Monday, October 21, 2013

அட்ரா சக்க… அட்ரா சக்க… கவுண்டரும் வந்துட்டாருல்ல?

'காமெடி கிங் ரிட்டர்ன்ஸ்'- வாய்மை படத்தின் கவுண்டமணி!






தமிழ் சினிமா உள்ள வரைக்கும் மறக்க முடியாத நகைச்சுவையைத் தந்தவர்கள் வரிசையில் முக்கிய இடம், இந்தத் தலைமுறையிலும் முதலிடம் யாருக்கு என்றால்... சந்தேகமில்லாமல் அது கவுண்டமணிக்குத்தான்.
சினிமாவில் நடிக்காமல் கொஞ்ச காலம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவர், இன்று சினிமாவில் நிலவும் நகைச்சுவைப் பஞ்சத்தையும் கேவலமான காமெடிக் காட்சிகளையும் பார்த்ததாலோ என்னமோ.. மீண்டும் முழு வீச்சில் நடிக்கக் களமிறங்கிவிட்டார்.
கிங் ஆஃப் காமெடி கவுண்டர் ரிட்டர்ன்ஸ்!
இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் கவுண்டர். அதில் ஒருபடம் வாய்மை. இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் சாந்தனு பாக்யராஜ், ராம்கி, ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டாக்டர் பென்னி! 
பென்னி என்ற பாத்திரத்தில் மருத்துவ நிபுணராகத் தோன்றுகிறார் கவுண்டமணி. சமூக சீர்கேடுகளை நகைச்சுவையாக சாடும் பாத்திரம் அவருடையது. அவரது காமெடியின் சிறப்பே அதுதானே. அதை இந்தப் படத்திலும் தொடர்கிறார். படத்தை வசந்தபாலனிடம் இணை இயக்குநராக இருந்த செந்தில்குமார் என்பவர் இயக்குகிறார்.
கவுண்டருக்கு நிகரேது... 
நேற்று வெளியான புகைப்படங்களில் கவுண்டமணி கோட் சூட் அணிந்து தனக்கேயுரிய மேனரிசங்களோடு காட்சி தருகிறார். அதில் ஒரு படத்தில், 'இப்ப வர்றதுக்குப் பேரு காமெடியாய்யா... ராமா ராமா' என்பது போல போஸ் கொடுத்திருப்பார்.
மீண்டும் தியாகராஜன்!
 இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தியாகராஜன். மகனுக்காக நடிப்பதை நிறுத்திக் கொண்டவர், இடையிடையே சிறு வேடங்களில் மட்டும் வந்தவர், இந்தப் படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
ஆரோக்கியமான காமெடி இன்னிங்ஸ்! 
வடிவேலுவின் தெனாலிராமன் ஸ்டில்கள் வெளியான அடுத்த நிமிடமே கவுண்டரின் வாய்மை பட புதிய ஸ்டில்களும் நேற்று மாலை வெளியாகின. இந்த ஸ்டில்களைப் பார்த்தபோதே, மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான காமெடி இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டதற்கான கொண்டாட்ட மனநிலையில்தான் பலரும் இருந்தனர்.

வந்துட்டேன்யா… வந்துட்டேன்யா…

இந்தா கெளம்பிட்டார்ல… : சந்தானத்துக்கு ஆப்பு வைக்க வரும் வடிவேலு!





காமெடி நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை கேள்விப்பட்ட பல டைரக்டர்கள் சந்தானத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் கடந்த 2 வருடங்களாக ஸ்டேடியாக இருந்த சந்தானத்தின் சிங்கிள் ஷேர் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வரும் வடிவேலு தற்போது மிகவும் ஃசைலண்ட்டாக நடித்து வரும் படம் தான் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’.
சுமார் 3 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வரும் இந்தப்படத்தை யுவராஜ டைரக்ட் செய்து வருகிறார். முன்னதாக வடிவேலுஇம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் 2-ஆம் பாகத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப்படத்தின் டைரக்டர் சிம்புதேவனுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அந்தப்படம் அப்படியே நின்று விட்டது.
இந்நிலையில் தான் வடிவேலு ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். போட்டா போட்டி படத்தை டைரக்ட் செய்த யுவராஜ் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.
இந்தப்படத்தில் வடிவேலு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமனக்குட்டன், சினேகா உல்லால் என பல ஹீரோயின்களையும் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால் வடிவேலு ஹீரோ என்பதால் யாருமே நடிக்க முன்வரவில்லை.
இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் என்ற தெலுங்கு படங்களில் குத்தாட்டம் போட்டவர் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் விஜயகாந்த்தின் விருதகிரி படத்தில் நடித்தவர் என்பது இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.
இதற்கிடையே வடிவேலுவின் வரவால் சிங்கிள் காமெடியனாக தமிழ்சினிமாவில் கோலோச்சி வரும் சந்தானத்தின் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
தெனாலிராமன் படத்தில் வடிவேலு மீண்டும் நடிப்பதை கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரை நேரில் சந்தித்து மீண்டும் தங்களது படங்களில் காமெடியனாக நடிக்கக் கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்களாம்.
இன்னும் சில டைரக்டர்களோ தெனாலிராமன் படம் ரிலீசானவுடன் வடிவேலுவை தங்கள் படங்களின் காமெடிக்காக கமிட் பண்ண முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால் சமீபகாலமாக சந்தானத்தை தேடிப்போகும் பட சான்ஸ்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.