Showing posts with label சினேகா. Show all posts
Showing posts with label சினேகா. Show all posts

Thursday, July 2, 2009

கோவா'வில் பியா!

வெங்கட் பிரபு இயக்க, ஜெய், சினேகா உள்ளிட்டோர் நடிக்க உருவாகும் கோவா படத்தில் புதிய நாயகியாக பியா இணைந்துள்ளார்.

செளந்தர்யா ரஜினிகாந்த்தின் தயாரிப்பில் உருவாகும் படம் கோவா. வெங்கட் பிரபு இயக்குகிறார். ஜெய், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் கதை நாயகர்களாகவும், சினேகா, ஒரு ஹாலிவுட் நாயகி உள்ளிட்டோர் கதை நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தில் ஏற்கனவே பேசப்பட்ட பூஜா நீக்கப்பட்டு அவருக்குப் பதில் இப்போது பியா சேர்ந்துள்ளார்.

ஏகன் படத்தில் 2வது நாயகியாகவும், பொய் சொல்லப் போறோம் படத்தில் கார்த்திக் குமாருடன் இணைந்து தனி நாயகியாகவும் நடித்தவர்தான் பியா.

தற்போது விஷ்ணுவுக்கு ஜோடியாக பலே பாண்டியா என்ற படத்தில் நடித்து வரும் பியா, 4வது படமாக கோவாவில் இணைந்துள்ளார்.

பியா சம்பந்தப்பட்ட காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர். சில காட்சிகள் கோவாவில் படமாகவுளளனவாம்

Wednesday, June 24, 2009

அச்சமுண்டு இயக்குநரை பாராட்டிய டேனி பாய்ல்!

தான் திரைப்படம் எடுக்க வந்ததன் பலனை ஒரே படம் மூலம் கிட்டத்தட்ட அடைந்தேவிட்டார் அச்சமுண்டு அச்சமுண்டு இயக்குநர் அருண் வைத்தியநாதன்.

ஆம்... தனது ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 ஆஸ்கார் விருதுகள் வாங்கிய பிரபல ஆங்கிலப்பட இயக்குநர் டேனி பாய்ல், ஷாங்காய் திரைப்பட விழாவில் பங்கேற்ற அருண் வைத்தியநாதனை வாழ்த்திப் பாராட்டியுள்ளார்.

சினேகா, பிரசன்னா நடித்துள்ள அச்சமுண்டு அச்சமுண்டு படம், முழுக்க முழுக்க ரெட் ஒன் கேமிராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

சமீபத்தில் ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. விழாவுக்கு வந்திருந்தவர்கள் படத்தைப் பெரிதும் பாராட்டி வாழ்த்தினர். அப்படி வாழ்த்தியவர்களில் முக்கியமானவர் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் இயக்குநர்.

படம் நன்றாக உள்ளதாகவும், படக் குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் இயக்குநர் அருண் வைத்தியநாதனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் வெளியிடவிருப்பதாக படத்தின் பிஆர்ஓ நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

தணிக்கைக் குழுவினர் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

Monday, June 22, 2009

ஜூலை 10ல் அச்சமுண்டு அச்சமுண்டு!


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, பிரசன்னா, சினேகா இணைந்து நடித்துள்ள அச்சமுண்டு! அச்சமுண்டு! ஜூலை 10ம் தேதி திரைக்கு வருகிறது.

ஷாங்காய் திரைப்படவிழாவில் ஐந்து முறை திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றது அச்சமுண்டு! அச்சமுண்டு!.

அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு விருதைத் தட்டி விட்டது. இப்படி வெளிநாடுகளைக் கலக்கிக் கொண்டிருந்த இப்படம் ஜூலை 10ம் தேதி தமிழகத் திரையரங்குகளை பயமுறுத்த வருகிறது.

ஷாங்காய் விழாவில், சீன மக்கள் படத்தைக் கண்டு களித்ததோடு, இயக்குனர் அருண் வைத்யநாதனுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அச்சமுண்டு அச்சமுண்டு-வை தெலுங்கில் வெளியிடவும் துரிதமாக வேலைகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுதும் நூறு சதவிகிதம் டிஜிட்டல் ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர்கள் சார்பாக ஆனந்த் கோவிந்தன் தெரிவித்தார்.

படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் அச்சமுண்டு அச்சமுண்டு குழுவையும், இயக்குனரையும் மனதாரப் பாராட்டி யுஏ சான்றிதழ் வழங்கினர்.

பிரசன்னா, சினேகா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில்,எம்மி விருது வாங்கிய ஹாலிவுட் நடிகர் ஜான் ஷே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதுமுதன் முறையாகும்.

இது இந்தியாவிலேயே முதன் முறையாக ரெட் ஒன் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டது என்பது மற்றுமொரு சிறப்பு.