவரை பொது மேடைகளில் காய்ச்சி எடுத்து விடுகிறார்கள்.
இதில் இப்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். அவரும் தன் பங்குக்கு ஆர்யாவின் ரொமான்ஸ் சீன்கள் ரகசியத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்.

‘வீரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை ஹைதராபாத் செல்ல இருக்கிறார். அதனால் நேற்று சென்சார் ஆன ஆரம்பம் படம் அவருக்கு ஸ்பெஷலாக போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அவர் டைரக்டர் விஷ்ணுவர்தனை வியந்து பாராட்டினாராம்.
அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் நடித்திருக்கும் ஆர்யாவுக்கும் போனைப் போட்டு  படத்துல உங்க நடிப்பு பிரமாதமா இருக்கு. நான் நான் ரொம்ப ரசிச்சேன். குறிப்பா டாப்சியோட நீங்க பண்ற ரொமான்ஸ் சீன்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப இளமையா இருக்கு என்றாராம். பதிலுக்கு ஆர்யாவுக்கு உங்க படத்துல இதே மாதிரி இன்னொரு சான்ஸ் கெடைச்ச கண்டிப்பா நடிப்பேன் என்றாராம்.
பட் அந்தப்படத்துல டாப்சி இருப்பாங்களான்னு தெரியலையே ஆர்யா…?

RJ பாலாஜியின் 120 ரூபாய் விமர்சனமும் எழவு வீட்டு ஒப்பாரியும்!



T.R -க்கு பிறகு ஆங்கில வார்த்தைகளை கோர்வையாக, மூச்சு விடாமல், சொற்களில் வழுக்கி கொண்டு வரும் சில chinese வார்த்தைகளையும் சேர்த்து பேசி புகழ் பெற்ற Rj பாலாஜி-க்கு வணக்கம்.
உங்கள் 120 ருபாய் விமர்சனத்தை கேட்டு கடுப்பான கூட்டத்தில் நானும் ஒருவன். எனக்கு சில விஷயங்கள் புரியவில்லை. ஏன் நீங்கள் ஒரு படத்தை கண்டமேனிக்கு விமர்சனம் செய்யும் பொழுது ஒரு sarcastic point of view-வுடன் செய்கிறார்கள்? நீங்கள் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்று கேட்க தான் தோன்றுகிறது. சரி.. அத விடுங்க.. ஒரு படத்தை பத்தி பேஸ்புக்கில் ஸ்ட்டஸ் போடும் முக்கால்வாசி நபர்கள் ரொம்ப ஈசி-யா ஒரு விமர்சகர் ஆகிடு ராங்க. பேஸ்புக்கில் ஸ்ட்டஸ் போடறவன் என்ன வேணாலும் போட்டுட்டு போறான்.
அத நீங்க சப்பகட்டாலான் சொல்லாதீங்க. ஸ்ட்டஸ் போட்டா அத அதிக பட்சமா பத்து பேர் பாப்பாங்க.. நீங்கள் ஒரு மீடியா-வில், ஒரு கோடி மக்கள், உங்கள் நிகழ்ச்சியை ரசித்து கேட்கிறார்கள் என்ற target audience-இடம் பேசுகிறார்கள். அவர்கள் உங்களின் நேயர்கள். நல்ல விஷயம். இருந்திட்டு போட்டும். அப்படி ஒரு பெரிய ரீச் இருக்குன்றது உங்களுக்கு தெரியும் போது ஒரு படத்த ஏன் நேர்மையா கொண்டு போய் சேர்க்க மாட்றீங்க. “மூடர் கூடம்” படத்துல வர நாய் ப்ளாஷ்பேக், 17-ஆவது ப்ளாஷ்பேக் ah?? ஏன் இப்படியாபட்ட ஒரு exaggeration? என் பக்கத்தில் படம் பார்க்காத நண்பன் கேட்டான் நெஜமாவே அது 17-வது ப்ளாஷ்பேக் ah? இது தான் நீங்கள் create பண்ணும் impact. ஒரு படத்த எந்த அளவுக்கு தப்பா address பண்றீங்கன்னு தெரிஞ்சிகோங்க..
“கோனார் உரை” போட்டா உங்களுக்கு என்ன வந்துச்சு? உங்க android app launch-ல நடிகர் தனுஷ் உங்கள பத்தி சொன்ன உடனே, மைக் உங்க கைல கெடச்சதும் உங்க நியாயத்த சொல்லி தனுஷ் சொன்னத defend பண்ணீங்கள.. அத ஒரு டைரக்டர் பண்றான். உங்களுக்கு அதனால என்ன பிரச்சன வந்துச்சு..? ஒரு கதையில் பல தகவல்கள் நேரடியாக சொல்லபடுகிறது.. சிலது நேரடியாக சொல்லாமல் யூகிக்க வைக்க படுகின்றன. அப்படியா பட்ட யூகங்களுக்கு ஒரு தெளிவுரை சொன்னால் உங்களுக்கு என்ன பிரெச்சனை? ஒரு படத்துல சில விஷயங்கள வைக்க ஒரு நோக்கம் இருக்கும். சிலதுக்கு நோக்கம் இருக்காது. எல்லாத்தையும் நோண்டி நொங்கு எடுத்து அதை பிரித்து மேய்ந்து உங்கள் ஷோவின் சுவாரசியத்தை கூட்டுகிறீர்கள். சரி.. நான் கேட்குறேன்..
“கல்யாண சமையல் சாதம்” படத்தோட trailerல நீங்க ஏன் பேசிருக்கீங்க? ‘கதைக்கும் என் narrationகும் சம்மந்தம் இல்ல’ன்னு துச்சமென தூக்கி போட்டு போக வேண்டியது தான?? வியாபார நோக்கத்துடன் முன் வைத்த ஒரு பதிவு தான அது. அது என்ன உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயம். கத்தியால ஒருத்தன குத்தி கொன்னுட்ட பிறகு அப்புறம் என்ன மயித்துக்கு Take it easy. மயிரு கேட்ட வார்த்தை இல்லை. “கடல்” படத்த தொறந்த வீட்ல நாய் நொழஞ்ச மாதிரி கலாய்கிறீங்க? “skyfall” உனக்கு என்னயா பாவம் பண்ணுச்சு??
மாஸ் மீடியாவில், மக்கள் ரசனையை மட்டும் வேராக நம்பி ஒரு அங்கீகாரம் தேடி கொண்டு அலையும் நாகரீக கோமாளிகள் நாங்கள். அதே மாஸ் மீடியாவில் இருந்து கொண்டு எழவு வீட்ல ஒப்பாரி வெக்கிற மாதிரி ஒரு படத்துக்கு இருக்கிற சட்டைய நார் நாரா கிழிச்சி உங்கள் sarcastic point of view-ன் துணை கொண்டு buffoon வேஷம் போட்டு விட்டு அழகு பார்த்து ரசித்து கிண்டல் செய்கிறீர்கள். நீங்கள் ஒரு படத்துக்கு Common audience- ன் point of view சொல்வதாக கேள்விபட்டேன். நீங்கள் யார் common audience போல பேசுவதற்கு? அதெல்லான் இருக்கட்டும்.. யார் அந்த common audience?? Audience-ல் இருக்கும் ஒவ்வொருதரும் ஒரு தனி ரசனை கொண்ட individuals. இப்படி தனி தனியாக பிரிக்கப்படும் தனிநபர்களின் கருத்துகளை எப்படி ஒன்று சேர்க்க முடியும். அவர்களுக்கு ஒரு Tag கொடுக்க முடியாது. சரி.. அப்படியே வெச்சிப்போம். நீங்கள் கொடுத்து படம் பார்க்கும் 120 ரூபாயும் நாங்கள் செலவு செய்து படம் பார்க்கும் 120 ரூபாயும் ஒன்றாகி விடுமா என்ன??
நீங்கள் 120 ருபாய் கொடுத்து படம் பார்த்து அதை பகிரங்கமாக கலாய்த்து உங்கள் சம்பளமாக மாற்றி கொள்கிறீர்கள். நாங்கள் செலவு செய்வது எங்களுக்கு வெறும் செலவு. உங்கள் show-ன் டைட்டிலே ஒரு உச்சகட்ட அபத்தம். நீங்கள் பேசும் அந்த சில நிமிடங்களை சுவாரசிய மாக்கி கொள்ள, படங்கள் தான் உங்களுக்கு கிடைத்ததா? உங்களுக்கு பிடிச்சிருக்கு பிடிக்கலன்னு பகிர்ந்துகுறீங்க.. அத ஏன் மாஸ் மீடியால பண்றீங்க? உங்கள் நண்பர்கள் வட்டத்துலையே பண்ணலாமே. இங்கே ஒரு critic ஆக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
இங்கு யாரும் ஒரு critic ஆக விமர்சனம் எழுதுவதில்லை என்பது என் கருத்து .. இன்னும் opinion spillers ஆக தான் இருகிறார்கள். நான் கவனித்ததை வைத்து சரியாக சொல்ல வேண்டுமானால் strong opinion spillers மற்றும் weak opinion spillers ஆக இருகிறார்கள். ஒரு படத்தை யாரும் சரியாக பார்ப்பதில்லை. ஒரு படத்தின் விமர்சனம் அந்த படத்தின் quantitative analysis, qualitative analysis, genre and sub-genre description, subjective point of view, objective point of view, plot analysis, budget grade(low or high budget), மற்றும் அந்த படம் target செய்யும் audience(adult(A) or universal(U)(U/A) or anything specific) அவர்களிடம் சரியாக சென்று அடைய உதவ வேண்டும்.
இந்த பிரிவுகளின் அடிபடையில் படத்தில் இருக்கும் நெளிவு சுளிவுகளை நேர்மையாக சொல்ல வேண்டும். யாரும் இதை பண்ணுவதே இல்லை. நீங்களும் தான். எங்கள் வயித்தில் அடித்து விட்டு உங்கள் வயிறுக்கு எங்களை தீணி ஆக்குவது என்ன நியாயம்? பெண்களை தாருமாராக cross talk-ல் கலாய்த்து விட்டு Being humanல் சமத்து பாப்பா போல ஏன் பேச வேண்டும்? இதுக்கு நடுவுல வெறுப்பேத்தர மாதிரி “சிசிபுஜிகி”(ஸ்பெல்லிங் mistake இருந்தால் மன்னிக்கவும்), “அட” மற்றும் nursery rhymesல் கடைசியாக முடியும் rhyming வார்த்தைகளை சுட்டு, ஒரு படத்தை கலாய்க்க ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, நாகரீக முன்னேற்றத்தால் ஆரம்பத்தில் ஒரு ‘sorry’ இறுதியில் ஒரு டன் டொன் டன் என்று அற்புதமான இசை சொற்களாலும் அருமையாக programய் ஆரம்பித்து முடிக்கிறீர்கள். ஒரு படத்தை audience இடம் சரியாக சேர்க்கும் பட்சத்தில் அது positive review or negative review எதுவாக இருந்தாலும் சரி.. அதை ஒப்பு கொள்கிறோம். இல்ல இப்படி தான் நான் பண்ணுவேன்னு சொன்னா நான் அதை பகிரங்கமாக கண்டிக்கிறேன். இதை தெரிய படுத்திகொள்ள தான் இந்த முதல் post..

Post Script: I’m fundamentally, basically, sorry.. Yours faithfully.. Ada!!

Friday, October 11, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா - டிரைலரே இவ்வளவு கேவலமா இருக்கே அப்போ படம்?



கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும் படமான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதை ஒரே நாளில் சுமார் 17000 பேர் பார்த்துள்ளார்கள். இது மிக மிக குறைவான ரசிகர்கள் பார்த்திருப்பதையே காட்டுகிறது. இதற்கு கருத்து தெரிவித்திருக்கும் ரசிகர்களில் பலர், ‘டிரைலரே இவ்வளவு கேவலமாக இருக்கிறதே படம் அப்போ எப்படி இருக்கும்…?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் இதயே பல படங்களில் பார்த்து சலிப்பு தட்டாமல் இருக்கும் ஆன்மாக்களுக்கு மட்டும் ஆல் இன் ஆல் அழகுராஜா டிரைலர்.


Sunday, September 22, 2013

விந்து முந்துதலை தவிர்க்க்கும் ஆண்மை பெருக்கும்…!!




விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-
ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி
botonical name- myristica fragrans
விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன,அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காயும் ,ஜாதி பத்ரி யும் .
ஜாதிக்காயை ஊறுகாயாக சாப்பிடவே கூடாது.
ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விண்டு முந்துதல் நிற்கும்.ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.விந்து முந்துதல் சரியாக்கும் பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளது.
இந்த பாட்டு படித்தால் -எளிதாக புரியும் ..
ஜாதிக்காய்
தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்
ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ
டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங்
குலக்கா யருந்துவர்க்குக் கூறு
ஜாதி பத்ரி
சாதி தரும் பத்திரிக்குத் தாபச் சுரந்தணியும்
ஓது கின்ற பித்தம் உயருன்காண்-தாது விர்த்தி
யுண்டாங் கிரகணியோ டோதக் கழிச்சலறும்
பண்டாங் குறையே பகர்

Saturday, September 21, 2013

வெளிநாட்டுக்கு போயிட்டு வர்றவங்க...




கையில மினரல் வாட்டரை வச்சிக்கிட்டே திரியிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்திரமா வச்சிக்கிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிக்கிட்டு அல்லது தள்ளிக்கிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுறதே, சர்க்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறயா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துக்கோங்க!)

கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க… (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி “ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்”னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு “எக்ஸ்சூஸ்மீ” ன்னு சொல்றது… (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

“செளக்கியமா”ன்னு கேக்காம.. “ஹாய்”ன்னு சொல்றது, “லட்ச”த்துக்கு பதிலா.. “மில்லியன்ல” சொல்றது, தயிருக்கு பதிலா.. “யோகர்டு”ன்னு சொல்றது, “ஹய்வே”க்கு பதிலா “ஃப்ரீவே”ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா “கோக்கோ (அ) பெப்சியோ” இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. “தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா” ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி… அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு…

எதை சொல்ல வந்தாலும்.. “இப்படிதான் எங்க‌ துபாய்ல…”, ன்னு ஆரம்பிப்பாங்க!!

நிஜ மனிதர்கள் - நர்ஸம்மா!

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - நர்ஸம்மா!



மூம்பையிலிருந்து தமிழகம் வந்துக் கொண்டிருந்த ரயிலில் பிச்சைக்காரர்கள் தொல்லை மிக அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கூட ஒருவர் மாற்றி ஒருவர் பிச்சை கேட்டு வந்துக் கொண்டிருந்தார்கள். இதில் சில இளம் பெண்கள் குழந்தைகளை வேறு சுமந்துக் கொண்டு வந்து பிச்சை கேட்டார்கள். அந்த குழந்தைகள் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தன. செய்திகளில் வருவது போல் போதை மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்து தூங்க வைத்துவிடுகிறார்களா தெரியவில்லை.

இப்படி பிச்சைக் கேட்டு வந்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே ஒரு பாட்டி பூ விற்றுக் கொண்டு வந்தார்கள். நான் அந்த பாட்டியிடம் பூ இரண்டு முழம் வாங்கி எதிரில் இருந்த வயதான தம்பதிகளுக்கு கொடுத்தேன். பாட்டியின் பூக்கள் விற்று விட்ட படியால் கொஞ்சம் உட்காரலாமா என்று கேட்டார். நான் அவருக்கு இடமளித்து அவரோடு பேசத் தொடங்கினேன். அவரோ கன்னடத்தில்தான் பேசினார். கன்னடத்தில் எனக்கு அத்தனை பயிற்சி இல்லாதபடியால் எதிரில் இருந்த வயதான தம்பதிகள் மூலம் நான் கேள்வி கேட்க பாட்டி, தயங்கி தயங்கி பதில் சொன்னார்.

அதன் பின்னர் பாட்டிக்கு தெலுங்கு தெரியும் என்று தெரிந்துக் கொண்டு நான் அவரோடு தெலுங்கில் உரையாடினேன். பாட்டிக்கு சொந்த ஊர் மந்தராலயா பக்கத்தில் உள்ள அனந்தபூர் என்றார். பாட்டியின் பெயர் நர்ஸம்மா, வயது எவ்வளவு என்று தெரியாதாம். கணவர் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும், தன் குழந்தைகளை இப்படி பூ விற்றே வளர்த்ததாயும் சொன்னார். சில வருடங்களுக்கு முன் பாட்டியின் ஒரு மகள் இறந்துவிட்டதால், அந்த மகளின் கணவன் (மருமகன்) வேறு ஒரு திருமணம் செய்துக் கொண்டு வேறெங்கோ சென்றுவிட்டானாம். அவன் விட்டு சென்ற‌ இரண்டு மகள்களை பாட்டிதான் வளர்க்கிறாராம்.

பூ விலை மிக அதிகமாக இருப்பதால் பெரிய வருமான‌ம் இல்லை என்றார். ஒரு நாளைக்கு சராசரியாய் நாற்பது முதல் ஐம்பது ரூபாய் கிடைக்குமாம். அதை வைத்துதான் இத்தனை காலமாய் குடும்பம் நடத்துகிறாராம். இப்போது பெரிய பேத்திக்கு பதினைந்து வயது ஆகிவிட்ட படியால் அவளும் அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து சம்பாதிக்க தொடங்கியுள்ளதாய் சொன்னார். கடைசி வரை சுயமரியாதையோடு சொந்த காலில் வாழ்ந்தால் போதும், வேறு ஒன்றும் வேண்டாம் என்றார் நர்ஸம்மா.

இளமையோடு இருப்பவர்களே பிச்சை எடுத்து திரியும் சூழ்நிலையில் தள்ளாத வயதில் கூட பாட்டியின் சுயமரியாதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் கொடுத்து, உங்கள் மகன் கொடுப்பதாய் நினைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அதை பணிவாக மறுத்துவிட்டு, ஏதாவது பழம் வாங்கி கொடுங்கள் என்றார். ஆப்பிளும் ஆரஞ்சும் வாங்கி தர, சந்தோஷமாய் வாங்கிக் கொண்டார் பாட்டி.

மந்தராலயா ஸ்டேஷன் வந்ததும் விடை பெற்றார் நர்ஸம்மா பாட்டி. கூண் போட்டு நடந்த அவரின் வளைந்த‌ முதுகுகளில், நிமிர்ந்த பாரதம் தெரிந்தது.


Sarvam Krishnarpanam

Friday, September 20, 2013

என்றும் இளமையோடு இருக்கணுமா ஆயில் மஜாஜ் பண்ணுங்க…!



வயதாக ஆக தோற்றத்தில் முதுமை ஏற்படுவது இயற்கை. ஆனால் அதில் இருந்து தப்பித்துக் கொள்ள எண்ணெய் மசாஜ் அடிக்கடி செய்யலாம். சில எண்ணெய் வகைகளும் அவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
திராட்சை எண்ணெ – இதில் மஜாஜ் செய்தால் தோலின் சுருக்கங்கள் நீங்கும். தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்து விடும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இந்த மஜாஜை செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக ஜொலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

அவகோடா எண்ணெய் – இந்த எண்ணெயில் இருக்கும் ஒமேகா3பேட்டி ஆசிட் அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை குறைத்து விடும். இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்தால் சருமம் இறுக்கமடைந்து முகத்தில் உள்ள சருமத்துளைகளை விரைவில் போக்கி விடும்.
நல்லெண்ணெய் – உடலுக்கு செய்யும் மஜாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மஜாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெய்யை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும்.
ஆலிவ் எண்ணெய் – இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்யும் போது எண்ணெயை சூடேற்றக்கூடாது. சூடாக்கினால் அதில் உள்ள சத்துகள் அனைத்தும் போய்விடும்.

Friday, June 19, 2009

Tuesday, June 16, 2009