Showing posts with label சமுத்திரக்கனி. Show all posts
Showing posts with label சமுத்திரக்கனி. Show all posts

Thursday, July 2, 2009

நகரத்துக்கு திரும்பும் சசிகுமார்


தமிழ் சினிமாவின் லகான் இப்போது சசிகுமார் கையில். அடுத்து எந்த ஹீரோவின் படம் ‌ ரிலீஸாகிறது என்று எதிர்பார்த்திருந்த காலம் போய், எந்த இயக்குன‌ரின் படம் வெளியாகிறது என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்கும் காலம் வந்திருக்கிறது. சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் என சசிகுமா‌ரின் பங்களிப்பில் வந்த படங்கள் உருவாக்கிய மாற்றம் இது.

இயக்குனர், தயா‌ரிப்பாளர், நடிகர் என காலடி பதித்த மூன்று துறைகளிலும் சசிகுமாருக்கு வெற்றி. அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதே இப்போதைய கேள்வி.

ஏற்கனவே கூறியது போல் முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்தை எடுக்கயிருக்கிறார் சசிகுமார். படத்தை இந்திப்பட நிறுவனம் தயா‌ரிக்கிறது. சசிகுமார் பங்களிப்பு செலுத்திய மூன்று படங்களுமே கிராமத்துப் பின்னணியில் தயாரானவை. இந்த புதிய படம் நகரத்து பின்னணியில் தயாராகவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். ஹீரோக்களை நம்பாமல் ஸ்கி‌ரிப்டை நம்பும் இந்த இயக்குனர்கள, தமிழ் சினிமாவில் புது வெளிச்சம் பாய்ச்சுவதை யாரும் மறுப்பதற்கில்லை.

பாலசந்தர் பாராட்டு... சமுத்திரக்கனி சந்தோஷம்!


வாத்தியாரே முதுகில் தட்டி “வெரிகுட்”னு சொல்றதுதான் மாணவனுக்கு அழகு! அந்த வெரிகுட் பாராட்டை பல வருஷம் கழிச்சு வாங்கியிருக்காரு சமுத்திரக்கனி. நாடோடிகள் படத்தை தனது குருநாதர் பாலசந்தருக்கு போட்டு காட்டினாராம். படத்தின் இடைவேளையின் போது சமுத்திரக்கனி கையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட பாலசந்தர், வார்த்தைகள் வாரமல் தவித்துப் போனாராம். படம் முடிந்து வெளியே செல்லும்போது தன் மாணவனின் கையை பிடித்துக் கொண்டு காருக்குள் இழுத்துச் சென்றவர், மிகவும் நெகிழ்ச்சியோடு சொன்னாராம் இப்படி. “எங்கே... உன்னோட திறமையெல்லாம் வெளியே தெரியாமலே போயிடுமோன்னு பயந்திட்டு இருந்தேன். இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்” என்றாராம்.

இதைவிட வேறென்ன பாராட்டுகள் வேணும்? சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் தவிக்கிறார் சமுத்திரக்கனி. சற்றே நீளமான படம் என்பதால் பட பிரதிகளோடு ஒரு கடிதத்தையும் வைத்து அனுப்பினாராம் தியேட்டர் ஆபரேட்டர்களுக்கு. இரண்டாம் பகுதி மட்டும் இரண்டரை மணி நேரம் இருந்தது. அதை மெல்ல மெல்ல அதே நேரத்தில் மிக கவனமாக குறைத்திருக்கிறேன். உங்கள் பங்குக்கு குறைக்கிறேன் என்று நீங்களும் கையை வைத்துவிடாதீர்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாராம்.

சமுத்திரக்கனியின் கடிதத்திற்கு அப்படியே மதிப்பளித்திருக்கிறார்கள் ஆபரேட்டர்களும். ஆனால், படம் போகிற வேகத்தில் இந்த நீளம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்கிறது ரசிகர்கள் வட்டாரம்!

Monday, June 22, 2009

ஜூன் 26 முதல் 'நாடோடிகள்'!

சுப்பிரமணியபுரம் புகழ் சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள நாடோடிகள் வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

சசிகுமார் நடித்தது ஒரே படம்தான். அது சுப்பிரமணியபுரம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரும் அவரே.

இந்தப் படத்தில் அவரது இயல்பான முரட்டு சுபாவ நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அடுத்து உடனடியாக ஒரு படத்தை அவர் இயக்கவில்லை. மாறாக சுப்ரமணியபுரத்தில் தனக்காக நடித்துக் கொடுத்த, தனது நண்பர் சமுத்திரக்கனி கேட்டுக் கொண்டதற்காக நாயகனாக நடித்துக் கொடுத்துள்ள படம் நாடோடிகள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து சென்சார் அதிகாரிகளுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமாரை பெரிதும் பாராட்டியுள்ளனர்.

மிகச் சிறப்பான படம் ஒன்றை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததாகவும், வித்தியாச அணுகுமுறையில் சமுத்திரக்கனி படமெடுத்திருப்பதாகவும் பாராட்டிய தணிக்கைக் குழுவினர், இந்தப் படத்துக்கு எந்த ஆட்சேபணையும் சொல்லாமல் க்ளீன் யு சான்றிதழ் தந்துள்ளனர்.

'படம் உலகம் முழுக்க வரும் ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது', என்கிறார் படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில்.