Showing posts with label முத்தம். Show all posts
Showing posts with label முத்தம். Show all posts

Thursday, July 2, 2009

'பூ'வுக்குப் பிடித்த முத்தம்!


முத்தக் காட்சிகளில் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. காட்சிக்குப் பொருத்தமானதாக இருந்தால் தாராளமாக நடிக்கலாம் என்கிறார் பூ நாயகி பார்வதி.

மலையாளத்திலிருந்து பூ மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி. அந்தப் படத்திற்குப் பிறகு டக்கென கன்னடத்திற்குத் தாவி விட்டார்.

மலே பரலி, மஞ்சு இரலி என்ற படத்தில் நடித்து வரும் பார்வதி, இப்படத்தில், நாயகன் ஸ்ரீநகர் கிட்டியுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளாராம். இதனால் கன்னட ரசிகர்கள் பரபரப்பாகிக் கிடக்கிறார்கள்.

பூவுக்குள் இப்படி ஒரு பூகம்பமா என்று வியந்து போய் பார்வதியிடம் கேட்டால், நடிப்பில் எல்லாமே உண்டு. முத்தம் பெரிய விஷயமில்ல, புதிய விஷயமும் இல்லை.

பல்வேறு வகையான உணர்வுகளை சினிமாவில் காட்டுகிறார்கள். அதில் ஒன்றுதான் முத்தம். காட்சிக்குப் பொருத்தமாக இருந்தால் நடிக்கலாம்.

கணவன், மனைவிக்கு இடையே முத்தம் இல்லாமல் இருக்குமா, காதலில் முத்தம் இல்லாத காதல் எங்கேனும் உண்டா. இதைத்தானே சினிமாவிலும் காட்டுகிறார்கள். அதில் என்ன தவறு. நிஜத்தைத்தான் காட்டுகிறார்கள்.

முத்தம் இருக்காமே என்று நினைத்து யாரும் படம் பார்க்க வரக் கூடாது. அப்படி வந்தால்தான் தவறு என்கிறார் பார்வதி.

பூ படத்தில் வந்து போன பொண்ணா இது என்று ஆச்சரியா இருக்குல்ல..

கமலுக்கு கலைஞர் தந்த முத்தம்


அரசியல் விழாவாக இருந்தாலும், சினிமா விழாவாக இருந்தாலும் கலைஞருக்கு கூடும் கூட்டம் திருவிழாதான். 'நீயின்றி நானில்லை’ தொடக்க விழாவிலும் அதனைக் காணமுடிந்தது.

கருணாநிதி கதை, வசனம் எழுத இளவேனில் இயக்கும் படம் ‘நீயின்றி நான் இல்லை’. உதய்கிரண், மீரா ஜாஸ்மின், கார்த்திகா நடிக்கும் இப்படத்தின் தொடக்க விழா, ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. மேள தாளம் முழங்க பெப்சி தொழிலாளர்கள் கலைஞரை வரவேற்றனர்.
கமல், சூர்யா, சிவக்குமார், விவேக், இசையமைப்பாளர் தேவா என மேடையை நிறைத்தனர் நட்சத்திரங்கள். படத்தை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியபோது,

“இந்த விழாவில் தம்பி கமலஹாசன் பேசும்போது, “தமிழை உங்களிடம் கற்றுக் கொண்டோம்” என்று குறிப்பிட்டார். நான் எழுதிய உரையாடல்களைத்தான் இன்னமும் நடிப்புத் துறைக்குள் வருபவர்கள், பேசிக்காட்டி, அந்தத் துறையிலே புகழ் பெருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கமலஹாசனை சின்னஞ்சிறுபிள்ளையாக தமிழ் பேசியதிலிருந்து இன்றைக்கு பத்து அவதாரங்கள், பன்னிரண்டு அவதாரங்கள் என்று அவர் எடுத்து, உலகத் திரைப்படச்சந்தையில் தனக்குள்ள கீர்த்தியை நிலை நாட்டியிருக்கின்ற இந்தகாலம் வரையில் அவரை நான் நேசிப்பவன்.
ஒரு நாள் என்னுடைய வீட்டு வேலைக்காரபையன் மேலே ஓடி வந்து, மாடியில் எழுதிக் கொண்டிருந்த என்னிடம் உங்களைப் பார்க்க ஒரு அம்மா வந்திருக்கிறார். என்று சொன்னான். நான் எழுதிக்கொண்டிருந்த அறையை விட்டு வெளியே வந்து-மாடித் தாழ்வாரத்திலே பார்த்தால், உள்ளபடியே ஒரு அம்மா உட்கார்ந்திருந்தார்.வியப்புற்று நான், நீங்கள் யார், எங்கே வந்தீர்கள்? என்று கேட்டபோது, என்னைத் தெரியவில்லையா, என்று கமல் என்னைப் பார்த்து கேட்டார்.

அந்த அளவுக்கு அவ்வை சண்முகியில் அந்த ஒப்பனை இருந்தது மறுபடியும், “தசாவதாரம்” படத்திலே கூட நான் பார்த்தேன். அந்தப் பாத்திரத்தை எண்ணாமல், பாத்திரத்துக்குள் இருக்கின்ற கமல் என்கின்ற கலைஞரை நேசிக்கின்ற அடையாளமாக தொட்டிழுத்து, முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

இந்த கதையினுடைய (‘நீயின்றி நானில்லை’) இழை என்னவென்றால், பெண்ணுரிமை, பெண்ணுக்காக மகளிர் முன்னேற்றத்துக்காக பாடுபடுகின்ற அல்லது பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்கிற ஒரு கதாநாயகனின் கதை. அதிலே ஏற்படுகின்ற விளைவு, நெளிவுகள், சுழற்சிகள் இவைகள் எல்லாம் இந்த கதையிலே பல காட்சிகளிலே அமைக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.