Showing posts with label கே எஸ் ரவிக்குமார். Show all posts
Showing posts with label கே எஸ் ரவிக்குமார். Show all posts

Monday, June 29, 2009

ரஜினி-கமல் இணைவார்களா?: கேஎஸ் ரவிக்குமார் பேட்டி


ரஜினி, கமல் இருவருமே இணைந்து நடிக்கும் சூழல் வரும் என்றும், அப்படி ஒரு சூழலை உடனிருப்பவர்கள்தான் உருவாக்க வேண்டும். என்றும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த விகடன் வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

ரஜினி கமல் இருவரும் சேர்ந்து நடித்தால் அந்த பட்ஜெட்டை தாங்குற அளவுக்கு தயாரிப்பாளர் அமையணும்.

கமல் ரஜினி சேர்ந்து நடிக்கிற சூழல் மறுபடியும் வரும்னு நினைக்கிறேன். சேர்ந்து நடிக்கணும்னு அவங்களா நினைக்க மாட்டாங்க. யாராவது தூண்டிவிடணும்.

ஆனா இந்த விஷயத்துல நானா எதுவும் செய்ய மாட்டேன். போய்க் கேட்டா, 'படம் பண்ணி பணம் பார்க்க ஆசைப்படறான்'னு நினைப்பாங்க.

அதனால அந்த மாதிரி விஷயத்தை நான் நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்ல, என்று அவர் பதில் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு மணிரத்னம் ஒருமுறா ரஜினியையும் கமல்பாசனையும் இணைத்து ஒரு படம் எடுக்க முயன்றார். ஆனால் அப்படி நடித்தால் வரக்கூடிய சிக்கல்கள், ரசிகர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு அந்த முயற்சியை ரஜினி - கமல் இருவருமே ஏற்கவில்லை என கூறப்பட்டது.