Showing posts with label பாலசந்தர். Show all posts
Showing posts with label பாலசந்தர். Show all posts

Thursday, July 2, 2009

பாலசந்தர் பாராட்டு... சமுத்திரக்கனி சந்தோஷம்!


வாத்தியாரே முதுகில் தட்டி “வெரிகுட்”னு சொல்றதுதான் மாணவனுக்கு அழகு! அந்த வெரிகுட் பாராட்டை பல வருஷம் கழிச்சு வாங்கியிருக்காரு சமுத்திரக்கனி. நாடோடிகள் படத்தை தனது குருநாதர் பாலசந்தருக்கு போட்டு காட்டினாராம். படத்தின் இடைவேளையின் போது சமுத்திரக்கனி கையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட பாலசந்தர், வார்த்தைகள் வாரமல் தவித்துப் போனாராம். படம் முடிந்து வெளியே செல்லும்போது தன் மாணவனின் கையை பிடித்துக் கொண்டு காருக்குள் இழுத்துச் சென்றவர், மிகவும் நெகிழ்ச்சியோடு சொன்னாராம் இப்படி. “எங்கே... உன்னோட திறமையெல்லாம் வெளியே தெரியாமலே போயிடுமோன்னு பயந்திட்டு இருந்தேன். இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்” என்றாராம்.

இதைவிட வேறென்ன பாராட்டுகள் வேணும்? சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் தவிக்கிறார் சமுத்திரக்கனி. சற்றே நீளமான படம் என்பதால் பட பிரதிகளோடு ஒரு கடிதத்தையும் வைத்து அனுப்பினாராம் தியேட்டர் ஆபரேட்டர்களுக்கு. இரண்டாம் பகுதி மட்டும் இரண்டரை மணி நேரம் இருந்தது. அதை மெல்ல மெல்ல அதே நேரத்தில் மிக கவனமாக குறைத்திருக்கிறேன். உங்கள் பங்குக்கு குறைக்கிறேன் என்று நீங்களும் கையை வைத்துவிடாதீர்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாராம்.

சமுத்திரக்கனியின் கடிதத்திற்கு அப்படியே மதிப்பளித்திருக்கிறார்கள் ஆபரேட்டர்களும். ஆனால், படம் போகிற வேகத்தில் இந்த நீளம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்கிறது ரசிகர்கள் வட்டாரம்!