Showing posts with label ஸ்ரேயா. Show all posts
Showing posts with label ஸ்ரேயா. Show all posts

Monday, June 29, 2009

மச்சக்காளையை மடக்கிப் போட்ட காஜல்!


த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா நடிக்கிற தெலுங்கு படங்களை சைலண்ட்டாக தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கதைக்காகவும், ஹீரோவுக்காகவும் ஓடிய படங்கள் இங்கு சதைக்காகவே ரசிக்கப்படுகின்றன என்பது சொல்லாமலே புரியும். சென்னையை தாண்டி இந்த ஜிகினா சுந்தரிகளின் ஆட்டத்தை காண தவியாய் தவிக்கிற ரசிகர்கள், டப்பிங் பட பாகுபாடில்லாமல் கலெக்ஷனை கொட்டுவதால் அந்த ஏரியாவுலேயும் இப்போது பரபரப்பு.

மேற்படி தங்க தாரகைகளை தொடர்ந்து பிட்டு பட நாயகி லெவலுக்கு டூ பீஸ் தரிசனம் தர வந்திருக்கிறார் ப்ரியாமணி. இவரது படங்களையும் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். இப்போது லேட்டஸ்டாக அதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். இன்னொரு ஜோதிகா என்று இவர் வந்த புதிதில் வர்ணித்த பத்திரிகைகள், ஒரு படம் கூட ஓடாமல் போனாலும், தனது வர்ணிப்பை நிறுத்தவில்லை.

இதற்கு முன்பு வந்த தனது படங்கள் மண்ணை கவ்வினாலும், வரப்போகும் படமான மோதி விளையாடு தனக்கு வெற்றியை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது காஜலுக்கு. எதற்கும் இருக்கட்டும் என்று, தெலுங்கிலும் தனது பெரிய கண்களை அலையவிட்டு வாய்ப்புகளை தேடிக் கொண்டார். அங்குள்ள முன்னணி இயக்குனர் தேஜா இயக்கிய படம் ஒன்றில் இவர்தான் முழுநீள நாயகி. (ள உச்சரிப்பு முக்கியம்)

நல்ல வெயிட்டான கதையில் காஜலின் கவர்ச்சிக்கும் ஒரு வெயிட் இருப்பதால், இந்த படத்தை டப்பிங் லிஸ்ட்டில் வைத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். தமிழில் மச்சக்காளை என்ற பெயரில் வரப்போகிறதாம். ஜொள்ளாபிஷேகத்திற்கு ரசிகர்கள் தயாராகலாம்.

Tuesday, June 23, 2009

ரஜினியால் அதிர்ஷ்ட நடிகையானேன்! - ஸ்ரேயா பேட்டி

ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி எல்லோரும் என்னை ஓரம் கட்டினார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான் என்னை அதிலிருந்து காப்பாற்றி அதிர்ஷ்டசாலி நடிகையாக்கினார்", என்கிறார் நடிகை ஸ்ரேயா.

இதுகுறித்து சமீபத்தில் ஸ்ரேயா அளித்த பேட்டி:

நான் அறிமுகமானது எனக்கு 20 உனக்கு 18 படத்தில்தான். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து ஜெயம் ரவியுடன் 'மழை' படத்தில் நடித்தேன். பொதுவாக தமிழில் ஜெயம் ரவிக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் எல்லோரும் பிரபலமாகி விடுவார்கள். சதா, திரிஷா, அசின், ஜெனிலியா என அப்பட்டியல் நீள்கிறது. நானும் இந்தப் பட்டியலில் வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக அமைந்துவிட்டது. அவருடன் நான் நடித்த 'மழை' படம் சரியாகப் போகவில்லை. என் முதல்படமும் சுமாராகத்தான் அமைந்தது. உடனே எனக்கு ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள்.

இனி தமிழ் படங்கள் அவ்வளவுதான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி சாருடன் 'சிவாஜி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிவாஜி வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அதிர்ஷ்டமில்லாமலிருந்த நான் ரஜினியால் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற 'இமேஜ்' விலகியது. இன்று என் நடிப்பு வாழ்க்கை ஹாலிவுட் வரை நீண்டதற்குக் காரணம் சிவாஜி என்ற படமும், ரஜினிசாரும்தான்.

நம்பர் ஒன் நடிகை போட்டியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நடிகைகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். யாருக்கும் அது நிரந்தரமானது அல்ல... நான் சாய்பாபா பக்தை. எந்த கஷ்டம் வந்தாலும் அவர் கைவிடமாட்டார்", என்றார் ஸ்ரேயா.

Monday, June 22, 2009

ஸ்ரேயாவின் இமயமலை மந்திரம்

ஸ்ரேயாவுக்கு ஆங்கிலம் அத்துப்படி, தெலுங்கு மாட்லாடுவார், தமிலிங்கிஸ் தெரியும். புதுசா அவர் முனுமுனுப்பது என்ன தெரியுமா?
‘கரீஷா போல்தா மே பரமே திகிட்சிதா காபே...’

இது எந்த ஊர் பாஷை என கூகுலுக்குள் போய் குழம்பவேண்டாம். இது ஸ்ரேயா மனப்பாடம் செய்துள்ள மந்திரம். இமயமலை பயணத்திற்கு பிறகுதான் ஸ்ரேயாவிடம் இத்தனை மாற்றம். ‘சிவாஜி’ படத்தில் நடித்தபோது மந்திரம் பற்றி உண்டான ஆர்வம் ஒரு கட்டத்தில் ஆர்வக்கோளாறாகிவிட்டதாம்.

படப்பிடிப்பின் இடைவேளையின்போது இமயமலை பற்றிய தனது அனுபவங்களை ரஜினி அடிக்கடி பகிர்ந்துகொண்டுள்ளார். இதனைக்கேட்ட ஸ்ரேயாவுக்கு நாளடைவில் இமயமலை செல்லும் ஆசை வந்துவிட்டதாம். அங்கு எந்தெந்த இடங்களில் எப்படிப்பட்ட சாமியார்கள் இருப்பார்கள் என்பதையும் கேட்டுவைத்துக்கொண்ட ஸ்ரேயா, ஒரு மாதத்திற்கு முன்பு இமயமலைக்கு சென்றாராம்.

இமயமலையில் இருந்த ஒரு சாமியாரிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ள, சில மந்திரங்களை கற்றுத்தந்திருக்கிறார் சாமியார். அங்கிருந்து திரும்பிய பிறகு சதா அந்த மந்திரங்களை உச்சரிக்க தொடங்கிவிட்டாராம். ‘எந்திரன்’ படப்பிடிப்பில் ரஜினியையும் சந்தித்து அந்த மந்திரங்களை சொல்லித்தந்திருக்கிறார் ஸ்ரேயா.

ஸ்ரேயாவின் மந்திர ஞானம், ரஜினியையே வியக்கவைத்துவிட்டதாம்.

பாடல்காட்சியில் நடிக்கும்போது மந்திரம் சொல்லி போட்டிருக்கும் டிரஸ்காணாமல்போகாமல் இருந்தால் சரிதான்