Showing posts with label சிம்பு. Show all posts
Showing posts with label சிம்பு. Show all posts

Thursday, July 2, 2009

விண்ணை தாண்டி வருவாயா? திடீர் சுணக்கத்தில் சிம்பு

வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தில் திடீர் சுணக்கம். கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ்சை கோயம்பேட்டுக்கு திருப்பிவிட்ட மாதிரி ஒரே அல்லோகலம் என்கிறார்கள். என்னவாம்?

தெலுங்கில் மகேஷ்பாபுவிடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் உடனே அல்ல. ஓரிரு மாதங்கள் கழித்துதான் இவரது படத்தில் நடிக்க வருவாராம் பாபுகாரு. விண்ணை தாண்டி வருவாயா கதையைதான் அவரிடமும் சொல்லியிருக்கிறார் கவுதம். தான் நினைத்தமாதிரி தெலுங்கு படம் நகர ஆரம்பித்தால் தமிழ், தெலுங்கு ரிலீசை ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது கவுதமின் கணக்கு.

ரஹ்மானின் தமிழ் ட்யூனையே தெலுங்குக்கும் பயன்படுத்திக் கொண்டால், ஆடியோ மார்கெட்டிலும் ஒரு அட்டகாச வசூலை பார்க்கலாமே? இப்படி அவர் போட்ட கணக்கில்தான் இந்த சுணக்கம். ஒருவேளை தமிழ் படத்தை முதலில் கொண்டு வந்து அது வேறு மாதிரியான ரிசல்ட்டை கொடுத்தால், மொத்த கதையையும் மாற்ற சொல்வார் மகேஷ்பாபு என்ற அச்சமும் இந்த ஒரே நேர ரிலீஸ் ஐடியாவுக்கு காரணமாம்.

இதற்கெல்லாம் சம்மதிக்க முடியாத சிக்கலில் இருக்கிறார் வி.தா.வ நாயகன் சிம்பு. இரு கெட்டப்புகளில் நடித்திருக்கும் இவர் ஒரு கெட்டப்பில் தாடி வைத்திருக்கிறாராம்! இதற்காக நீட்டலும் மழித்தலும் வேண்டா என்று ஒதுங்கியே இருக்கும் சிம்புவுக்கு தாடியை எடுப்பதா? அல்லது காத்திருப்பதா என்ற சிக்கலும் வந்திருக்கிறது. எது எப்படியோ? போடா போடி வேலையை துவங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் இப்போது.

தனுஷின் ஆடுகளம்: த்ரிஷா விலகல்?


தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் ஆடுகளம் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் த்ரிஷா. தமிழில் சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது த்ரிஷாவுடன் சிம்பு மிகவும் நெருக்கமாகி விட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.

வழக்கம்போல சிம்பு மவுனம் காக்க, த்ரிஷா மட்டும் மழுப்பலாக பதில் கூறி வருகிறார். வதந்திகள் எனக்குப் புதிதல்ல என்றும், சிம்புவுடன் காதலா இல்லையா என்று சொல்ல மாட்டேன் என்றும் கூறிவருகிறார் த்ரிஷா.

இந்த நிலையில், தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் த்ரிஷா. இந்தப் படத்திலிருந்து இப்போது விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

தனுஷுடன் நடிப்பதை சிம்பு விரும்பாததால்தான் த்ரிஷா விலகி விட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

Monday, June 29, 2009

சிம்புவின் சீக்ரெட் லிஸ்ட்


என்னத்த க‌ண்ணையாவின் வரும்... ஆனா வராது... காமெடியின் நிலையில் இருக்கிறது போடா போடி. படம் வரும் என்கிறார் படத்தின் இயக்குனர். வராது என்கிறார்கள் ஹீரோ சிம்பு தரப்பில். நடுவில் வில்லங்கமாக வந்திருக்கிறது வாலிபன் படம்.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயா‌ரிப்பில் சிம்பு நடிப்பதாகக் கூறப்படும் வாலிபன் படம் குறித்தும் பல வதந்திகள். அப்படியொரு ப்ராஜெக்டே இல்லை என்கிறார்கள் சிலர். சிம்புவும் இதுகுறித்து உறுதியாக எதையும் கூறவில்லை. அதேநேரம் வாலிபன் படத்தில் நடிக்கும் ஹீரோயினை தேர்வு செய்ய முழுவீச்சில் இறங்கியிருக்கிறார் சிம்பு.

சிம்புவின் முதல் சாய்ஸ் இலியானா. அ‌ஜித், விஜய், சூர்யா, விக்ரம்... ஏன் ர‌ஜினியுடனேயே நடிக்க மறுத்தவர் இலியானா. அவரை எப்படியாவது வாலிபனில் நடிக்க வைப்பது என முயன்று வருகிறார் சிம்பு. அவர் ஒத்து வராதபட்சத்தில் சினேகா உல்லால், அனுஷ்கா என வேறு சிலரையும் லிஸ்டில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா முடிந்த பிறகு சிம்பு படத்தில் நடிக்குப் போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பது தெ‌ரிந்துவிடும்.

பிரபுதேவா-சிம்பு, விக்ரம், தனுஷ் அதிர்ச்சி


பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இந்தியாவன் மைக்கேல் ஜாக்சன் எனப் புகழப்படும் பிரபுதேவா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஜாக்சனின் ஸ்டைலைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். அவரது மரணம் எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் ஜாக்சன் பாணி நடனத்தை இந்தியத் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பிரபுதேவா. அவரது முக்காலா முகாபுலா நடனம், அப்படியே மைக்கேல் நடனத்தை தழுவியது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கப்பட்டவர் பிரபுதேவா. அவர் ஜாக்சன் மறைவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பெரிய மனிதர், சிறந்த பாடகர், நடன மேதை, இசையமைப்பாளர்.

எனக்கு வழிகாட்டி அவர்தான். அவரது நடன ஸ்டைலைத்தான் நான் பிற்பற்றுகிறேன். அவர் மறைந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

இதேபோல நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில உலக புகழ்பெற்ற பிரபல நடனக் கலைஞரும், பாப் இசை பாடகருமான மைக்கேல் ஜாக்சன் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

பாப் இசையோடு நடனத்தைக் கலந்து பல புதுமைகளை புகுத்தி அழியாத முத்திரை பதித்த ஒரு மாபெரும் கலை பொக்கிஷம். தமிழ் திரையுலகில் பல நடன நடிகர்கள் அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி புகழடைந்துள்ளனர்.

உலகத்தின் கலை வரலாற்றில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மாபெரும் கலை வித்தகர்.

மைக்கேல் ஜாக்சனின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.

நடிகர் விக்ரம் கூறுகையில், ஜாக்சன் மறைந்த அதிர்ச்சி செய்தி கேட்டு வருத்தமுற்றேன். என்னுடைய தலைமுறை அவருடனேயே வளர்ந்தது.

பிராங்க் சினாட்ரா, எல்விஸ் பிரஸ்லி போன்ற மேதைகளைக் காட்டிலும் பிரபலமானவராக, புகழ் பெற்றவராக விளங்கியவர் ஜாக்சன்.

தமிழ், இந்தி திரையுலக நடனங்களிலும் அவரது தாக்கம் அதிகம் என்றார் விக்ரம்.

இதேபோல சிம்பு, தனுஷ் ஆகியோரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தனுஷ் கூறுகையில் எப்படி நடிகர்களுக்கு புரூஸ்லி முக்கியாக இருந்தாரோ அதேபோல, நடனத்துக்கு மைக்கேல் ஜாக்சன். நமது நடனங்கள் எல்லாமே ஜாக்சனின் ஸ்டைலைத் தழுவியதுதான்.

எனக்கு வழிகாட்டுபவராக அவர் இருந்தார். படிக்காதவன் படத்தில் அவரது ஸ்டைலைப் பின்பற்றி ஆட முயன்றேன். அவர் பெரிய சகாப்தம். அவர் மரணமடைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை என்றார்.

தனுஷின் ஆடுகளம்: த்ரிஷா விலகல்?

Trisha Krishnanதனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் ஆடுகளம் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் த்ரிஷா. தமிழில் சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது த்ரிஷாவுடன் சிம்பு மிகவும் நெருக்கமாகி விட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.

வழக்கம்போல சிம்பு மவுனம் காக்க, த்ரிஷா மட்டும் மழுப்பலாக பதில் கூறி வருகிறார். வதந்திகள் எனக்குப் புதிதல்ல என்றும், சிம்புவுடன் காதலா இல்லையா என்று சொல்ல மாட்டேன் என்றும் கூறிவருகிறார் த்ரிஷா.

இந்த நிலையில், தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் த்ரிஷா. இந்தப் படத்திலிருந்து இப்போது விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

தனுஷுடன் நடிப்பதை சிம்பு விரும்பாததால்தான் த்ரிஷா விலகி விட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இன்னொரு தரப்போ, ஆடுகளம் படம், முழுக்க முழுக்க மதுரையில் 6 மாதம் தங்கியிருந்து நடிக்க வேண்டிய படம்.

மதுரையின் புழுதியில் புரண்டும், வெயிலில் காய்ந்தும் 'ரியலிஸ்டிக்காக' நடிக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த ரிஸ்க் எடுக்க விரும்பாததாலேயே அவர் விலகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

மேலும் த்ரிஷாவுக்கு கைவசம் பெரிய படங்கள் பல உள்ளதாம். குறிப்பாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமாருடன் நடிக்கும் இந்திப்படம் வேறு இந்த லிஸ்டில் புதிதாக இடம்பெற்று விட்டதால் தனுஷ் படத்தை தொங்கலில் விட்டுவிட்டார் த்ரிஷா என்றும் கூறப்படுகிறது.

Tuesday, June 23, 2009

அக்கறையா ஆரம்பிச்சு சக்கரையால கெட்டுச்சு! டி.ராஜேந்தர் திடுக்...


இந்நேரம் துபாயில் இருப்பார் விஜய டி.ராஜேந்தர். கவலையை மறப்பதற்கான ஜாலி ட்ரிப்பாம் இது. பிள்ளைய பெத்தா கண்ணீரு என்பது அவருக்கு தெரியாதா என்ன? ஆனால் இந்த கண்ணீரு பிள்ளை கொடுத்த குடைச்சலால் அல்ல. பிள்ளைய நினைச்சு வந்த கண்ணீரு!

அஜீத்தை வைத்து பல்வேறு படங்களை எடுத்தவரும், அவரது பினாமி என்று வெளியுலகில் கிசுகிசுக்கப்பட்டவருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி நீண்ட இடைவேளைக்கு பிறகு பட தயாரிப்பில் இறங்கினார். சிம்புவையும், குறளரசைனையும் அந்த படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவர், டிஆரை அணுகி விஷயத்தை சொல்ல, ஆஹா பண்ணலாமேன்னாரு டிஆரும்!

இதில் இரட்டை வேடத்தில் சிம்பு நடிப்பதாக முடிவானது. இன்னொரு முக்கிய கேரக்டரில் குறள் அறிமுகமாவதாக ஏற்பாடு. சிம்பு இருந்தால், அந்த இடத்தில் நிழலாக யுவனும் இருப்பாரே? இசை யுவன் என்றும் முடிவானது. பைசா அட்வான்ஸ் இல்லாமல் பிராஜக்ட் தயாரானது. ஆனால், திடீரென்று படத்தையே டிராப் செய்துவிட்டாராம் சக்கரை.

ரொம்ப அக்கறையா ஆரம்பிச்ச பிராஜக்ட் இப்படி சக்கரையால் கெட்டதே என்ற வருத்தத்தில் தாட், பூட் என்று குதித்த டிஆர், கையிலே பணம் இல்லேன்னா சும்மா இருந்திருக்கலாமே, எதுக்கு சிம்பு பேரை கெடுக்கணும்?. ஏற்கனவே அவரு துவங்கின படங்கள் டிராப் ஆகுதுன்னு இன்டஸ்ரியிலே பேர் இருக்கு. அதை வலுவாக்கிற மாதிரி ஆயிருச்சே நீங்க செஞ்ச வேலை என்றாராம் சக்கரவர்த்தியிடம்.

சம்பளத்தை இரண்டு கோடியாக குறைத்திருக்கிறாராம் சிம்பு. இந்த சிறப்பு தள்ளுபடியை எந்த தயாரிப்பாளர் பயன்படுத்தப் போகிறாரோ?

Monday, June 22, 2009

சரத்குமார் மகள் வரலட்சுமியின் 'மாம்மா மியா'!

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி 'மாம்மா மியா' எனும் பெயரில் நாட்டிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்.இதுகுறித்த முறையான அறிவிப்பை நேற்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டார் வரலட்சுமி சரத்குமார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத் குமாரும் பங்கேற்று தன் மகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதுகுறித்து வரலட்சுமி கூறியதாவது:

நடனம் மற்றும் நாட்டியத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. முறைப்படி நடனம் கற்ற நான் ஏற்கெனவே எனது குழுவினருடன் சில நாட்டிய நாடகங்களைத் தந்துள்ளேன்.

இப்போது 'மாமா மியா' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய நாட்டிய நாடகம் ஒன்றை வரும் ஜூலை மாதம் 4, 5 தேதிகளில் சென்னை மியூசிக் அகாதெமியில் நடத்துகிறோம். மேலை நாட்டுப் நடனப் பின்னணியில், ஆங்கில மொழியில் இந்த நாட்டிய நாடகம் அரங்கேற்றப்படும், என்றார்.

இந்த நாடகத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு வித்தியாசமான நடனத்தை ஒரு நாடகமாகவே வெளிப்படுத்த உள்ளார் வரலட்சுமி.முன்னதாக தனது நாடகம் மற்றும் நடனக் குழுவினரை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் வரலட்சுமி.

இதில் கலந்துகொண்ட சரத்குமார் , தனது மகள் வரலட்சுமி மற்றும் நடனக் குழுவினரை வாழ்த்தினார்.சென்னை மட்டுமல்லாது பெங்களூர், ஹைதராபாத் நகரங்களிலும் இந்த நாட்டிய நாடகங்களை அரங்கேற்றுகிறார் வரலட்சுமி.

சிம்புவுக்கு ஜோடியாக 'திரு போடா திருமதி போடி-டண்டணக்கா ஜோடி' என்ற படத்தில் அறிமுகமாக இருந்தவர் வரலட்சுமி. ஆனால் அந்தப் படம் தள்ளிப் போடப்பட்டதால், இப்போது நாட்டிய நாடகம் மூலம் அரங்கேறுகிறார் வரலட்சுமி.