Showing posts with label Funny. Show all posts
Showing posts with label Funny. Show all posts
Monday, November 4, 2013
அதிக செக்ஸ் உயிரையும் குடிக்குமாம்…! எப்படின்னு பாக்கலாமா?
எதுவுமே அளவோட இருந்தாதான் நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனா செக்ஸ் மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும்வரை வச்சுக்கலாம்னு மருத்துவர்கள் சொல்றாங்க.
ஆனா உண்ணை என்ன தெரியுமா… இந்த செக்ஸே சில நேரங்களில் உயிரையும் குடிக்குமாம்.
எப்படின்னு பாக்கலாமா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்காம்.
தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட உயிருக்கு ஆபத்துதானாம்.
ஒரே நாளில் அதிக முறை உச்சத்தை எட்டுவதும் ஆபத்துதானாம். ஐந்து முறை, பத்துமுறை உச்சத்தை எட்டியதாக கற்பனைக் கதைகளைப் படித்துவிட்டு அதற்கு முனைவது தவறு என்கிறார்கள்.
மது அல்லது போதைப் பொருள் தரும் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.
அதிக மன அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிக செக்ஸை தவிர்க்க வேண்டும்.
அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம்.
கூகுளில் அதிகமாக செக்ஸ் படம் பார்ப்பவர்கள் : முதல் இடத்தில் இலங்கை; 2-வது இடம் இந்தியாவுக்கு!
வல்லரசாகும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்திய நாடு ஊழலில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது, இப்போது அதையும் தாண்டி பிட்டு படம் பார்ப்பவர்களின் எண்ணிகையில் பக்கத்து நாடான இலங்கைக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூகிளின் சர்ச் மூலம் செக்ஸ் என்ற வார்த்தையை தேடுபவர்களின் எண்ணிக்கையில் உலகின் முதல் இடத்தில் இலங்கை உள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
இதன் மூலம் உலகிலேயே ராஜபக்ஷே தலைமையிலான அராசாங்கத்தை கொண்டிருக்கும் இலங்கையில் தான் பாலியல் சம்பந்தமான நீலப்படக்காட்சிகளை அதிகமாக பார்க்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
சமீபகாலமாக இலங்கை மற்றும் இந்தியாவில் மொபைல், டேப்லெட், கனிணி ஆகியவற்றின் மூலம் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூகுள் இந்த புள்ளி விபரத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வகைகள்:
Exclusive,
Funny,
Glamour,
Half Saree,
Photo Session,
Saree Gallery,
Spicy Actress
Thursday, October 31, 2013
ஆரம்பம் பார்த்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை!
இன்று மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது அஜித் நடித்த ஆரம்பம் படம். நள்ளிரவில் இருந்தே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம், பட்டாசு, வானவேடிக்கையுடன் துவங்கியது ஆரம்பம் படத்தின் முதல்நாள் முதல் காட்சி. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கைத்தட்டி விசிலடித்து ஆட்டம் போட்டு ஆரம்பத்தை ரசித்துப் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
இது ஒருபக்கம் இருக்க இன்று பேஸ்புக்கில் ஒரு செய்தி படம் கண்ணில் பட்டது. அதாவது ஆரம்பம் பார்த்த அஜித் ரசிகர் தற்கொலை என்பதுதான் அந்த செய்தி படம். மேலும் அதில் ஆரம்பம் படம் தோல்வி அடைந்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை என்றும் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பொய்யான செய்திப் படங்களை இப்படி உருவாக்கி வெளியிடுகிறார்களே என்பதுதான் அதியாக காரணம்.
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டையார் அன்றே பாடிவைத்தார். ஆனால் ஆள் வளருகிற அளவுக்கு இன்று அறிவு வளராமல் போய்விடுகிறது. அதனால்தான் அறிவியலை பயன்படுத்தி இது போன்ற வேலைகளை எல்லாம் இவர்களால் பார்க்க முடிகிறது. போட்டோஷாப்பை பயன்படுத்தி இந்த படத்தில் வரும் செய்திகளை உருவாக்கியிருக்கிறார்கள். என்னே ஒரு கீழ்த்தரமான புத்தி. இதன் மூலம் இவர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?
குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்று இன்று சிலரது கையில் சிக்கிக் கொண்ட பேஸ்புக்கால் இது போன்ற பொய்யான செய்திகள் உலகம் முழுவதும் எளிதில் பரவிவிடுகின்றன. இதை திட்டமிட்டு சில விஷமிகள் உருவாக்குகிறார்கள் என்றால் இதை பகிர்பவர்களாவது கொஞ்சம் யோசிக்க வேண்டும் அல்லவா? இந்த செய்தி உண்மைதானா என்று யோசித்துப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இது போன்ற பொய்ப் பிரச்சார படங்கள் பேஸ்புக்கில் சாதாரண மனிதர்களால் எளிதில் பகிரப்பட்டு விரைவில் நிறைய பேரை சென்றடைந்து விடுகின்றன. இது போன்ற கீழ்த்தரமான புத்தி உடையவர்கள் என்ன சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு. எனினும், பேஸ்புக் போன்றவற்றில் வரும் இது போன்ற செய்தி, படங்களை உண்மை தன்மை அறிந்து பகிரும் பழக்கத்தை அனைவரும் கடைபிடித்தால் பொய் பிரச்சார செய்திகள், படங்கள் நிறையபேரை சென்றடைவதை நம்மால் முடிந்த அளவுக்கு தடுக்க முடியும்.
Monday, October 28, 2013
என்றென்றும் புன்னகை டிரைலர் சந்தானத்தின் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது!
சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை படத்தின் டிரைலரில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண் சந்தானத்திடம் ‘நான் அஞ்சு பத்துக்கு போகப் போறேன்…’ என்று சொல்ல அவரோ அதற்கு, ‘ஏன் அஞ்சுக்கும் பத்துக்கும் போற… ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் போ…’ என்கிறார். இந்த வசனம் குறித்து மீடியாக்கள் கடுப்பாக எழுதித் தள்ள உடனே அந்த வசனத்தை நீக்கியிருக்கிறார்கள். யுடியூபில் பழைய டிரைலரை நீக்கிவிட்டு புதிய டிரைலரை வெளியிட்டிருக்கிறார்கள்.
Saturday, October 26, 2013
சுட்டகதை விமர்சனம் -போங்கப்பா… நீங்களும் உங்க சுட்ட கதையும்…
வெளிநாடு வாழ் இந்தியரான ரவீந்தர் தமிழ் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக படம் எடுப்பதற்காக சுவிஸ்ஸிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். முதல் வேலையாக ஆறு படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். அவருடைய முதல் தயாரிப்புதான் சுட்டகதை படம். இந்தப் படம் ரிலீசுக்குத் தயாரானதுமே வேந்தர் மூவிஸ் படத்தை வாங்கினார்கள். வாங்கியவர்கள் மாதக் கணக்கில் படத்தை கிடப்பில் போட்டுவிட சற்றே கோபத்துடன் தயாரிப்பாளர் ரவீந்தர் படத்தை திரும்ப வாங்கி தானே சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார். வேந்தர் மூவீஸ் இந்தப் படத்தை 50 திரையரங்குகளில்தான் ரிலீஸ் செய்ய முடியும் என்று சொன்ன நிலையில் படத்தை 100க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கிறாராம் ரவீந்தர்.
மலையோர கிராமத்தின் தலைவனான கதாநாயகியின் அப்பா பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என்கிற துப்புத் துலக்கும் பணியில் ஈடுபடுகிறது காவல்துறை. கொலையாளி யார் என்பதைக் கண்டு பிடித்தார்களா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.
இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் புதிய முயற்சி, காமிக்ஸ் அடிப்படையில் அமைந்த படம் என்றெல்லாம் சொன்னார் இயக்குநர். ஆனால் படமோ காமிக்ஸ் புத்தகத்திற்கு விளம்பரம் செய்ய எடுக்கப்பட்டது போன்று இருக்கிறது.
படம் துவங்கியதிலிருந்து ரொம்ப நேரத்திற்கு கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதே பிடிபடவில்லை. சிரிக்க வைக்கிறேன் என்கிற பேரில் இவர்கள் அடிக்கும் ரகளையில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சிரித்து வைக்க முடிகிறது. மற்ற இடங்களில் எல்லாம்… நற… நற…
ஏற்கனவே சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் பாலாஜி இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக வருகிறார் வெங்கடேஷ். இருவரும் நடிப்பில் சபாஷ் போட வைத்திருக்கிறார்கள். கதாநாயகியாக நடித்திருக்கிறார் லஷ்மிப்ரியா சந்திரமௌலி. தர்மயுத்தம் டிவி தொடரில் தலை காட்டியவர் இந்தப் படத்தில் கதாநாயகியாகியிருக்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரொம்பவே வீரமான பெண் கேரக்டர் இவருக்கு. காவல்நிலையத்தில் சதா சர்வகாலமும் தூங்கி எந்திரிக்கும் ஆய்வாளராக வருகிறார் நாசர். அவரை அங்கில் என்று கூப்பிடும் போலீஸ்கார பையன் மட்டும் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஜெயப்பிரகாஷ், லஷ்மி ராமகிருஷ்ணன், சிவாஜி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். லஷ்மி ராமகிருஷ்ணன் எண்ணி நாலைந்து காட்சிகளில் வந்து போகிறார். இதே நிலைதான் ஜெயபிரகாஷ்க்கும்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் மேட்லி ப்ளூஸ். பின்னணி இசையை காமெடிக்காக தாறுமாறாக இசைக்க விடுவார்கள் சில இசையமைப்பாளர்கள். ஆனால் மேட்லியோ ஹ்யூமரான காட்சிகளில் எல்லாம் அருமையாக பின்னணி இசையமைத்திருக்கிறார். பாரில் பாடும் பாட்டு மட்டும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சுபு. கோடைக்கானலில் காட்டுப் பகுதிகளில் போய் படமாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளை இருட்டில் லைட்டை ஒளிரவிட்டுப் படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் ஏகப்பட்ட விளக்குகள். படம் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் ரொம்பவே ஸ்லோவாக நகருகிறது. திரைக்கதை சுவாரஸ்யமாகவும் இல்லை. அதே நேரத்தில் படத்தில் ட்விஸ்ட் வந்துவிட்டது… என்கின்றனர் கேரக்டர்கள். ட்விஸ்ட் வந்தால் படம் பார்ப்பவர் நிமிர்ந்து உட்கார வேண்டுமே… அதுதான் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என்னமோ போங்கடா… நீங்களும் உங்கள் சுட்டகதையும் என்கிற அளவுக்கு வர வைத்து விடுகிறார்கள்… மொத்தத்தில இந்தப் படத்தைப் பார்க்கப் போயி தலைவலி வந்ததுதான் மிச்சம்…
Monday, October 21, 2013
அட்ரா சக்க… அட்ரா சக்க… கவுண்டரும் வந்துட்டாருல்ல?
'காமெடி கிங் ரிட்டர்ன்ஸ்'- வாய்மை படத்தின் கவுண்டமணி!
தமிழ் சினிமா உள்ள வரைக்கும் மறக்க முடியாத நகைச்சுவையைத் தந்தவர்கள் வரிசையில் முக்கிய இடம், இந்தத் தலைமுறையிலும் முதலிடம் யாருக்கு என்றால்... சந்தேகமில்லாமல் அது கவுண்டமணிக்குத்தான்.
சினிமாவில் நடிக்காமல் கொஞ்ச காலம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவர், இன்று சினிமாவில் நிலவும் நகைச்சுவைப் பஞ்சத்தையும் கேவலமான காமெடிக் காட்சிகளையும் பார்த்ததாலோ என்னமோ.. மீண்டும் முழு வீச்சில் நடிக்கக் களமிறங்கிவிட்டார்.
கிங் ஆஃப் காமெடி கவுண்டர் ரிட்டர்ன்ஸ்!
இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் கவுண்டர். அதில் ஒருபடம் வாய்மை. இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் சாந்தனு பாக்யராஜ், ராம்கி, ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டாக்டர் பென்னி!
பென்னி என்ற பாத்திரத்தில் மருத்துவ நிபுணராகத் தோன்றுகிறார் கவுண்டமணி. சமூக சீர்கேடுகளை நகைச்சுவையாக சாடும் பாத்திரம் அவருடையது. அவரது காமெடியின் சிறப்பே அதுதானே. அதை இந்தப் படத்திலும் தொடர்கிறார். படத்தை வசந்தபாலனிடம் இணை இயக்குநராக இருந்த செந்தில்குமார் என்பவர் இயக்குகிறார்.
கவுண்டருக்கு நிகரேது...
நேற்று வெளியான புகைப்படங்களில் கவுண்டமணி கோட் சூட் அணிந்து தனக்கேயுரிய மேனரிசங்களோடு காட்சி தருகிறார். அதில் ஒரு படத்தில், 'இப்ப வர்றதுக்குப் பேரு காமெடியாய்யா... ராமா ராமா' என்பது போல போஸ் கொடுத்திருப்பார்.
மீண்டும் தியாகராஜன்!
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தியாகராஜன். மகனுக்காக நடிப்பதை நிறுத்திக் கொண்டவர், இடையிடையே சிறு வேடங்களில் மட்டும் வந்தவர், இந்தப் படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
ஆரோக்கியமான காமெடி இன்னிங்ஸ்!
வடிவேலுவின் தெனாலிராமன் ஸ்டில்கள் வெளியான அடுத்த நிமிடமே கவுண்டரின் வாய்மை பட புதிய ஸ்டில்களும் நேற்று மாலை வெளியாகின. இந்த ஸ்டில்களைப் பார்த்தபோதே, மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான காமெடி இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டதற்கான கொண்டாட்ட மனநிலையில்தான் பலரும் இருந்தனர்.
வந்துட்டேன்யா… வந்துட்டேன்யா…
இந்தா கெளம்பிட்டார்ல… : சந்தானத்துக்கு ஆப்பு வைக்க வரும் வடிவேலு!
காமெடி நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை கேள்விப்பட்ட பல டைரக்டர்கள் சந்தானத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் கடந்த 2 வருடங்களாக ஸ்டேடியாக இருந்த சந்தானத்தின் சிங்கிள் ஷேர் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வரும் வடிவேலு தற்போது மிகவும் ஃசைலண்ட்டாக நடித்து வரும் படம் தான் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’.
சுமார் 3 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வரும் இந்தப்படத்தை யுவராஜ டைரக்ட் செய்து வருகிறார். முன்னதாக வடிவேலுஇம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் 2-ஆம் பாகத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப்படத்தின் டைரக்டர் சிம்புதேவனுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அந்தப்படம் அப்படியே நின்று விட்டது.
இந்நிலையில் தான் வடிவேலு ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். போட்டா போட்டி படத்தை டைரக்ட் செய்த யுவராஜ் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.
இந்தப்படத்தில் வடிவேலு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமனக்குட்டன், சினேகா உல்லால் என பல ஹீரோயின்களையும் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால் வடிவேலு ஹீரோ என்பதால் யாருமே நடிக்க முன்வரவில்லை.
இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் என்ற தெலுங்கு படங்களில் குத்தாட்டம் போட்டவர் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் விஜயகாந்த்தின் விருதகிரி படத்தில் நடித்தவர் என்பது இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.
இதற்கிடையே வடிவேலுவின் வரவால் சிங்கிள் காமெடியனாக தமிழ்சினிமாவில் கோலோச்சி வரும் சந்தானத்தின் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
தெனாலிராமன் படத்தில் வடிவேலு மீண்டும் நடிப்பதை கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரை நேரில் சந்தித்து மீண்டும் தங்களது படங்களில் காமெடியனாக நடிக்கக் கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்களாம்.
இன்னும் சில டைரக்டர்களோ தெனாலிராமன் படம் ரிலீசானவுடன் வடிவேலுவை தங்கள் படங்களின் காமெடிக்காக கமிட் பண்ண முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால் சமீபகாலமாக சந்தானத்தை தேடிப்போகும் பட சான்ஸ்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.
Sunday, October 20, 2013
பாம்பு பால் குடிக்காது
உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்ன வென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தன பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள், மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டன. அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனைத் திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத் தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது.
ஆகவே, அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.
Monday, October 7, 2013
கைதி எண் 3312: அசராத லாலு பிரசாத் யாதவ்
கடவுளைக்கூட ஜெயி லில் அடைக்க முடியும்னு இப்பதான் தெரியுது'' என்றார் பிர்சாமுண்டா மத்திய சிறைச்சாலை முன்பு நின்றிருந்த ராஞ்சி நகரத்து பெண்மணி.
அந்த சிறையில்தான் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகால தண்டனை பெற்று, 25 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியை இழந்திருக்கும் லாலு பிரசாத் யாதவ் அடைபட்டிருக்கிறார்.
எங்க ஜார்கண்டு மாநிலம் பீகாரோடு சேர்ந்திருந்த வரைக்கும் நான் லாலுஜிக்குத்தான் ஓட்டுப்போட்டேன். அவரை இப்ப அநியாயமா ஜெயிலில் போட்டுட்டாங்க'' என்று அந்தப் பெண் மணி கலங்கியதுடன், ""கிருஷ்ண பரமாத்மாவே ஜெயிலில்தான் பிறந்தார். லாலுஜிதான் எங்க ளுக்கு கிருஷ்ணன். அவர் மறுபடியும் ஒரு அவதா ரம் எடுப்பார்'' என்றார் நம்பிக்கை குறையாமல். டெல்லி அரசியல் பார்வையாளர்களோ, ராஞ்சி பெண்மணிக்கு நேர் எதிரான கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.
ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்ற நிலைமையை நீதிமன்றங்கள் உருவாக்கியிருக்கின்றன'' என்றார் லாலு வுக்குத் தண்டனை வழங்கிய ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நீதிமன்றத்தின் வாசலில் செய்தி சேகரிப்பில் இருந்த ஆங்கில ஊடகத்தின் சீனியர் செய்தியாளர். (ஊழல் செய்தவங்க தப்பிக்க முடியாதா? தமிழ் நாட்டுக்கு வந்து பாருங்க சார்)
லாலுவுக்கு 5வருடம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 5 வருடம், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் சர்மாவுக்கு 4 வருடம் என தண்டனைக் காலத்தை அறிவித்தார் ராஞ்சி மாஜிஸ்ட்ரேட். தீவன ஊழல் வழக்கில் லாலு உள்ளிட்டவர்கள் மீது திங்கட்கிழமையன்றே குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அன்று முதலே சிறைப்படுத்தப்பட்டார்கள். வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகத்தான் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. "எந்தக் காரணமும் இன்றி இந்த வழக்கில் நான் தண்டிக்கப்பட்டி ருக்கிறேன்' என்று அந்த நிலையிலும் தனக்கேயுரிய பாணியில் சொல்லியிருக்கிறார் சிறையிலிருந்தபடி வீடியோ கான்ஃபரன்ஸில் பதிலளித்த லாலு.
ஜார்கண்ட் உள்ளிட்ட ஒருங்கிணைந்த பீகாரின் முதல்வராக மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட, சிறு பான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகனாக செல்வாக்குப் பெற்றிருந்த லாலுவுக்கு இப்போது சிறை அடையாளம் கைதி எண் 3312. பத்துக்குப் பத்து அளவிலுள்ள செல்தான் அவரது இருப்பிடம். ஒரு மேசை, நாற்காலி, கட்டில், அதன் மேல் மெத்தை, ஓரமாய் ஒரு கழிப்பிடம் இதுதான் செல்லில் உள்ள வசதி. அந்த செல்லில் லாலுவுக்கு முன் இருந்தவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா. அவரைத் தொடர்ந்தும் ஒரு வி.வி.ஐ.பிதான் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்'' என்கிறார்கள் சிறை அதிகாரிகள்.
சிறைத் தண்டனையைவிட கொசுக்கடிதான் பெரிய தண்டனை' என்கிறார்கள் பிர்சா முண்டா சிறைக்கைதிகள். ""லாலுவுக்கு கொசுவலை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், படுக்கையில் உள்ள மூட்டைப் பூச்சிகளிடமிருந்து அவரால் தப்பிக்கவே முடியவில்லையாம். தூக்கமற்ற இரவுகளைக் கழித்துக்கொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர். ஆனாலும் எந்த விமர்சனத்தை பற்றியும் கவலைப் படாத தனி பாணியிலான அவருடைய நடைமுறை களும் உடல்மொழியும் தொடர்ந்தபடியே இருக் கின்றன. இந்த சிறையை கிட்டத்தட்ட ஒரு வர வேற்பறையாகவே மாற்றிவிட்டார் லாலு'' என்கிறார் சிறைத்துறை சைலேந்திர பூஷன். அவரைப் பார்க்க கட்சிப் பிரமுகர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.பி ரகுவன்ஷ் பிரசாத் தனது தலைவரான லாலுவை சந்திக்க வந்தார். அவர் கையில் ஒரு பகவத் கீதை புத்தகம் இருந்தது. “""லாலுஜி இது உங்களுக்குத்தான். உங்க மனதைரியத்துக்கு மேலும் வலிமை சேர்க்கும். காந்திஜி ஜெயிலில் இருந்தபோதெல்லாம் தன் பக்கத்தில் பகவத் கீதையை எப்போதும் வைத்திருந்தாராம். நீங்களும் வச்சுக்குங்கஜி'' என்று கொடுத்துச் சென்றிருக்கிறார். அடுத்தடுத்து வரும் கட்சிப் பிரமுகர்களை சந்திப்பது, மேல்முறையீடு பற்றி விவாதிப்பது, சிறையிலிருக்கும் நாட்களில் கட்சியை யார் மூலம் எப்படி வழிநடத்து வது என்று லாலுவின் பகல் பொழுது கழிகிறது. இரவில் அவருக்கு மூட்டைப்பூச்சிகள்தான் துணை.
லாலுவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவருக்கு உணவு சமைக்கவும், உதவிகள் செய்யவும் இரண்டு கைதிகளை நியமித்திருக்கிறது சிறைத்துறை. ரேஷன் எப்படி என சிறை அதிகாரிகளிடம் கேட்டால், ""அரிசி 350 கிராம், பருப்பு 117 கிராம் (அவ்வளவு துல்லியமா அளப்பார்களோ), காய்கறி 233 கிராம் (அதே துல்லியம்), அதே அளவுக்கு உருளைக்கிழங்கு, 467 கிராம் தயிர், 29 கிராம் நெய், இரண்டு பழங்கள். இதுதான் அவருக்கான அன்றாட உணவுப்பொருள்'' என்கிறார்கள்.
மாட்டுத் தீவன ஊழலில் சிக்கியவர் என்ப தால் லாலுவை கார்ட்டூனாக வரையும்போது மாடு போலவே வரைந்த பத்திரிகைகள் உண்டு. தன் மீதான கேவலமான விமர்சனங்களையும்கூட சகித்துக்கொண்டு, பத்திரிகை செய்திகளைக் கவனிப்பவர் லாலு. சிறையிலும் அவருக்கு காலையில் நியூஸ் பேப்பர்கள் வந்துவிடுகின்றன. பக்கம் பக்கமாக தனக்கு எதிராக எழுதப்பட்டி ருக்கும் செய்திகளைப் படித்துப் புன்னகைத்து, ""நாளைக்கு நான் அப்பீலில் விடுதலையாகும் போது இதைவிட பெரிதாக என் படத்தையும் செய்தியையும் போடுறாங்களான்னு பார்ப்போம்'' என்கிறாராம் லாலு சர்வ அலட்சியமாக.
சிறை அதிகாரிகளிடம் அவர் தனக்கான இரண்டு தேவைகளைச் சொல்லியிருக்கிறார். ஒன்று, ஃப்ரிட்ஜ். உடல்நலக்குறைவால் மருந்து களை சாப்பிட்டு வரும் லாலுவுக்கு அந்த மருந்து கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக வைக்க ஒரு ஃப்ரிட்ஜ் தேவைப்படுகிறதாம். அடுத்ததாக அவர் கேட்டிருப்பது, கேபிள் இணைப்புடன் டி.வி. "என்னைப் பற்றி என்னென்ன செய்திகளை ஒளிபரப்புறாங்கன்னு நான் தெரிஞ்சுக்கணும்ல..' என்று சொல்லியிருக்கிறார் லாலு. "அவருடைய இந்த கோரிக்கை பற்றி மாநில அரசிடம் தெரிவிப்போம்' என்கிறார்கள் சிறைத்துறையினர்.
உயர்சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்த பீகாரின் அரசியலை பிற்படுத்தப்பட்டவர்கள் பக்கம் திருப்பியவர் லாலு. அப்போதிருந்தே அவர் ‘வில்லனாக்கப்பட்டார். இப்போது ஊழல் நாயகன் என்ற முத்திரையுடன் சிறைப்படுத்தப்பட்டி ருக்கிறார். தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்பதுதான் உண்மையான நீதி. ஆனால், தவறு செய்தவர்கள் எல்லோரும் பாரபட்சமின்றி இந்தியாவில் தண்டனைக்குள் ளாகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியிருக் கிறது லாலுவுக்கான தண்டனையும் சிறைவாசமும்.
ஜார்கண்ட் உள்ளிட்ட ஒருங்கிணைந்த பீகாரின் முதல்வராக மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட, சிறு பான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகனாக செல்வாக்குப் பெற்றிருந்த லாலுவுக்கு இப்போது சிறை அடையாளம் கைதி எண் 3312. பத்துக்குப் பத்து அளவிலுள்ள செல்தான் அவரது இருப்பிடம். ஒரு மேசை, நாற்காலி, கட்டில், அதன் மேல் மெத்தை, ஓரமாய் ஒரு கழிப்பிடம் இதுதான் செல்லில் உள்ள வசதி. அந்த செல்லில் லாலுவுக்கு முன் இருந்தவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா. அவரைத் தொடர்ந்தும் ஒரு வி.வி.ஐ.பிதான் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்'' என்கிறார்கள் சிறை அதிகாரிகள்.
சிறைத் தண்டனையைவிட கொசுக்கடிதான் பெரிய தண்டனை' என்கிறார்கள் பிர்சா முண்டா சிறைக்கைதிகள். ""லாலுவுக்கு கொசுவலை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், படுக்கையில் உள்ள மூட்டைப் பூச்சிகளிடமிருந்து அவரால் தப்பிக்கவே முடியவில்லையாம். தூக்கமற்ற இரவுகளைக் கழித்துக்கொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர். ஆனாலும் எந்த விமர்சனத்தை பற்றியும் கவலைப் படாத தனி பாணியிலான அவருடைய நடைமுறை களும் உடல்மொழியும் தொடர்ந்தபடியே இருக் கின்றன. இந்த சிறையை கிட்டத்தட்ட ஒரு வர வேற்பறையாகவே மாற்றிவிட்டார் லாலு'' என்கிறார் சிறைத்துறை சைலேந்திர பூஷன். அவரைப் பார்க்க கட்சிப் பிரமுகர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.பி ரகுவன்ஷ் பிரசாத் தனது தலைவரான லாலுவை சந்திக்க வந்தார். அவர் கையில் ஒரு பகவத் கீதை புத்தகம் இருந்தது. “""லாலுஜி இது உங்களுக்குத்தான். உங்க மனதைரியத்துக்கு மேலும் வலிமை சேர்க்கும். காந்திஜி ஜெயிலில் இருந்தபோதெல்லாம் தன் பக்கத்தில் பகவத் கீதையை எப்போதும் வைத்திருந்தாராம். நீங்களும் வச்சுக்குங்கஜி'' என்று கொடுத்துச் சென்றிருக்கிறார். அடுத்தடுத்து வரும் கட்சிப் பிரமுகர்களை சந்திப்பது, மேல்முறையீடு பற்றி விவாதிப்பது, சிறையிலிருக்கும் நாட்களில் கட்சியை யார் மூலம் எப்படி வழிநடத்து வது என்று லாலுவின் பகல் பொழுது கழிகிறது. இரவில் அவருக்கு மூட்டைப்பூச்சிகள்தான் துணை.
லாலுவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவருக்கு உணவு சமைக்கவும், உதவிகள் செய்யவும் இரண்டு கைதிகளை நியமித்திருக்கிறது சிறைத்துறை. ரேஷன் எப்படி என சிறை அதிகாரிகளிடம் கேட்டால், ""அரிசி 350 கிராம், பருப்பு 117 கிராம் (அவ்வளவு துல்லியமா அளப்பார்களோ), காய்கறி 233 கிராம் (அதே துல்லியம்), அதே அளவுக்கு உருளைக்கிழங்கு, 467 கிராம் தயிர், 29 கிராம் நெய், இரண்டு பழங்கள். இதுதான் அவருக்கான அன்றாட உணவுப்பொருள்'' என்கிறார்கள்.
மாட்டுத் தீவன ஊழலில் சிக்கியவர் என்ப தால் லாலுவை கார்ட்டூனாக வரையும்போது மாடு போலவே வரைந்த பத்திரிகைகள் உண்டு. தன் மீதான கேவலமான விமர்சனங்களையும்கூட சகித்துக்கொண்டு, பத்திரிகை செய்திகளைக் கவனிப்பவர் லாலு. சிறையிலும் அவருக்கு காலையில் நியூஸ் பேப்பர்கள் வந்துவிடுகின்றன. பக்கம் பக்கமாக தனக்கு எதிராக எழுதப்பட்டி ருக்கும் செய்திகளைப் படித்துப் புன்னகைத்து, ""நாளைக்கு நான் அப்பீலில் விடுதலையாகும் போது இதைவிட பெரிதாக என் படத்தையும் செய்தியையும் போடுறாங்களான்னு பார்ப்போம்'' என்கிறாராம் லாலு சர்வ அலட்சியமாக.
சிறை அதிகாரிகளிடம் அவர் தனக்கான இரண்டு தேவைகளைச் சொல்லியிருக்கிறார். ஒன்று, ஃப்ரிட்ஜ். உடல்நலக்குறைவால் மருந்து களை சாப்பிட்டு வரும் லாலுவுக்கு அந்த மருந்து கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக வைக்க ஒரு ஃப்ரிட்ஜ் தேவைப்படுகிறதாம். அடுத்ததாக அவர் கேட்டிருப்பது, கேபிள் இணைப்புடன் டி.வி. "என்னைப் பற்றி என்னென்ன செய்திகளை ஒளிபரப்புறாங்கன்னு நான் தெரிஞ்சுக்கணும்ல..' என்று சொல்லியிருக்கிறார் லாலு. "அவருடைய இந்த கோரிக்கை பற்றி மாநில அரசிடம் தெரிவிப்போம்' என்கிறார்கள் சிறைத்துறையினர்.
உயர்சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்த பீகாரின் அரசியலை பிற்படுத்தப்பட்டவர்கள் பக்கம் திருப்பியவர் லாலு. அப்போதிருந்தே அவர் ‘வில்லனாக்கப்பட்டார். இப்போது ஊழல் நாயகன் என்ற முத்திரையுடன் சிறைப்படுத்தப்பட்டி ருக்கிறார். தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்பதுதான் உண்மையான நீதி. ஆனால், தவறு செய்தவர்கள் எல்லோரும் பாரபட்சமின்றி இந்தியாவில் தண்டனைக்குள் ளாகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியிருக் கிறது லாலுவுக்கான தண்டனையும் சிறைவாசமும்.
Saturday, September 21, 2013
வருத்தபடாத வாலிபர் சங்கம் - விமர்சனம் அல்ல நிஜம்
எல்லா ஊரிலும் இல்லாவிட்டாலும் பல ஊர்களில் இருக்கும்... கூடுதலும் இளைஞர்களை குறிவைத்துதான் இந்த சங்கங்கள் இயங்கும்... ஏன்னா அவங்களுக்குதான் வரலாறு தெரியாது... இவங்க என்ன சொன்னாலும் நம்புவாங்க... இந்த சங்கத்தால் சிலுக்குவார்பட்டிக்கு எந்த பயனும் ஏற்படாவிட்டாலும் உலகையே தலைகீழாக புரட்டபோவது போன்ற பில்டப்புக்கு எந்த குறைவும் இருக்காது...
எல்லா சங்கத்துக்கும் ஒரு "போஸ்"பாண்டி தலைவரா இருப்பான்... செமையா போஸ் கொடுப்பான்... சங்கத்தை பற்றி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படவேண்டும் என்பதற்காக ஊருல இருப்பதிலேயே பெரிய மனுஷனாக பார்த்து அவரை பற்றி அனாவசியாமாக பேசுவது இல்லாத பொல்லாத கதைகளை புரளி பேசி கிளப்புவதும் சங்கத்தின் முக்கியமான வேலைகளில் ஒன்றாக இருக்கும்
"போஸ்"பாண்டிகள் என்னாதான் வீராப்பா வசனம் பேசுனாலும்... லலிதா பாண்டியின் கடைக்கண் பார்வை பட்டுவிடவேண்டும் என தவமாய் தவம் இருப்பார்கள்... லலிதா பாண்டியின் கோபம் தங்கள் மீது விழுந்துவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் ஊறி இருக்கும்.. லலிதா பாண்டி என்னதான் தன் அதிகாரத்தை பயன்படுத்தி சங்கத்தை ஆள் வைத்து அடித்தாலும் இவர்களுக்கு சூடு சொரணை மானம் ரோசம் எதுவுமே வேலை செய்யாது
சங்கம் நஷ்டத்துல ஓடுது அப்ராததுல ஓடுதுன்னு அடிக்கடி சொன்னாலும் "போஸ்"பாண்டிகளின் போசுக்கு எந்த குறைவும் இருக்காது... கல்யாணம் கச்சேரி ஆண்டுவிழா சாப்பாடு என்று சங்கம் எப்போதும் சகஜமா செயல்படும்
இந்த கதையை படித்துவிட்டு பல்வேறு பெயர்களில் பல்வேறு ஊர்களில் செயல்படும் சங்கங்கள் உங்களுக்கு நியாபகம் வரலாம்..
இப்படியும் சில மோசடிகள்...
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன்.
அந்தபேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள்அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒருப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்
நான் அந்தஇரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபதுரூபாய்க்கு
நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்
அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது
அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே மோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறுசெய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..
நிஜ மனிதர்கள் - நர்ஸம்மா!
எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - நர்ஸம்மா!
மூம்பையிலிருந்து தமிழகம் வந்துக் கொண்டிருந்த ரயிலில் பிச்சைக்காரர்கள் தொல்லை மிக அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கூட ஒருவர் மாற்றி ஒருவர் பிச்சை கேட்டு வந்துக் கொண்டிருந்தார்கள். இதில் சில இளம் பெண்கள் குழந்தைகளை வேறு சுமந்துக் கொண்டு வந்து பிச்சை கேட்டார்கள். அந்த குழந்தைகள் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தன. செய்திகளில் வருவது போல் போதை மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்து தூங்க வைத்துவிடுகிறார்களா தெரியவில்லை.
இப்படி பிச்சைக் கேட்டு வந்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே ஒரு பாட்டி பூ விற்றுக் கொண்டு வந்தார்கள். நான் அந்த பாட்டியிடம் பூ இரண்டு முழம் வாங்கி எதிரில் இருந்த வயதான தம்பதிகளுக்கு கொடுத்தேன். பாட்டியின் பூக்கள் விற்று விட்ட படியால் கொஞ்சம் உட்காரலாமா என்று கேட்டார். நான் அவருக்கு இடமளித்து அவரோடு பேசத் தொடங்கினேன். அவரோ கன்னடத்தில்தான் பேசினார். கன்னடத்தில் எனக்கு அத்தனை பயிற்சி இல்லாதபடியால் எதிரில் இருந்த வயதான தம்பதிகள் மூலம் நான் கேள்வி கேட்க பாட்டி, தயங்கி தயங்கி பதில் சொன்னார்.
அதன் பின்னர் பாட்டிக்கு தெலுங்கு தெரியும் என்று தெரிந்துக் கொண்டு நான் அவரோடு தெலுங்கில் உரையாடினேன். பாட்டிக்கு சொந்த ஊர் மந்தராலயா பக்கத்தில் உள்ள அனந்தபூர் என்றார். பாட்டியின் பெயர் நர்ஸம்மா, வயது எவ்வளவு என்று தெரியாதாம். கணவர் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும், தன் குழந்தைகளை இப்படி பூ விற்றே வளர்த்ததாயும் சொன்னார். சில வருடங்களுக்கு முன் பாட்டியின் ஒரு மகள் இறந்துவிட்டதால், அந்த மகளின் கணவன் (மருமகன்) வேறு ஒரு திருமணம் செய்துக் கொண்டு வேறெங்கோ சென்றுவிட்டானாம். அவன் விட்டு சென்ற இரண்டு மகள்களை பாட்டிதான் வளர்க்கிறாராம்.
பூ விலை மிக அதிகமாக இருப்பதால் பெரிய வருமானம் இல்லை என்றார். ஒரு நாளைக்கு சராசரியாய் நாற்பது முதல் ஐம்பது ரூபாய் கிடைக்குமாம். அதை வைத்துதான் இத்தனை காலமாய் குடும்பம் நடத்துகிறாராம். இப்போது பெரிய பேத்திக்கு பதினைந்து வயது ஆகிவிட்ட படியால் அவளும் அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து சம்பாதிக்க தொடங்கியுள்ளதாய் சொன்னார். கடைசி வரை சுயமரியாதையோடு சொந்த காலில் வாழ்ந்தால் போதும், வேறு ஒன்றும் வேண்டாம் என்றார் நர்ஸம்மா.
இளமையோடு இருப்பவர்களே பிச்சை எடுத்து திரியும் சூழ்நிலையில் தள்ளாத வயதில் கூட பாட்டியின் சுயமரியாதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் கொடுத்து, உங்கள் மகன் கொடுப்பதாய் நினைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அதை பணிவாக மறுத்துவிட்டு, ஏதாவது பழம் வாங்கி கொடுங்கள் என்றார். ஆப்பிளும் ஆரஞ்சும் வாங்கி தர, சந்தோஷமாய் வாங்கிக் கொண்டார் பாட்டி.
மந்தராலயா ஸ்டேஷன் வந்ததும் விடை பெற்றார் நர்ஸம்மா பாட்டி. கூண் போட்டு நடந்த அவரின் வளைந்த முதுகுகளில், நிமிர்ந்த பாரதம் தெரிந்தது.
Sarvam Krishnarpanam
மூம்பையிலிருந்து தமிழகம் வந்துக் கொண்டிருந்த ரயிலில் பிச்சைக்காரர்கள் தொல்லை மிக அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கூட ஒருவர் மாற்றி ஒருவர் பிச்சை கேட்டு வந்துக் கொண்டிருந்தார்கள். இதில் சில இளம் பெண்கள் குழந்தைகளை வேறு சுமந்துக் கொண்டு வந்து பிச்சை கேட்டார்கள். அந்த குழந்தைகள் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தன. செய்திகளில் வருவது போல் போதை மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்து தூங்க வைத்துவிடுகிறார்களா தெரியவில்லை.
இப்படி பிச்சைக் கேட்டு வந்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே ஒரு பாட்டி பூ விற்றுக் கொண்டு வந்தார்கள். நான் அந்த பாட்டியிடம் பூ இரண்டு முழம் வாங்கி எதிரில் இருந்த வயதான தம்பதிகளுக்கு கொடுத்தேன். பாட்டியின் பூக்கள் விற்று விட்ட படியால் கொஞ்சம் உட்காரலாமா என்று கேட்டார். நான் அவருக்கு இடமளித்து அவரோடு பேசத் தொடங்கினேன். அவரோ கன்னடத்தில்தான் பேசினார். கன்னடத்தில் எனக்கு அத்தனை பயிற்சி இல்லாதபடியால் எதிரில் இருந்த வயதான தம்பதிகள் மூலம் நான் கேள்வி கேட்க பாட்டி, தயங்கி தயங்கி பதில் சொன்னார்.
அதன் பின்னர் பாட்டிக்கு தெலுங்கு தெரியும் என்று தெரிந்துக் கொண்டு நான் அவரோடு தெலுங்கில் உரையாடினேன். பாட்டிக்கு சொந்த ஊர் மந்தராலயா பக்கத்தில் உள்ள அனந்தபூர் என்றார். பாட்டியின் பெயர் நர்ஸம்மா, வயது எவ்வளவு என்று தெரியாதாம். கணவர் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும், தன் குழந்தைகளை இப்படி பூ விற்றே வளர்த்ததாயும் சொன்னார். சில வருடங்களுக்கு முன் பாட்டியின் ஒரு மகள் இறந்துவிட்டதால், அந்த மகளின் கணவன் (மருமகன்) வேறு ஒரு திருமணம் செய்துக் கொண்டு வேறெங்கோ சென்றுவிட்டானாம். அவன் விட்டு சென்ற இரண்டு மகள்களை பாட்டிதான் வளர்க்கிறாராம்.
பூ விலை மிக அதிகமாக இருப்பதால் பெரிய வருமானம் இல்லை என்றார். ஒரு நாளைக்கு சராசரியாய் நாற்பது முதல் ஐம்பது ரூபாய் கிடைக்குமாம். அதை வைத்துதான் இத்தனை காலமாய் குடும்பம் நடத்துகிறாராம். இப்போது பெரிய பேத்திக்கு பதினைந்து வயது ஆகிவிட்ட படியால் அவளும் அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து சம்பாதிக்க தொடங்கியுள்ளதாய் சொன்னார். கடைசி வரை சுயமரியாதையோடு சொந்த காலில் வாழ்ந்தால் போதும், வேறு ஒன்றும் வேண்டாம் என்றார் நர்ஸம்மா.
இளமையோடு இருப்பவர்களே பிச்சை எடுத்து திரியும் சூழ்நிலையில் தள்ளாத வயதில் கூட பாட்டியின் சுயமரியாதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் கொடுத்து, உங்கள் மகன் கொடுப்பதாய் நினைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அதை பணிவாக மறுத்துவிட்டு, ஏதாவது பழம் வாங்கி கொடுங்கள் என்றார். ஆப்பிளும் ஆரஞ்சும் வாங்கி தர, சந்தோஷமாய் வாங்கிக் கொண்டார் பாட்டி.
மந்தராலயா ஸ்டேஷன் வந்ததும் விடை பெற்றார் நர்ஸம்மா பாட்டி. கூண் போட்டு நடந்த அவரின் வளைந்த முதுகுகளில், நிமிர்ந்த பாரதம் தெரிந்தது.
Sarvam Krishnarpanam
ஒரு எருமை இன்னொரு எருமை!
ஒரு எருமை இன்னொரு எருமை மேல படுதிருக்ககிறத இப்ப தான் பாக்கிறேன்!..
"எரும மாடு மேல மழ பேஞ்ச மாதிரி" என்று கேட்டுருக்குறேன். இப்ப தான் "எரும மாடு மேல மல சாஞ்ச மாதிரி" பாக்குறேன்
"எரும மாடு மேல மழ பேஞ்ச மாதிரி" என்று கேட்டுருக்குறேன். இப்ப தான் "எரும மாடு மேல மல சாஞ்ச மாதிரி" பாக்குறேன்
Friday, September 20, 2013
கன்னிப் பெண்களின் ரத்தம் கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவமனை!
மருத்துவ உதவிக்காக யாருக்காச்சும் ரத்தம் வேணும்னா உடனே நண்பர்கள் உறவினர்கள் யாராவது பேஸ்புக், ட்விட்டர் போனற் வலைதளங்களில் செய்தியைப் பரப்பியோ தங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக ரத்தம் கிடைக்க உதவி செய்வார்கள். ஆனால் ஒரு மருத்துவமனையோ கன்னிப் பெண்களின் ரத்தம்தான் வேணும் என்று விளம்பரம் கொடுத்து பரபரப்பைக் கிளப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சீனாவில் உள்ள, பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. இந்த மருத்துவமனைதான் தான் இப்படி ஒரு விநோத விளம்பரம் கொடுத்து பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. எச்.பி.வி. என்ற வைரஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக இவ்வாறு கன்னிப்பெண்களின் ரத்தம் கேட்டு இண்டர்நெட்டில் விளம்ப்ரம் செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
‘கன்னிப் பெண்களின் ரத்தம்தான் தேவையா? கன்னிப் பையன்கள் ரத்தம் தேவை இல்லையா? என்ன கொடுமைசார் இது?‘ என்கிற விதமாக இந்த விளம்பரத்தை கொஞ்சம் கிண்டலடித்து வருகிறார்கள் அந்த விளம்பரத்தைப் பார்த்தவர்கள். இப்படி கன்னிப் பெண்களின் ரத்தத்தை கேட்டதன்மூலம், மருத்துவமனை நிர்வாகம் பெண்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், ‘கன்னிப் பெண்களின் ரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்குவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு, அதனால்தான் அப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்தோம். கன்னிப் பெண்களின் ரத்தத்தை நாங்க ஏதோ புதுசா கேட்கிற மாதிரி எல்லாரும் நினைக்கிறாங்க… ஆனால் அவர்களின் ரத்தம் ஆராய்ச்சிக்காக கேட்பது சாதாரண முறைதான்…’ என்று மக்களின் கண்டனத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளது பீகிங் மருத்துவமனை நிர்வாகம்.
Monday, September 16, 2013
அத்வானி சமரசம் ! மோடிக்கு புகழாரம்!
இன்றைய செய்தி! அத்வானி சமரசம் ! மோடிக்கு புகழாரம் !
அமாவாசை மோடி அமோக லீடிங்கல இருக்கும்
அவரு வேறு என்ன செய்வாரு பாவம் !
அமாவாசை கால் மேல படுது !
முட்டுதாக்கும்! தள்ளி நிக்கிறது தானே !
அமாவாசை மோடி அமோக லீடிங்கல இருக்கும்
அவரு வேறு என்ன செய்வாரு பாவம் !
அமாவாசை கால் மேல படுது !
முட்டுதாக்கும்! தள்ளி நிக்கிறது தானே !
நாராயணா… இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் தொல்லை தாங்கமுடியலைப்பா!
முன்னால எல்லாம் நடிகர் நடிகைகள் பெரிய திரையில் விஆர்எஸ் வாங்கிக் கொண்டுதான் சின்னத்திரைக்கு போவார்கள். ஆனால் இப்போ நிலைமை தலைகீழாகிவிட்டது. சின்னத் திரையில நடித்துவிட்டு அப்புறம் பெரிய திரைக்கு வருகிறாங்க. அப்படி வந்தவர்தான் சிவகார்த்திகேயன். இவர் நடிக்க வந்ததுமே தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளும் சமீபத்தில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும் ஹிட்டாகியுள்ளது. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் மிர்ச்சி செந்தில், இவரும் இப்போது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து நிறைய நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து மகபஆனந்த் என்னும் சின்னத்திரை தொகுப்பாளர் பெரிய திரைக்கு வருகிறார். இவர் வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணானவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜ்கமல் என்னும் சின்னத்திரை நடிகரும் வண்ணத்திரையில் மேல்நாட்டு மருமகள் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாகிறார். சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி அமளி துமளி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். போகிற போக்கைப் பார்த்தால் சின்னத்திரைக்கும் பெரிய திரைக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறது.
Monday, June 22, 2009
மெகா மொக்கைஸ்....
கஸ்டமர் : என்னங்க எல்லா பிஸ்கட்டும் ஒடைஞ்சு இருக்கு?மிஸ்டர் எக்ஸ் : அது 50-50, அப்படிதான் இருக்கும்...
*********
நண்பர் : சார், உங்களுக்கு சொந்த ஊர் எது?
மிஸ்டர் எக்ஸ் : எனக்கு சொந்தமா ஊர் எல்லாம் இல்லை. சொந்த வீடுதான்....
**********
நண்பர் : ஒங்க மாமா டெல்லியில என்னவா இருக்காரு?
மிஸ்டர் எக்ஸ் : அங்கயும் என் மாமாவாதான் இருக்காரு..
********
நண்பர் : சார், உங்க நாய் கட்டி போட்டுருக்கா?
மிஸ்டர் எக்ஸ் : கட்டி போடல.... குட்டி போட்டு இருக்கு.....
******
நண்பர் : என்ன சார், ஒங்க பொண்ணுக்கு பாத்து இருக்கற மாப்பிள்ளை ரொம்ப "பசை"யுள்ள கையாமே? என்ன பண்ணறாரு?
மிஸ்டர் எக்ஸ் : போஸ்டர் ஒட்டராரு...........
*********
நண்பர் 1 : இவர் ஆனாலும் ரொம்ப முன் ஜாக்கிரதை பேர்வழிதான்.....ட்ரைவர் கிட்ட மெதுவா போ... மெதுவா போன்னு சொல்றாரு.....
நண்பர் 2 : நல்லதுதானே.....இதுல என்ன தப்பு?
நண்பர் 1 : சார், அந்த ட்ரைவர் நடந்து போயிட்டு இருக்கார் .....
********
நண்பர் : சோம்பேறிகளுக்கான போட்டியில உங்களுக்கு முதல் பரிசு கெடச்சுதாமே? எப்படி?
மிஸ்டர் எக்ஸ் : நான் அந்த போட்டிக்கு பேர் கொடுத்தேன்... ஆனா கலந்துக்கவே இல்ல.... அதான் முதல் பரிசு.....
*********
நண்பர் : ஒங்க பொண்ணுக்கு என்ன வாசனை பிடிக்கும்?
மிஸ்டர் எக்ஸ் : நிறைய தடவை கேட்டவுடன், நேத்துதான் எங்கிட்ட சொன்னா.... பக்கத்து வீட்டு சீனிவாசனை தான் பிடிக்கும்னு....
**********
நண்பர் : ஏன் சார், ஸ்பூனை பாதியா உடைக்கறீங்க??
மிஸ்டர் எக்ஸ் : டாக்டர்தான் பாதி ஸ்பூன் மருந்து சாப்பிட சொல்லி இருக்காரு....
Subscribe to:
Posts (Atom)























