Showing posts with label வடிவேலு. Show all posts
Showing posts with label வடிவேலு. Show all posts

Thursday, July 2, 2009

வடிவேலு வேண்டாம்! சேரன் பிடிவாதம்.

சேரனின் பெரும்பாலான படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்தான். அப்படியிருக்க, தனியாகவே பொக்கிஷம் என்ற படத்தை இயக்கி வருகிறார் சேரன். மாயக்கண்ணாடி தோல்விக்கு பிறகு ஒரு கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் இவர், ஒவ்வொரு காட்சியையும் மிக உன்னிப்பாக உருவாக்கி வருகிறாராம். நல்ல விஷயம்தான். ஆனால் அதுவே பட்ஜெட்டை பல மடங்கு உயர்த்திவிடும் போலிருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பொக்கிஷத்தை முதல் காப்பி அடிப்படையில் உருவாக்கி வரும் சேரன், சின்ன சின்ன காட்சிகளுக்காக கூட நாள் கணக்கில் செலவிடுகிறாராம். பட்ஜெட்டை மீறினால் தனது கையிலிருந்துதான் செலவழிக்க வேண்டும் என்பது தெரிந்தும் செலவு செய்வது அவரது நேர்த்திக்கு அடையாளம்! பாராட்டுகள். ஆனால் ஒரு விஷயத்தில் அடம் பிடிப்பதைதான் பொறுக்க முடியாமல் தவிக்கிறாராம் தயாரிப்பாளர்.

கதை கனமாக இருந்தாலும் வடிவேலு மாதிரி யாராவது இருந்தால்தானே ரசிக்க முடியும்? இது தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கின் ஆசை. வைகை புயல் உள்ளே வந்து வேகமாக வீசினால் கதையே சேதாரம் ஆகிவிடும் என்பது சேரனின் சமாதானம். இந்த இழுபறியில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறார்கள். வெற்றிக் கொடி கட்டு போன்ற படங்களில் வடிவேலுவையும் வைத்துக் கொண்டு கதையையும் நேர்த்தியாக சொன்னாரே? அதுபோல இப்போதும் சொல்ல முடியாதா என்ன? ஞாயமாதான் இருக்கு!

வெடிகுண்டு முருகேசன்

வெடிகுண்டு முருகேசன்
அண்ணாமலை பிலிம்ஸ் எம்.செந்தில்குமார், பி.எஸ்.கணேஷ் தயா‌ரித்திருக்கும் படம் வெடிகுண்டு முருகேசன். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை இயக்கிய ஏ.‌ஜி.மூர்த்தி இயக்கியிருக்கிறார்.

பசுபதி முதல் முறையாக இந்தப் படத்தில் சோலோ ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வேடத்தில் வடிவேலு. மினி பஸ் ஓட்டுனராக வரும் பசுபதிக்கும், போலீஸ் கான்ஸ்டபிள் ஜோதிர்மயிக்கும் நடுவில் ஏற்படும் மோதலும், காதலும் கதை.மினி பஸ்ஸில் பயணிகள் பயணிப்பதையும், அப்போது நடக்கும் சம்பவங்களையும் ஒரு பாடலில் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல்கள் மற்றும் பின்னணி இசை தினா. படத்துக்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பசுபதி, வடிவேலு இணைந்துவரும் காட்சிகளில் ரசிகர்கள் வாய்விட்டு சி‌ரிப்பார்கள் என்று அடித்து கூறுகிறார் மூர்த்தி. யுகபாரதி, ஏக்நாத் பாடல்கள் எழுதியுள்ளனர். நடனம் தினேஷ், கந்தாஸ். ஆ‌க்சன் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அமைத்துள்ளார்.படம் பிரமாதமாக வந்திருப்பதால் தமிழகம் முழுவதும் அண்ணாமலை பிலிம்ஸே படத்தை சொந்தமாக வெளியிடுகிறது. தணிக்கைக் குழு படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஞாபகங்கள்

பாடலாசி‌ரியர் பா.விஜய் ஹீரோவாகியிருக்கும் படம். காதலின் ஞாபகங்களின் தொகுப்பாக தயாராகியிருக்கிறது இப்படம்.

நான்கு கதைகளை எழுதி அவற்றை தனது நண்பர்களுக்கு படிக்கக் கொடுத்து அவர்களுக்குப் பிடித்த கதையை தேர்ந்தெடுக்கிறார் பா.விஜய். அந்த கதைதான் ஞாபகங்கள். அவரது இறந்துபோன நண்பனின் உண்மைக் கதையாம் இது.

பா.விஜய்யின் ஜோடியாக ஸ்ரீதேவிகா நடித்திருக்கிறார். வில் மேக்கர்ஸ் படத்தை தயா‌ரித்திருக்கிறது. படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதுடன் கதை, வசனம் மற்றும் பாடல்களையும் பா.விஜய்யே எழுதியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ‌ஜீவன் படத்தை இயக்கியிருக்கிறார். மயிலு படத்தை இவர் இயக்கியிருந்தாலும் முதலில் வெளியாகயிருப்பது ஞாபகங்கள். அந்த வகையில் அவரது முதல் படம் இது.

ஜேம்ஸ்விக் இசையமைத்திருக்கிறார். வெளிநாட்டில் டூயட் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை பா.விஜய்யே தயா‌ரித்திருக்கிறார். ராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகம் எங்கும் படத்தை வெளியிடுகிறது.

வரும் 3ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.