Showing posts with label Spicy Actress. Show all posts
Showing posts with label Spicy Actress. Show all posts

Monday, November 4, 2013

போலீஸுக்குத் தெரியாமல் நடந்த பிரம்மாண்டமான செக்ஸ் திருவிழா

ல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட உலகின் மிகப்பிரம்மாண்டமான செக்ஸ் திருவிழா டெக்சாஸ் நகரில் உள்ள தென் பத்ரே ஐஸ்லேண்ட் பகுதியின் மிகப்பிரமாண்டமான கடற்கரையில் கடந்த நான்கைந்து தினங்களாக நடைபெற்றது.
இந்த விழாவில் வோட்கா,விஸ்கி போன்ற மதுவகைகள் தாரளமாக விநியோகிக்கப்பட்டதுடன் பாலியல் களியாட்டமாகவும் இது அமைந்திருந்தது.
மாணவிகள் தங்களை மறந்த நிலையில் இருக்க ஆண் நண்பர்கள் அவர்களின் உடல் உறுப்புகளில் கை வைப்பதும், சிலர் மொத்தமாகவே கழற்றிவிட்டு சக நண்பர்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டும் விழாவை சிறப்பித்தனர்.
ஆனால் அரசுக்கு தெரியாமல் நடைபெற்ற இந்த களியாட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னரே போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் அங்கு செல்லும் போது நிலைமை கவலைக்கிடம் .. காய்ந்த மாடு கம்பில் பாய்வதுபோல இவர்களின் நடவடிக்கைகள் இருந்ததால் பலர் சுயநினைவின்றி அபாயகரமான நிலையில் இருப்பதை காண முடிந்தது.
இவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதோடு,மற்றவர்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார்களாம்.


இதோ இளசுகளின் காமக்களியாட்டங்கள் நிறைந்த போட்டோ கேலரி:






























கூகுளில் அதிகமாக செக்ஸ் படம் பார்ப்பவர்கள் : முதல் இடத்தில் இலங்கை; 2-வது இடம் இந்தியாவுக்கு!


ல்லரசாகும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்திய நாடு ஊழலில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது, இப்போது அதையும் தாண்டி பிட்டு படம் பார்ப்பவர்களின் எண்ணிகையில் பக்கத்து நாடான இலங்கைக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூகிளின் சர்ச் மூலம் செக்ஸ் என்ற வார்த்தையை தேடுபவர்களின் எண்ணிக்கையில் உலகின் முதல் இடத்தில் இலங்கை உள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
இதன் மூலம் உலகிலேயே ராஜபக்‌ஷே தலைமையிலான அராசாங்கத்தை கொண்டிருக்கும் இலங்கையில் தான் பாலியல் சம்பந்தமான நீலப்படக்காட்சிகளை அதிகமாக பார்க்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
சமீபகாலமாக இலங்கை மற்றும் இந்தியாவில் மொபைல், டேப்லெட், கனிணி ஆகியவற்றின் மூலம் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூகுள் இந்த புள்ளி விபரத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, October 19, 2013

தரைமட்டமாகும் அதிமுகவின் கோட்டை!



சொந்தக் கட்சிக்காரனே சூனியம் வைக்கும்போது, அடுத்தக்கட்சிக்காரன் ஏன் ஆசைப்படமாட்டான்? என்று தர்மபுரி அதிமுக வினர் கொந்தளித்துப்போய் உள்ளனர். சமீபகாலமாகவே அஇஅதிமுகவுக்குள் தலைமையை விட கீழ்மட்டத்தில் உள்ளவர்கள், தெளிவாகவே உள்ளார்கள். கட்சிக்கு சங்கு ஊதாமல் போவதில்லையென்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அ.அதிமுக தலைமைக்கு தெரியுமா? இல்லை சில அல்லக்கைகள் தலைமைக்கு தெரியாமல் மறைக்கின்றனவா என்ற சந்தேகத்தோடு நம்மை பார்த்துக்கேட்டனர். நமக்கு தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அவர்கள் சொல்வத சரியாக புரியாததால் தெளிவாக சொல்லுங்கள் என்று தருமபுரியில் ஆஜரானோம். மழை பெய்து ஓய்ந்துபோன ஒரு மாலை வேளையில் தருமபுரியில் கால்வைத்தோம். அங்குள்ள அஇஅதிமுகவினரை விசாரிக்க ஆரம்பித்தோம்.
ஆமாம், சார் மாமன் -மச்சான் சண்டைகள் போல கட்சிக்குள் அதுவும் தருமபுரி அஇஅதிமுகவுக்குள் ஏகப்பட்ட வில்லங்களும் நடக்கின்றன. ஆனால் சாமர்த்தியமாக இதை தலைமைக்கு தெரியாமல் மறித்துவிட்டு தலைமையிடம்  நல்லபெயர் எடுப்பதாக பச்சை துரோகம் பண்ணுகிறார்கள் சார். இதுபற்றி நீங்களாவது முதல்வரின் பார்வைக்கு தெரியப்படுத்தி தருமபுரி அதிமுக வுக்குள் ஒரு தெளிவு உண்டாக்குங்கள் சார் என்றார்கள் அனைவரும். தருமபுரி அதிமுகவின் கோட்டை என்பது சொல்லப்படும் ஒன்று. ஆனால் தற்போதைய நிலையைப் பார்த்தால் தருமபுரி அஇஅதிமுகவின் கோட்டையானது பலசேட்டைகளால் சின்னபின்னப்படுத்தப்பட்டு கிடக்கிறது. ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியவர்களோ நிறைய உள்ளடி வேளை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எப்படி தமிழகத்தில் தருமபுரி அதிமுகவின் கோட்டை என்று சொல்லமுடியும்? என்ற கேள்வியை வைத்தார் தருமபுரி வாசி ஒருவர்.
தற்போதைய நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள களத்தில் இறங்கினோம். இங்கு நடக்கும் அனைத்து உள்ளடி டப்பாங்குத்து வேலைகளுக்கு அன்பழகனும் ஆகிய இருவருமே காரணம் என்று தருமபுரி மாவட்ட அனைத்து அஇஅதிமுக வினருமே சுறுகிறாரக்ள். அவர்கள் சொல்வதை வைத்துப்பார்க்கும் போது தருமபுரி மாவட்டத்தை இரண்டாவது அஇஅதிமுக  வாக நடத்துகிறார்கள் என்பது அப்பட்டமாய் தெரிந்தது. இவர்கள் இருவரும் எதில் கலந்து கொண்டாலும் தங்கள் பலம் எது வென்பதைத்தான் காட்டும் விதமாக நடந்துக்கொள்கிறார்கள் என்கிறாரகள் இங்குள்ளவர்கள்.
தற்போது கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தான் மோதலின் உச்சக்கட்டம் வெளிச்சத்துக்கு வந்தது.  நிறைய இடங்களில் அடிதடிகள், மண்டை உடைப்புகள், சிலப்புகள் கழித்து எறிதல் போன்றவைகளும் நடந்தன. அதாவது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது என்றுகூட சொல்லலாம். இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியது ஒன்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள கே.கே. 80 வாக்கவுண்டணூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தேர்தலில் நடந்த கும்தக்கடி வேலைகள்தான். இதற்கு நடந்த தேர்தலில் கட்சி கமிட்டி வி.சி.கவுதமன், தொகுதி இணைசெயலாளர் என். இராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தென்னரசு மாவட்ட குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் பி.பள்ளிப்பட்டியில் கட்சி உறுப்பினர்கள் அமைச்சரின் உண்மை விசுவாசி ஊராட்சி மன்றத்தலைவர் பொன்மணி ஆகியோர் ஒரு மனதாக முடிவு செய்து ஒன்றிய மாணவரணி செயலாளர் மகேந்திரன் பி.இ,. என்பவரை தேர்ந்தெடுத்தனர்.
இவர் 7 ஆண்டுகள் இந்த பொறுப்பிலும், சென்ற சட்டமன்றத்தேர்தலில் பையர்நத்தம், பள்ளிப்பட்டி, போதக்காடு போன்ற பகுதிகளில் தேர்தல் பொறுப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் கவர்ந்தவர். இதுவே இவரை கூட்டுறவு சங்கத்தலைவராக கட்சியினர் அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிக்காரர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இவரின் இந்த வளர்ச்சியை பொறுக்கமுடியாத ஊராட்சிமன்றத் தலைவர் அஇஅதிமுக வைச் சேர்ந்த பொன்மணி சத்தம் போடாமல் செம உள்குத்து வேலையில் இறங்கிவிட்டார். கட்சி அறிவித்துள்ள வேட்பாளரை தோற்கடிப்பது என்ற முடிவு செய்து, அதை செயல்படுத்துவதில் மிக தீவிரமாகவும் இருக்கிறார்.
இதற்காக அமைச்சரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றும் விட்டிருக்கிறார். இதற்காக கட்சியினர் பலரைச்சேர்த்துக்கொண்டும் தனது ஆதரவாளர்களோடும் ஒன்றினைந்து திடீரென போட்டி வேட்பாளரை உருவாக்கினார்.
உடனே கட்சி பொறுப்பாளர்கள் சென்னை சென்று அமைச்சரை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மகேந்திரனிடம் போட்டி வேட்பாளர்கள் செய்த செலவுகளுக்குண்டான பணத்தினைக் கொடுத்துவிடு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றிருக்கிறார். அமைச்சர் மேலும் தலைவராக நீயேதான் இருப்பாய் என்று சப்போர்ட்டும் செய்துள்ளார் அமைச்சர்.
ஆனால் உடனே பின்னாடியே மகேந்திரனுக்கு சரியான ஆப்பு வைக்கும் வேலையையும் சொல்வார். அமைச்சர் சொன்னதை கொஞ்சம் கூட பிசகாமல் பொன்மணி கண்ணின் மணியாக செயல்படுத்தினார். பொன்மணி இருக்கிறாரே அவர் லேசுபட்டவரில்லை. அமைச்சரின் ஆசி கிடைத்துவிட்டால் போதும், அந்த பிரம்மனே வரம் கொடுத்துவிட்டதாக நினைத்து எல்லாவற்றையும் ஒரு கை பார்க்க கிளம்பி விடுவார். இதனடிப்படையில் ஒட்டுப்போடும் டைரக்டர்களை கடத்திக்கொண்டு போய் அவர்களுக்கு வேண்டியதை கவனித்து (பணம்-பெண்) மகேந்திரனை தோற்கடிக்கச் செய்து கட்சிக்கே சம்மந்தமில்லாத ராஜா என்பவரை தலைவராக்கிவிட்டார்.
கட்சிக்காக பாடுபட்ட மகேந்திரனோ அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கியவர். நன்றாக பழகக்கூடியவர், நல்ல பண்பாளர், பட்டதாரியும் கூட, மேலும் கட்சி வென்றால் அப்படியொரு உண்மை விசுவாசி, மாவட்ட செயலாளர் அன்பழகனுக்கு நெருக்கமானவர் என்பதால் அமைச்சர் தனது கட்சி வேட்பாளரையே தோற்கடித்திருப்பது இங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. ஊராட்சி மன்றத்தலைவர் பலரிடம் அமைச்சர் பெயரைச் சொல்லி வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கியிருக்கிறார் என்றும், வேலை வாங்கித்தராமல் பணத்தை திரும்பி கேட்பவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து பேசி உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெனாவட்டாக அடியாட்களை வைத்து மிரட்டுகிறாராம்.
இவர் இரவு நேரங்களில் தன்னுடைய அடியாட்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே குடியும், குடித்தனமுமாகவும், பெண்களுடன் சல்லாப லீலையும் செய்து வருவதாகவும் அந்தப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள். இத்தனை விசயங்களும் நடந்து முதல்வர் பார்வைக்கு போகவில்லையென்றால் இடையில் எங்கோ சீனப்பெருஞ்சுவர் இருப்பதாக தான் அர்த்தம்.

ஆடியோ விழாவில் 'வழக்கு எண்' நடிகையைப் பார்த்து ஆடிப்போன பிரபலங்கள்!









ஜன்னல் ஓரம் படத்தை இயக்கியிருக்கிறார் கரு பழனியப்பன். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சூர்யா, அமீர் மற்றும் ஜன்னல் ஓரம் படத்தில் நடித்த பார்த்திபன், விமல், விதார்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்தப் படத்தில் கதாநாயகிகளாக பூர்ணா, வழக்கு எண் படத்தில் நடித்த மனிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் கொஞ்சம் மூடி மறைத்த உடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் மனிஷா அணிந்திருந்த ஆடையோ கவர்ச்சியின் உச்சம் தொட்டதாக இருந்தது. மேடையில் மனிஷா நின்றிருந்த போது ரசிகர்கள் அத்தனை பேரின் கண்களும் மனிஷாவையே மொய்த்திருந்தன. மேடையில் இருந்த பிரபலங்களில் சிலர் மனிஷாவின் உடையைப் பார்த்து ஆடிப் போயினர். நல்ல படங்களை எடுக்கும் கரு பழனியப்பன் படத்தின் விழாவுக்கு வருகிற நடிகை இவ்வளவு கவர்ச்சியாகவா வருவார்… என்று சிலர் கேள்வி எழுப்பினாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதற்கு அச்சாரமாகத்தான் மனிஷா அந்த மாதிரி உடையணிந்து வந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

‘ஆரம்பம்’ படத்துல ஆர்யாவும், டாப்ஸியும்…. ம்… ம்… : அம்பலப்படுத்திய அஜித்!



ரம்பம்’ படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் அதிக நெருக்கம் காட்டியிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித்.
‘பிக்கப் – ட்ராப்’ இந்த இரண்டு சமாச்சாரங்களிலும் இளம் ஹீரோக்கள் மத்தியில் பெயர் போனவர் நடிகர் ஆர்யா.
இந்த மாதிரியான விஷயங்களில் மத்த ஹீரோக்கள் எல்லாம் ஏங்கிக்கிடக்க  ஆர்யாவுக்கு மட்டும் தாரளாமாய் கிடைக்கிறதாம். அதனால் தான் என்னவோ அவரை பற்றி பேச வாயெடுத்தாலே மத்த ஹீரோக்கள் அவரை பொது மேடைகளில் காய்ச்சி எடுத்து விடுகிறார்கள்.
இதில் இப்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். அவரும் தன் பங்குக்கு ஆர்யாவின் ரொமான்ஸ் சீன்கள் ரகசியத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்.

‘வீரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை ஹைதராபாத் செல்ல இருக்கிறார். அதனால் நேற்று சென்சார் ஆன ஆரம்பம் படம் அவருக்கு ஸ்பெஷலாக போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அவர் டைரக்டர் விஷ்ணுவர்தனை வியந்து பாராட்டினாராம்.
அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் நடித்திருக்கும் ஆர்யாவுக்கும் போனைப் போட்டு  படத்துல உங்க நடிப்பு பிரமாதமா இருக்கு. நான் நான் ரொம்ப ரசிச்சேன். குறிப்பா டாப்சியோட நீங்க பண்ற ரொமான்ஸ் சீன்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப இளமையா இருக்கு என்றாராம். பதிலுக்கு ஆர்யாவுக்கு உங்க படத்துல இதே மாதிரி இன்னொரு சான்ஸ் கெடைச்ச கண்டிப்பா நடிப்பேன் என்றாராம்.
பட் அந்தப்படத்துல டாப்சி இருப்பாங்களான்னு தெரியலையே ஆர்யா…?

Friday, October 11, 2013

நய்யாண்டி - தயாரிப்பாளரை ஓட்டாண்டி ஆக்காம விடமாட்டாங்க போலிருக்கே!



நாலு நாளைக்கு முன்னால கூட நய்யாண்டியா அது யாரு நடிச்ச படம் என்றுதான் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் எப்போது நஸ்ரியா தொப்புள் விவகாரத்தை கையில் எடுத்தாரோ அதில் இருந்து படம் பற்றிய செய்திகளும் பரபரப்பாக மீடியாவில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. இரண்டே நாட்களில் எல்லோரையும் ரீச் ஆகிவிட்டது நய்யாண்டி. சொட்டவாளக்குட்டியாக ஆரம்பித்த நய்யாண்டி இன்று தொப்புள் நய்யாண்டியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வர ஆரம்பித்திருக்கிறது. களவாணி படத்தை வெற்றிப் படமாகவும் வாகை சூடவாவை விருது படமாகவும் இயக்கிய சற்குணம் இந்தப் படத்தை எந்தவகை படமாக இயக்கியிருக்கிறார்?
ஊருல ஒரு பாட்டி, அந்த ஊரு திருவிழாவுக்கு வருகிற கதாநாயகி, அவளை ஒருதலையாக காதலிக்கிற கதாநாயகன், அவள் தன்னைக் காதலிப்பதற்காக ஹீரோ மெனக்கெடுவது இதையெல்லாம் காலாகாலமாக எத்தனை படங்களில் பார்த்திருப்போம். அதையே கொஞ்சம் தன்னுடைய ஸ்டைல் கலந்து கொடுத்திருக்கிறார் சற்குணம்.
மரியானிலேயே நடிப்பில் பிச்சு உதறிவிட்ட தனுஷ்க்கு இந்த படத்தின் கேரக்டர் எல்லாம் ஒரு சுண்டக்காய்தான்.  சின்ன வண்டு என்னும் கேரக்டரில் வருகிறார் தனுஷ். இவரும் சூரியும் சதீசும் சேர்ந்து அடிக்கிற ரகளைக்கு அளவே இல்லை. ரொம்பவே சிரிக்க வைக்கிறார்கள்.
தொப்புள் புகழ் நஸ்ரியா பல் மருத்துவராக வருகிறார். நேரம் படத்தில் இருந்த அழகில் பாதிகூட அம்மணியிடம் இல்லாதது போன்று தெரிகிறது. இவரது பாட்டியாக வருகிறார் நடிகை சச்சு.
படம் பார்க்கிறவங்க காது கிழியுறமாதிரி நான் ஸ்டாப்பாக சத்தமா டயலாக் பேசி காமெடி பண்ணுகிற சூரியை இந்தப் படத்தில் அளவாக பேச வைத்து காமெடி பண்ண வைத்திருக்கிறார் சற்குணம். இவருடனே வந்து சிரிக்க வைக்கிறார் சதீஷ்.
ஜிப்ரனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்தை இயக்கியிருக்கிறார் சற்குணம். தனுஷ் கால்ஷீட் கிடைத்ததால் இந்தப் படத்தை இப்படி எடுத்துவிட்டாரோ என்னவோ…
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன்தான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார். அந்தப் படத்திற்கு விருதாவது கிடைத்தது. ஆனால் இந்தப் படத்திற்கு…?
ம்… ஆக மொத்தத்தில நய்யாண்டியை எடுத்து தயாரிப்பாளர் ஓட்டாண்டி ஆகாம இருக்க ரசிகர்கள்தான் கைகொடுக்கணும்… ம்… பார்க்கலாம்…

Friday, September 20, 2013

அர்த்தமே இல்லாத காமெடி படங்கள் வெற்றிபெறுகின்றன!

அர்த்தமே இல்லாத காமெடி படங்கள் வெற்றிபெறுகின்றன -கொதிக்கிறார் பிரகாஷ்ராஜ்!



இன்று தமிழ் சினிமாவில் காமெடியாக படம் எடுப்பதிலேயே பல இயக்குநர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம் சிரிக்க வைக்கும் படங்களே வெற்றி பெறுகின்றன. அதே நேரத்தில் சீரியசாக ஒரு கருத்தை சொல்லும் படங்கள் தோல்வியையே தழுவுகின்றன. இது பற்றி கொதித்துப் போய் மனம் திறக்கிறார் பிரகாஷ்ராஜ்.
“தமிழிலும் மலையாளத்திலும் புதுப்புது இயக்குநர்கள் நிறைய பேர் வருவது ஆரோக்கியமான விஷயம்தான். அவங்க எல்லோருக்குமே ஆதரவு கொடுத்து வரவேற்க வேண்டியது நம்ம கடமையும் கூட. மலையாளத்தில் வித்தியாசமான கதைக்களங்களில் நிறைய படங்கள் வருகின்றன. தமிழ்ல டைம் பாஸ் காமெடி படங்கள்தான் அதிகமாக வருகிறது. அர்த்தமே இல்லாம சிரிக்க வைக்கிற படங்கள் வெற்றி பெற்றாலும் மனசில நிற்காது…” என்கிறார் பிரகாஷ்ராஜ் கொஞ்சம் காட்டமாக.

என்றும் இளமையோடு இருக்கணுமா ஆயில் மஜாஜ் பண்ணுங்க…!



வயதாக ஆக தோற்றத்தில் முதுமை ஏற்படுவது இயற்கை. ஆனால் அதில் இருந்து தப்பித்துக் கொள்ள எண்ணெய் மசாஜ் அடிக்கடி செய்யலாம். சில எண்ணெய் வகைகளும் அவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
திராட்சை எண்ணெ – இதில் மஜாஜ் செய்தால் தோலின் சுருக்கங்கள் நீங்கும். தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்து விடும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இந்த மஜாஜை செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக ஜொலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

அவகோடா எண்ணெய் – இந்த எண்ணெயில் இருக்கும் ஒமேகா3பேட்டி ஆசிட் அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை குறைத்து விடும். இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்தால் சருமம் இறுக்கமடைந்து முகத்தில் உள்ள சருமத்துளைகளை விரைவில் போக்கி விடும்.
நல்லெண்ணெய் – உடலுக்கு செய்யும் மஜாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மஜாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெய்யை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும்.
ஆலிவ் எண்ணெய் – இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்யும் போது எண்ணெயை சூடேற்றக்கூடாது. சூடாக்கினால் அதில் உள்ள சத்துகள் அனைத்தும் போய்விடும்.

Friday, June 19, 2009