Showing posts with label South Indian. Show all posts
Showing posts with label South Indian. Show all posts
Saturday, October 26, 2013
குமுதம் என்னை வைத்து வியாபாரம் செய்கிறது - போட்டுத்தாக்கிய கே.எஸ்.ரவிக்குமார்!
சமீபத்தில் வெளியான குமுதம் வார இதழில் கோச்சடையான் படத்தில் தன்னைப் புறக்கணித்துவிட்டதாக கே.எஸ்.ரவிக்குமாரின் பேட்டி வெளியாகி இருந்தது. இது பற்றி சங்கராபுரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசினார் கே.எஸ்.ரவிக்குமார். “என்னுடைய பேட்டி குமுதத்தில் வெளியானதுமே நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன. ‘என்ன உங்களுக்கும் ரஜினி சாருக்கும் ஏதாவது மன வருத்தமா?’ என்றெல்லாம் கேட்டார்கள். என்னுடைய பேட்டியை வைத்து குமுதம் வார இதழ் வியாபாரம் செய்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் அது தொழில் தர்மம். ஆனால் போஸ்டரையும் அட்டைப் படத்தையும் மட்டுமே பார்த்துவிட்டு புத்தகத்தைப் படிக்காமல் எனக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள். முழு பேட்டியையும் படித்தால்தானே உண்மை விளங்கும். என்னுடைய நெருங்கிய நண்பர் எனக்கு போன் செய்தார் ‘உங்களுக்கும் ரஜினிக்கும் என்ன பிரச்சினை…?’ என்று கேட்டார். நான் உடனே போனை பக்கத்தில் இருந்த ரஜினியிடம் கொடுத்தேன். ரஜினி சார் ‘ஹலோ நான் ரஜினி பேசுறேன்… சொல்லுங்க…’ என்று சொல்ல நண்பர் ஆடிப்போய்விட்டார். ‘அது வந்து ஒண்ணுமில்லீங்க…’ என்று சொல்லி சமாளித்தார். எனக்கும் ரஜினி சாருக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் நான் அவரிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பேனா என்ன…? இதன் மூலம் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது எனக்கும் ரஜினிசாருக்கும் மற்றும் கோச்சடையான் டீமிற்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் நட்புடன்தான் இருக்கிறோம்…’ என்று பேசினார். இதன் மூலம் விஸ்வரூபம் எடுக்கவிருந்த கோச்சடையான் விவகாரத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Monday, October 21, 2013
பாரதிராஜா அழைத்தார் ! பாலுமகேந்திரா நெகிழ்ந்தார்!
ஓவியர் அப்துல் ரவூப் நிஸ்தார்!
தனக்கான தகுதியுள்ளவர்களை சினிமா எங்கிருந்தாலும் தேடி ஈர்த்துக்கொள்ளும். அப்படித்தான் ஓவியர் ரஹமத் என்கிற ரவூப் நிஸ்தாரையும் அழைத்து வந்திருக்கிறது.
எங்கோ மதுரையில் ஓவியங்கள்,விளம்பரங்கள்,மேடை அமைப்புகள் என்றிருந்த அவரை சென்னை வரவழைத்திருக்கிறது. ஸ்டோரி போர்டுகள் வரைவதில் ஈடுபடுத்தி கலை இயக்குநராக அழைத்துள்ளது.
யாரிந்த ரஹமத்.. ?
எனக்குச் சொந்த ஊரு மதுரை. என் அண்ணன் இக்பால் நன்றாக படம் வரைவார். அதைப் பார்த்த நாமும் ஏன் வரையக் கூடாது என்று நினைத்தேன். ஆர்வம் அதிகரித்து ஓவியங்களில் இறங்கி விட்டேன்.உலகின் எல்லா வகை ஓவியங்களின் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது.விளம்பரப் போர்டுகள், உருவப் படங்கள், மேடை அலங்காரப் படங்கள் என்று தொழிலானது. வருமானமும் வந்தது. வருமானம் இரண்டாம் சந்தோஷம்தான். முதல் சந்தோஷம் நினைத்ததை வரைய முடிகிறது என்பதுதான். மேடை உருவாக்கியது என்கிற வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கலை இரவுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சுமார் 20 ஆண்டுகள் மேடை ஓவியங்கள்,மேடை அமைப்பு என்னுடையதுதான்' என்கிறார்.
பியூசி வரை படித்த இவரது இயர்பெயர் அப்துல் ரவூப் நிஸ்தார். செல்லப் பெயர் அழைக்கப்பட்ட பெயர்தான் ரஹமத்.இதுநாள் வரை ரஹமத் என்று அழைக்கப்பட்டு அறியப்பட்டவர். இனி இயற்பெயரிலேயே தொடர விரும்புகிறார். அதுதான் பெயர் வைத்து பெற்றோருக்கு மரியாதை என்று நம்புகிறார்.
ஓவியத்துறையில் ஈடுபாடு கொண்டு அவ்வுலகில் வாழ்பவர்களுக்கு பொருளாதாரம் கை கொடுக்குமா ?
"நான் இதை தொழில் முறையாக மதுரையில் செய்து கொண்டிருந்தேன். எனவே பணக் கஷ்டமில்லை 'நீ சினிமாவுக்கு போ' என்று பலரும் கூறிய போது வந்து கொண்டிருக்கிற வருமானத்துக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாதே என்று நினைத்தேன். அது மட்டுமல்ல இதுவே மனதிருப்தியாக இருப்பதாக நினைத்தேன் ' என்றவர். தான் இதுவரை வரைந்த ஓவியங்களை அவ்வப்போது மதுரை பகுதிகளில் கண்காட்சியாக்கினார். நண்பர்கள் தூண்டுதளில்தான் இதைச் செய்திருக்கிறார். ஆனால் அது குடத்திலிட்ட விளக்காக இருந்த அவரது திறமையை குன்றியிட்ட விளக்காக மாற்றியது.
எந்த அளவுக்கு?
ஒருமுறை இவரது கண்காட்சிக்கு இயக்குநர் பாரதிராஜா வந்திருந்தார். சென்னைக்கு அழைத்திருக்கிறார். ஆனால் இவர்தான் வரவில்லை. சென்னையில் ஓவியக் கண்காட்சி வைக்கவும் தூண்டியிருக்கிறார். ஒரு பேட்டியில் இன்று என்ன விசேஷம் என்ற பாரதிராஜாவிடம் கேட்ட போது 'இன்று மதுரையில் ரஹமத்தின் ஓவியங்கள் தான் விசேஷம் பேசப்படுகிற ஒன்று' என்று கூறியிருக்கிறார்.
பாரதிராஜாவை கௌரவிக்கும் வகையில் அவரது அம்மாவின் ஓவியத்தை வரைந்து கொடுக்க, அவரோ நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.ஜூலை 13ல் சென்னையில் முதல் ஓவியக் கண்காட்சியையும் ரஹமத் நடத்தியிருக்கிறார்.
கண்காட்சிக்கு தலைமையேற்ற பாலுமகேந்திரா இவர் வரைந்த 'வயோதிகம்' என்கிற ஓவியத்தை ரசித்து நெகிழ்ந்து விலை கொடுத்து வாங்கியும் பெருமை செய்திருக்கிறார். இவரது ஓவியக் கண்காட்சிகளுக்கு "இயக்குநர்கள் பாலா, அமீர், பார்த்திபன், வசந்தபாலன்,நடிகை ரேவதி என்று தொடங்கி ஆன்மீக உலகத்தைச் சேர்ந்த குன்றக்குடி அடிகளார் வரை வந்து பாராட்டியுள்ளனர்.
கலை இரவுகளுக்காக இவர் வடிவமைத்த மேடைகளை நிகழ்ச்சிக்கு வரும். விஐபிக்கள் பாராட்டிப் பேசியதுண்டு. ஒருமுறை 30,000 பேர் கூடிய கூட்டத்தில் இயக்குநர் இவரைப் பாராட்டியதும், இவர் மேடை அமைப்பதை வரையும் ஓவியத்தை விடிய விடிய உடனிருந்து உற்று நோக்கி ஓவியர் மருது பாராட்டியதும் நெகிழ்வுக்குரியது நிகழ்வுகளாகக் கருதுகிறார்.
எந்தப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று ஓவியம் கர்றுக் கொள்ளாத இவர் பல அமைப்புகளின் ஓவியப் போட்டிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறார். தன்னைவிட ஓவியத்துக்கு கலைக்கு கிடைத்த பெருமையாக இதைக் கருதுகிறார்.
இவர் அழுத்தமாக கூறுகிறார் இப்படி 'எல்லாரிடமும் திறமை இருக்கிறது வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வரையும் ஓவியங்கள் வியப்பூட்டுகின்றன நல்ல ஓவியங்களை ரசிக்கிற குணம் எல்லா தரப்பு மக்களிமும் இயல்பாகவே இருக்கிறது' இதுவரை இவர் பத்தாயிரம் உருவ ஓவியங்களையாவது வரைந்திருப்பார். உலகநாடுகளுக்கெல்லாம் சென்றிருக்கின்றன. இதுவரை சினிமாவைத் தவிர்த்து வந்தவர். இப்போது கலை இயக்கத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். ஓவியங்கள்,சிற்பங்கள்.ப்ளாஸ்டக்
ரஹமத் என்கிற அப்துல் ரவூத் நிஸ்தார் நடத்தும் சென்னையில் வருகிற 21.10.13 முதல் 31.10.13 வரை வின்யாசா பிரிமியர் ஆர்ட் கேலரி,சி ஐ டி காலனி, மயிலாப்பூரில் நடைபெறவுள்ளது.ஓவியர் விஸ்வம் திறக்கவுள்ளார்.திரைப்பட கலை இயக்குநர் ஜேகே பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்.
வண்ணங்களோடும் வரிகளோடும் வாழ்க்கை நடத்தும் நிஸ்தாரின் கனவுகள் மெய்ப்படட்டும்.
Saturday, October 19, 2013
ஆடியோ விழாவில் 'வழக்கு எண்' நடிகையைப் பார்த்து ஆடிப்போன பிரபலங்கள்!
ஜன்னல் ஓரம் படத்தை இயக்கியிருக்கிறார் கரு பழனியப்பன். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சூர்யா, அமீர் மற்றும் ஜன்னல் ஓரம் படத்தில் நடித்த பார்த்திபன், விமல், விதார்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்தப் படத்தில் கதாநாயகிகளாக பூர்ணா, வழக்கு எண் படத்தில் நடித்த மனிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் கொஞ்சம் மூடி மறைத்த உடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் மனிஷா அணிந்திருந்த ஆடையோ கவர்ச்சியின் உச்சம் தொட்டதாக இருந்தது. மேடையில் மனிஷா நின்றிருந்த போது ரசிகர்கள் அத்தனை பேரின் கண்களும் மனிஷாவையே மொய்த்திருந்தன. மேடையில் இருந்த பிரபலங்களில் சிலர் மனிஷாவின் உடையைப் பார்த்து ஆடிப் போயினர். நல்ல படங்களை எடுக்கும் கரு பழனியப்பன் படத்தின் விழாவுக்கு வருகிற நடிகை இவ்வளவு கவர்ச்சியாகவா வருவார்… என்று சிலர் கேள்வி எழுப்பினாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதற்கு அச்சாரமாகத்தான் மனிஷா அந்த மாதிரி உடையணிந்து வந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
‘ஆரம்பம்’ படத்துல ஆர்யாவும், டாப்ஸியும்…. ம்… ம்… : அம்பலப்படுத்திய அஜித்!
‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் அதிக நெருக்கம் காட்டியிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித்.
‘பிக்கப் – ட்ராப்’ இந்த இரண்டு சமாச்சாரங்களிலும் இளம் ஹீரோக்கள் மத்தியில் பெயர் போனவர் நடிகர் ஆர்யா.
இந்த மாதிரியான விஷயங்களில் மத்த ஹீரோக்கள் எல்லாம் ஏங்கிக்கிடக்க ஆர்யாவுக்கு மட்டும் தாரளாமாய் கிடைக்கிறதாம். அதனால் தான் என்னவோ அவரை பற்றி பேச வாயெடுத்தாலே மத்த ஹீரோக்கள் அவரை பொது மேடைகளில் காய்ச்சி எடுத்து விடுகிறார்கள்.
இதில் இப்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். அவரும் தன் பங்குக்கு ஆர்யாவின் ரொமான்ஸ் சீன்கள் ரகசியத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்.
‘வீரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை ஹைதராபாத் செல்ல இருக்கிறார். அதனால் நேற்று சென்சார் ஆன ஆரம்பம் படம் அவருக்கு ஸ்பெஷலாக போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அவர் டைரக்டர் விஷ்ணுவர்தனை வியந்து பாராட்டினாராம்.
அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் நடித்திருக்கும் ஆர்யாவுக்கும் போனைப் போட்டு படத்துல உங்க நடிப்பு பிரமாதமா இருக்கு. நான் நான் ரொம்ப ரசிச்சேன். குறிப்பா டாப்சியோட நீங்க பண்ற ரொமான்ஸ் சீன்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப இளமையா இருக்கு என்றாராம். பதிலுக்கு ஆர்யாவுக்கு உங்க படத்துல இதே மாதிரி இன்னொரு சான்ஸ் கெடைச்ச கண்டிப்பா நடிப்பேன் என்றாராம்.
பட் அந்தப்படத்துல டாப்சி இருப்பாங்களான்னு தெரியலையே ஆர்யா…?
வகைகள்:
Photo Session,
Saree Gallery,
South Indian,
Spicy Actress,
Spicy Indian
Monday, September 16, 2013
தாம்பத்ய உறவை மேம்படுத்த உதவும் கற்றாழை!
நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை
பல மருந்து தன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.
இயற்கையாக வளரும் கற்றாழையில் எத்தனையோ விதமான மருத்துவக் குணங்கள் உள்ளன.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க்
கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை எனப் பலவகை உண்டு.
இதில்
சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கு என்று பயன்படுத்தப்பட்டு
வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள் பாலிசக்கரைடு
மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிய பொருட்கள் உள்ளன. கற்றாழையில் இருந்து
வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.
கற்றாழை
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும்
மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும்
மருத்துவத்திற்கும், காஸ்மெட்கிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம்
பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை என கூறப்படுகிறது.
சோற்றுக்
கற்றாழை மடல்கள் பிளந்து நொங்குசுளை போல உள்ள சதைப்பகுதியை சிறு சிறு
துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு
மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கற்றாழைக் கையால் தொட்டால் வாய் கசக்கும்
என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும்,
கசப்பும் குறைந்துவிடும்.
சோற்றுக்
கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து இட்லிப்
பானையில் பால் விட்டு வேர்களை தட்டில் வைத்துப் ஆவியில் வேக வைத்து
எடுத்து நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு தினசரி ஒரு
தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்ய உறவு மேம்படும்.
தாம்பத்ய உறவுக்கு கற்றாழை நிகரற்ற மருந்தாகும்.
Saturday, April 18, 2009
Ever seen pictures of spicy actress

View more stills: K J Yesudas



Find more pictures: Remya Krishanan


Related pictures: Parvathy




Find more pictures: Jodhaa Akbar






Find more pictures: Saranya Mohan
Subscribe to:
Posts (Atom)























