Showing posts with label தீபிகா. Show all posts
Showing posts with label தீபிகா. Show all posts

Thursday, July 2, 2009

ரன்பீருடனான உறவை பகிரங்கப்படுத்தியதற்காக வருந்துகிறேன் - தீபிகா

நடிகர் ரன்பீர் கபூருக்கும், எனக்குமான உறவை வெளிப்படையாக சொல்லியதற்காக வருத்தப்படுகிறேன். அவசரப்பட்டிருக்கக் கூடாது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் பாலிவுட் 'பாய்லிங் ஸ்டார்' தீபிகா படுகோன்.

சமீபத்தில் ரன்பீருக்கும், தனக்குமான நெருக்கத்தை சற்று வெளிப்படையாக கூறியிருந்தார் தீபிகா. ஆனால் இப்படிச் சொன்னதற்காக வருத்தப்படுவதாக இப்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து தீபிகா கூறுகையில், நாங்கள் இருவரும் காதல் கொண்டபோது வெளிப்படையாக அது இருக்க வேண்டும் என இருவருமே முடிவு செய்து கொண்டோம். இல்லாவிட்டால் அங்கு கிஸ் அடித்தோம், இங்கு கட்டிப்பிடித்துக் கொண்டோம் என்றெல்லாம் தேவையில்லாமல் செய்திகள் வரும் என்பதால்.

எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு தெளிவாக உள்ளதால், மறைப்பதற்கு எதுவும் இல்லை. அதை மக்கள் மதிப்பார்கள் என நம்பினேன். ஆனால் நானும், ரன்பீரும் சேர்ந்து இருப்பது போன்ற சில புகைப்படங்களை பத்திரிக்கைகள் சில வெளியிட்டது எனக்கு வேதனை தருகிறது.

எங்கள் இருவரது குடும்பங்களும் மிகவும் கெளரவமானவை. இதுபோன்ற புகைப்படங்களால் இரு தரப்பு குடும்பங்களும் வேதனைப்படும்.

இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொண்டேன். இனிமேல் வெளிப்படையாக இருக்கக் கூடாது. எங்களது உறவை வெளிப்படையாக சொன்னது தப்பாகி விட்டது. அதற்காக வருந்துகிறேன் என்றார் தீபிகா.

தீபிகாவும், ரன்பீரும் இணைந்து நடிக்க நிறைய பட வாய்ப்புள் வருகிறதாம். இருப்பினும் தங்களுக்கேற்ற கதைக்காக இருவரும் காத்திருக்கிறார்களாம்.

உறவு வேறு, சினிமா வேறு என்பதில் இருவருமே தெளிவாக இருக்கிறார்களாம்.