Showing posts with label த்ரிஷா. Show all posts
Showing posts with label த்ரிஷா. Show all posts

Thursday, July 2, 2009

தலைகீழாக தொங்கும் த்ரிஷா! படத்தில் வருமா பங்கி ஜம்ப்?


குஷி படத்தில் தலைகீழாக தொங்கி குலை நடுங்க வைப்பாரே விஜய்? அந்த ஆட்டத்திற்கு பங்கி ஜம்ப் என்று பெயர். முன்பெல்லாம் இந்த ஆட்டத்தை பார்க்கவோ, விளையாடவோ வெளிநாட்டுக்கு போக வேண்டும். இப்போது மிக சுலபம். நம்ம ஊருக்கே வந்து விட்டது பங்கி ஜம்ப். (யாரோ ஒரு கட்சித் தாவல் பார்ட்டி கண்டு பிடிச்ச விளையாட்டா இருக்குமோ?)

இந்த ஆட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. இப்படி வெளவால் மாதிரி தலைகீழாக தொங்கி பீதியை கிளப்பினாலும், அவரை பொருத்தவரை இது தைரியத்தை வளர்க்கிற விளையாட்டு. குஷி மாதிரி யாராவது ஒரு படம் எடுத்து இப்படி தொங்க சொன்னாலும், சம்மதிக்கிற மூடில்தான் இருக்கிறாராம் த்ரிஷ்.

இதற்கிடையில் இந்தியை வாழ வைப்பதற்காக, தமிழ் படங்களை தண்டவாளத்தில் தள்ளுகிற வேலையில் இறங்கியிருக்கிறார் கனவு தேவதை! (இப்படிதான் சொல்லுகிறார்கள் அவரது ரசிகர் மன்றத்தினர்) தமிழில் இவர் நடித்து வந்த ஆடுகளம் படத்தில் இதுவரை 12 நாட்கள் நடித்திருக்கிறாராம். இந்தியில் நடிக்க இடைஞ்சலாக இருக்கிறது என்பதற்காக இந்த படத்திலிருந்து விலகிக் கொண்டாராம். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திலிருந்து அவர் விலகினாலும், சுள்ளானுடன் எவ்வித பிரச்சனையும் இல்லை என்கிறது த்ரிஷா வட்டாரம்.

தனுஷின் ஆடுகளம்: த்ரிஷா விலகல்?


தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் ஆடுகளம் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் த்ரிஷா. தமிழில் சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது த்ரிஷாவுடன் சிம்பு மிகவும் நெருக்கமாகி விட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.

வழக்கம்போல சிம்பு மவுனம் காக்க, த்ரிஷா மட்டும் மழுப்பலாக பதில் கூறி வருகிறார். வதந்திகள் எனக்குப் புதிதல்ல என்றும், சிம்புவுடன் காதலா இல்லையா என்று சொல்ல மாட்டேன் என்றும் கூறிவருகிறார் த்ரிஷா.

இந்த நிலையில், தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் த்ரிஷா. இந்தப் படத்திலிருந்து இப்போது விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

தனுஷுடன் நடிப்பதை சிம்பு விரும்பாததால்தான் த்ரிஷா விலகி விட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

Monday, June 29, 2009

மச்சக்காளையை மடக்கிப் போட்ட காஜல்!


த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா நடிக்கிற தெலுங்கு படங்களை சைலண்ட்டாக தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கதைக்காகவும், ஹீரோவுக்காகவும் ஓடிய படங்கள் இங்கு சதைக்காகவே ரசிக்கப்படுகின்றன என்பது சொல்லாமலே புரியும். சென்னையை தாண்டி இந்த ஜிகினா சுந்தரிகளின் ஆட்டத்தை காண தவியாய் தவிக்கிற ரசிகர்கள், டப்பிங் பட பாகுபாடில்லாமல் கலெக்ஷனை கொட்டுவதால் அந்த ஏரியாவுலேயும் இப்போது பரபரப்பு.

மேற்படி தங்க தாரகைகளை தொடர்ந்து பிட்டு பட நாயகி லெவலுக்கு டூ பீஸ் தரிசனம் தர வந்திருக்கிறார் ப்ரியாமணி. இவரது படங்களையும் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். இப்போது லேட்டஸ்டாக அதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். இன்னொரு ஜோதிகா என்று இவர் வந்த புதிதில் வர்ணித்த பத்திரிகைகள், ஒரு படம் கூட ஓடாமல் போனாலும், தனது வர்ணிப்பை நிறுத்தவில்லை.

இதற்கு முன்பு வந்த தனது படங்கள் மண்ணை கவ்வினாலும், வரப்போகும் படமான மோதி விளையாடு தனக்கு வெற்றியை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது காஜலுக்கு. எதற்கும் இருக்கட்டும் என்று, தெலுங்கிலும் தனது பெரிய கண்களை அலையவிட்டு வாய்ப்புகளை தேடிக் கொண்டார். அங்குள்ள முன்னணி இயக்குனர் தேஜா இயக்கிய படம் ஒன்றில் இவர்தான் முழுநீள நாயகி. (ள உச்சரிப்பு முக்கியம்)

நல்ல வெயிட்டான கதையில் காஜலின் கவர்ச்சிக்கும் ஒரு வெயிட் இருப்பதால், இந்த படத்தை டப்பிங் லிஸ்ட்டில் வைத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். தமிழில் மச்சக்காளை என்ற பெயரில் வரப்போகிறதாம். ஜொள்ளாபிஷேகத்திற்கு ரசிகர்கள் தயாராகலாம்.

ஒப்புக்கொண்ட படத்திலிருந்து விலகல்! த்ரிஷா திடுக்...

பனை மரத்திலே இடி இடிச்சா பாக்கு மரத்திலே வெடிப்பு விட்ட மாதிரி ஆயிருச்சு பாலகிருஷ்ணாவுக்கு. தெலுங்கிலே இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பாலகிருஷ்ணா, இப்போதும் கலெக்ஷன் புலியாகவே கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். பேத்தி வயசு பொண்ணுங்களோட, இந்த தாத்தாக்கள் ஆடுறதை, மானாட மயிலாட ரேஞ்சுக்கு ரசிக்கறது அங்குள்ள ரசிகர்களுக்கு ஆனந்தம், பரமானந்தம். அப்படிதான் இந்த பாலகிருஷ்ணா, இளம் நடிகைகள் ஒருத்தர் விடாம ஆட்டிப்படைக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் தெலுங்கில் என்னென்ன படத்திலே நடிக்கிறீங்க? என்று த்ரிஷாவிடம் கேட்டால், அவரோட இவரோடன்னு போடுற லிஸ்ட்டுல பால கிருஷ்ணாவும் இருந்தார். இப்போ த்ரிஷா இந்தி படத்திலே நடிக்க போய்விட்டதால், பாலகிருஷ்ணா படத்தை லிஸ்ட்டில் இருந்தே து£க்கிவிட்டாராம்.

இதனால் பாலகிருஷ்ணா நடிக்கும் 'பீஷ்மா' என்ற படத்திற்கு பொருத்தமான ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே கொடி நாட்டும் ஹீரோயின்களில் முக்கியமானவர்களான அனுஷ்கா, ஸ்ரேயா, நயன்தாரா வரைக்கும் கேட்டு பார்க்கிறார்களாம். தமிழில் ஒப்புக்கு சப்பாணியாக கூட இருக்க முடியாத ஷீலா, தெலுங்கில் இன்றைய தினம் ரசிகர்களின் 'ஆஹா' லிஸ்ட்டில் இருப்பதால், அவர் வரைக்கும் இறங்கியிருக்கிறார்களாம்.

தாத்தாவுக்காக மனசு இறங்குமா பொண்ணு?

தனுஷின் ஆடுகளம்: த்ரிஷா விலகல்?

Trisha Krishnanதனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் ஆடுகளம் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் த்ரிஷா. தமிழில் சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது த்ரிஷாவுடன் சிம்பு மிகவும் நெருக்கமாகி விட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.

வழக்கம்போல சிம்பு மவுனம் காக்க, த்ரிஷா மட்டும் மழுப்பலாக பதில் கூறி வருகிறார். வதந்திகள் எனக்குப் புதிதல்ல என்றும், சிம்புவுடன் காதலா இல்லையா என்று சொல்ல மாட்டேன் என்றும் கூறிவருகிறார் த்ரிஷா.

இந்த நிலையில், தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் த்ரிஷா. இந்தப் படத்திலிருந்து இப்போது விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

தனுஷுடன் நடிப்பதை சிம்பு விரும்பாததால்தான் த்ரிஷா விலகி விட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இன்னொரு தரப்போ, ஆடுகளம் படம், முழுக்க முழுக்க மதுரையில் 6 மாதம் தங்கியிருந்து நடிக்க வேண்டிய படம்.

மதுரையின் புழுதியில் புரண்டும், வெயிலில் காய்ந்தும் 'ரியலிஸ்டிக்காக' நடிக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த ரிஸ்க் எடுக்க விரும்பாததாலேயே அவர் விலகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

மேலும் த்ரிஷாவுக்கு கைவசம் பெரிய படங்கள் பல உள்ளதாம். குறிப்பாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமாருடன் நடிக்கும் இந்திப்படம் வேறு இந்த லிஸ்டில் புதிதாக இடம்பெற்று விட்டதால் தனுஷ் படத்தை தொங்கலில் விட்டுவிட்டார் த்ரிஷா என்றும் கூறப்படுகிறது.

Tuesday, June 23, 2009

நான் யாருக்கும் போட்டியில்லே! த்ரிஷா விளக்கம்!


நந்திக்கு பழக்கம் நடுவாப்லே நிக்கிறது.... நத்தைக்கு பழக்கம் செவனேன்னு நடக்கிறது... நம்மாளுகளோட பழக்கம் என்ன? சிண்டையும் முடியணும், சிக்கையும் எடுக்கணும்!

த்ரிஷா இந்தி படத்திலே நடிக்க போனாலும் போனார். அசினுக்கு போட்டியாகதான் இந்திக்கு போயிருக்கார். அங்கேயுள்ள பெரிய பெரிய ஆளுகளுக்கெல்லாம் போன அன்னைக்கே பெரிய பார்ட்டி வச்சாருன்னு கொளுத்தி போட ஆரம்பிச்சிட்டாங்க. தகவல் அறியும் சட்டத்தை இப்படி தவறா பயன்படுத்துறவங்க மேலே கோவப்படாம பதில் சொல்றதுதான் புத்திசாலித்தனம். த்ரிஷாவும் சீரியஸ் ஆக பதில் சொல்லியிருக்கார். என்னன்னு?

நான் இந்தியில் நடிக்கணும்னு சான்ஸ் தேடி அலையலே. அதே மாதிரி எனக்கு முன்னாடி போயி, இந்தியிலே ஒரு இடத்தை பிடிச்சிருக்கிற அசினுக்கு போட்டியா நடிக்கணும்னும் போகலே. மத்தவங்க என்ன செய்யுறாங்கன்னு பார்க்கிறதுதான் என்னோட வேலை மாதிரி எழுதுறாங்க. அதெல்லாம் உண்மை இல்லை.

நான் நடிச்ச அபியும் நானும் படத்தை பார்த்திட்டு, அவரா விரும்பி என்னை இந்திக்கு கூப்பிட்டார் அக்ஷய் குமார். என்னை தமிழ்லே அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் இந்த படத்தை டைரக்ட் பண்ணுறாரு. இதைவிட எனக்கு வேறென்ன வேணும்? அவங்க கூப்பிட்டதும் போயிட்டேன். இந்த படத்தை தயாரிக்கிறது அக்ஷய் குமார்ங்கிறது இன்னும் கூடுதல் சந்தோஷம். இதிலே எங்கிருந்து வந்தாரு அசின்?

நான் என் வேலையை பார்க்கிறேன். யாருக்கும் யாரும் போட்டியில்லை என்று நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். புரளி இதோடு ஓயுமா? அல்லது இன்னும் வருமா? என்பவர்களுக்கு... வாழ்க்கைன்னா ஒரு சுவாரஸ்யம் வேணாமா? பேசாத த்ரிஷாவை பேச வைக்கணும்னா இப்படியெல்லாம் எழுதினாதானே முடியுது?