Showing posts with label தெலுங்கு. Show all posts
Showing posts with label தெலுங்கு. Show all posts

Thursday, July 2, 2009

விண்ணை தாண்டி வருவாயா? திடீர் சுணக்கத்தில் சிம்பு

வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தில் திடீர் சுணக்கம். கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ்சை கோயம்பேட்டுக்கு திருப்பிவிட்ட மாதிரி ஒரே அல்லோகலம் என்கிறார்கள். என்னவாம்?

தெலுங்கில் மகேஷ்பாபுவிடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் உடனே அல்ல. ஓரிரு மாதங்கள் கழித்துதான் இவரது படத்தில் நடிக்க வருவாராம் பாபுகாரு. விண்ணை தாண்டி வருவாயா கதையைதான் அவரிடமும் சொல்லியிருக்கிறார் கவுதம். தான் நினைத்தமாதிரி தெலுங்கு படம் நகர ஆரம்பித்தால் தமிழ், தெலுங்கு ரிலீசை ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது கவுதமின் கணக்கு.

ரஹ்மானின் தமிழ் ட்யூனையே தெலுங்குக்கும் பயன்படுத்திக் கொண்டால், ஆடியோ மார்கெட்டிலும் ஒரு அட்டகாச வசூலை பார்க்கலாமே? இப்படி அவர் போட்ட கணக்கில்தான் இந்த சுணக்கம். ஒருவேளை தமிழ் படத்தை முதலில் கொண்டு வந்து அது வேறு மாதிரியான ரிசல்ட்டை கொடுத்தால், மொத்த கதையையும் மாற்ற சொல்வார் மகேஷ்பாபு என்ற அச்சமும் இந்த ஒரே நேர ரிலீஸ் ஐடியாவுக்கு காரணமாம்.

இதற்கெல்லாம் சம்மதிக்க முடியாத சிக்கலில் இருக்கிறார் வி.தா.வ நாயகன் சிம்பு. இரு கெட்டப்புகளில் நடித்திருக்கும் இவர் ஒரு கெட்டப்பில் தாடி வைத்திருக்கிறாராம்! இதற்காக நீட்டலும் மழித்தலும் வேண்டா என்று ஒதுங்கியே இருக்கும் சிம்புவுக்கு தாடியை எடுப்பதா? அல்லது காத்திருப்பதா என்ற சிக்கலும் வந்திருக்கிறது. எது எப்படியோ? போடா போடி வேலையை துவங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் இப்போது.

Monday, June 29, 2009

தனுஷின் ஆடுகளம்: த்ரிஷா விலகல்?

Trisha Krishnanதனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் ஆடுகளம் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் த்ரிஷா. தமிழில் சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது த்ரிஷாவுடன் சிம்பு மிகவும் நெருக்கமாகி விட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.

வழக்கம்போல சிம்பு மவுனம் காக்க, த்ரிஷா மட்டும் மழுப்பலாக பதில் கூறி வருகிறார். வதந்திகள் எனக்குப் புதிதல்ல என்றும், சிம்புவுடன் காதலா இல்லையா என்று சொல்ல மாட்டேன் என்றும் கூறிவருகிறார் த்ரிஷா.

இந்த நிலையில், தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் த்ரிஷா. இந்தப் படத்திலிருந்து இப்போது விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

தனுஷுடன் நடிப்பதை சிம்பு விரும்பாததால்தான் த்ரிஷா விலகி விட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இன்னொரு தரப்போ, ஆடுகளம் படம், முழுக்க முழுக்க மதுரையில் 6 மாதம் தங்கியிருந்து நடிக்க வேண்டிய படம்.

மதுரையின் புழுதியில் புரண்டும், வெயிலில் காய்ந்தும் 'ரியலிஸ்டிக்காக' நடிக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த ரிஸ்க் எடுக்க விரும்பாததாலேயே அவர் விலகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

மேலும் த்ரிஷாவுக்கு கைவசம் பெரிய படங்கள் பல உள்ளதாம். குறிப்பாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமாருடன் நடிக்கும் இந்திப்படம் வேறு இந்த லிஸ்டில் புதிதாக இடம்பெற்று விட்டதால் தனுஷ் படத்தை தொங்கலில் விட்டுவிட்டார் த்ரிஷா என்றும் கூறப்படுகிறது.

Tuesday, June 23, 2009

ஸ்னேகா..தெலுங்கில் அச்சமுண்டு!

பிரசன்னா, ஸ்னேகா நடிப்பில் உருவாகியுள்ள அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை தெலுங்கிலும் டப் செய்கிறார்கள்.

Snehaஅமெரிக்க வாழ் தமிழரான அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அச்சமுண்டு அச்சமுண்டு. ரிலீஸுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஒரு விருதையும் பெற்று விட்ட இப்படம் திரைப்பட விழாக்களையும் வலம் வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஜூலை 10ம் தேதி தமிழகத்தில் திரைக்கு வருகிறது. இப்படத்தை தற்போது தெலுங்கிலும் டப் செய்து வெளியிடவுள்ளனராம்.

முதல் முறையாக ரெட் ஒன் கேமராவில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம், முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்ட படம் என்ற பல்வேறு சிறப்புகளைத் தாங்கி வரும் இப்படம் தெலுங்கிலும் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

Monday, June 22, 2009

ஸ்ரேயாவின் இமயமலை மந்திரம்

ஸ்ரேயாவுக்கு ஆங்கிலம் அத்துப்படி, தெலுங்கு மாட்லாடுவார், தமிலிங்கிஸ் தெரியும். புதுசா அவர் முனுமுனுப்பது என்ன தெரியுமா?
‘கரீஷா போல்தா மே பரமே திகிட்சிதா காபே...’

இது எந்த ஊர் பாஷை என கூகுலுக்குள் போய் குழம்பவேண்டாம். இது ஸ்ரேயா மனப்பாடம் செய்துள்ள மந்திரம். இமயமலை பயணத்திற்கு பிறகுதான் ஸ்ரேயாவிடம் இத்தனை மாற்றம். ‘சிவாஜி’ படத்தில் நடித்தபோது மந்திரம் பற்றி உண்டான ஆர்வம் ஒரு கட்டத்தில் ஆர்வக்கோளாறாகிவிட்டதாம்.

படப்பிடிப்பின் இடைவேளையின்போது இமயமலை பற்றிய தனது அனுபவங்களை ரஜினி அடிக்கடி பகிர்ந்துகொண்டுள்ளார். இதனைக்கேட்ட ஸ்ரேயாவுக்கு நாளடைவில் இமயமலை செல்லும் ஆசை வந்துவிட்டதாம். அங்கு எந்தெந்த இடங்களில் எப்படிப்பட்ட சாமியார்கள் இருப்பார்கள் என்பதையும் கேட்டுவைத்துக்கொண்ட ஸ்ரேயா, ஒரு மாதத்திற்கு முன்பு இமயமலைக்கு சென்றாராம்.

இமயமலையில் இருந்த ஒரு சாமியாரிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ள, சில மந்திரங்களை கற்றுத்தந்திருக்கிறார் சாமியார். அங்கிருந்து திரும்பிய பிறகு சதா அந்த மந்திரங்களை உச்சரிக்க தொடங்கிவிட்டாராம். ‘எந்திரன்’ படப்பிடிப்பில் ரஜினியையும் சந்தித்து அந்த மந்திரங்களை சொல்லித்தந்திருக்கிறார் ஸ்ரேயா.

ஸ்ரேயாவின் மந்திர ஞானம், ரஜினியையே வியக்கவைத்துவிட்டதாம்.

பாடல்காட்சியில் நடிக்கும்போது மந்திரம் சொல்லி போட்டிருக்கும் டிரஸ்காணாமல்போகாமல் இருந்தால் சரிதான்